Saturday, April 1, 2023

22. வருமுன் காத்துக்கொள்ளுதல்

22- வருமுன் காத்து கொள்




ஒரு சிறிய குளத்தில்  மூன்று மீன்கள் நண்பர்களாக வாழ்ந்துவந்தன.

 முதல்  மீன் துன்பம் வருமுன் தப்பித்துக்கொள்ள விரும்பும்.

இரண்டாவது மீன் துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக்கொள்ள வழி தேடும்.

மூன்றாவது மீன் தனக்கு துன்பம்வந்தால் அதை ஏற்றுக்கொள்ளும்.

ஒரு நாள்  மீனவர்கள்  இருவர் குளக்கரைக்கு வந்தனர்.குளத்தில் தண்ணீர் குறைவாக இருப்பதால் நாளை வந்து மீன் பிடித்துக்கொண்டு செல்லலாம் என்று பேசிக்கொண்டனர்.

இதைக்கேட்ட முதல் மீன் தன் நண்பர்கள் இருவரிடமும்  எச்சரிக்கை செய்தது.அவர்கள் இருவரும் முதல் மீன் சொல்வதை கேட்கவில்லை.

அதனால் முதல் மீன் ஒரு வாய்க்காலின் வழியே வெளியேறி வேறு இடத்துக்கு சென்று விட்டது.

இரண்டாவது மீனும்,மூன்றாவது மீனும் குளத்திலே இருந்தன.

அடுத்த நாள் இரண்டு மீனவர்களும் வந்து மீன்களை பிடித்துக்கொண்டனர்.மீன் வலையில்  இரண்டாவது மீனும் ,மூன்றாவது மீனும் மாட்டிக்கொண்டன.

இரண்டாவது மீன் மீனவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக இறந்தவன் போல் நடித்தது. இறந்த மீன் நமக்கு எதற்கு என்று  மீனவர்கள் அதை  மீண்டும் குளத்தில் விட்டனர்.அது தப்பித்து சென்று விட்டது.

மூன்றாவது மீன் செய்வதறியாது வலைக்குள்ளே மாட்டிக்கொண்டது.

நமக்கு வரப்போகும் துயரை முன்னமே அறிந்து அதிலிருந்து விடுபடும் வழியை  முதலிலேயே மேற்கொள்ளவேண்டும். 

No comments: