Thursday, October 30, 2014

133. அறிவுரை வழங்கும் தகுதி (நீதிக்கதை)




கடற்கரை ஓரம் நண்டு ஒன்று வசித்து வந்தது.அது தனது மகனான குட்டி நண்டை நடக்கச் சொல்லி அழகுப் பார்த்தது

ஆனால் ...குட்டி நண்டோ...நேராக நடக்க முடியாமல் தனது இடது பக்கவாட்டிலேயே நடந்தது.அதனைப் பார்த்த தாய் நண்டு ' மகனே...பக்கவாட்டில் நடக்கக்கூடாது.நேராக நடக்கவேண்டும்' என்று அறிவுரை கூறியது.

உடனே குட்டி நண்டு...' அம்மா..எவ்வளவு முயன்றும் என்னால் நேராக நடக்க முடியவில்லை.நேராக எப்படி நடப்பது என எனக்கு சொல்லிக்கொடு ' என்றது.

தாய் நண்டும்...அப்படி நடக்கப் பார்த்தது..ஆனால் அதனால் நேராக நடக்க முடியவில்லை.பக்கவாட்டிலேயே நடந்தது.
அப்போதுதான் அதற்கு....நண்டினமான தங்களால் நேராக நடக்க முடியாது என உணர்ந்தது.அது தெரியாமல் தன் மகனுக்கு அறிவுரை கூறினோமே என நாணியது.

நாமும் பிறர்க்கு ஏதேனும் அறிவுரை வழங்குமுன், நாம் அப்படி நடந்து கொண்டோமா என யோசிக்க வேண்டும்.

அறிவுரை வழங்குமுன் அதற்கேற்றார் போல நம்மை திருத்திக் கொள்ள வேண்டும்.

Monday, October 27, 2014

133.ஆபத்தில் உதவ வேண்டும் (நீதிக்கதை)



சரவணனும் முருகனும் நண்பர்கள்.இருவரும் ஒரு நாள் அடுத்த ஊருக்கு பிரயாணம் செய்தனர்.

போகும் வழியில் அவர்கள் ஒரு காட்டைக் கடக்க வேண்டியிருந்தது.காட்டில் கொஞ்சதூரம் போனதும் ஒரு பெரிய கரடி அவர்களுக்கு முன்னால் வருவதைக்கண்டனர்.

கரடியைக் கண்டதும் சரவணன் உடனே ஒரு மரத்தில் ஏறிக்கொண்டான்.முருகனுக்கு மரத்தில் ஏறத்தெரியாது.மரத்தின் மீது ஏறிய சரவணனின் உதவியும் கிடைக்கவில்லை.

தன்னாலும் தனித்து கரடியை எதிர்க்கமுடியாது.என்ன செய்வது என யோசித்தவன்,உடனே மூச்சை அடக்கிகொண்டு இறந்தவன் போலக்கிடந்தான்.

கரடி அவனிடம் வந்து பார்த்து ...இறந்த உடல் நினைத்து அப்பால் போய்விட்டது.

கரடி போனதும்,மரத்திலிருந்து இறங்கிய சரவணன் முருகனிடம் 'கரடி உன்னிடம் என்ன சொல்லிற்று ' என்று கேட்டான்
முருகன் சொன்னான்,கரடி என்னிடம் வந்து ' ஆபத்தில் உதவாத நண்பனை நம்பாதே ' என்றது என்றான்.

நாமும் சரவணனைப் போல இல்லாமல் ,,,அடுத்தவர்க்கு ஆபத்து.ஏற்பாட்டால் அவர்களைவிட்டு விலகாமல் நம்மால் முடிந்த உதவியைச் செய்யவேண்டும்.

Wednesday, October 22, 2014

132. நல்ல நண்பன் வேண்டும் (நீதிக்கதை)



ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவன் இருந்தான்.அவன் வயல்களில் பயிரிட்டிருந்த தானியங்களை பறவைகள் வந்து நாசம் செய்து கொண்டிருந்தன.அதனால் அவற்றைப் பிடிக்க வலையைக் கட்டியிருந்தான் அவன்.

அன்று மாலை,அந்த வலையில் பல பறவைகளுடன் ஒரு கொக்கும் மாட்டிக்கொண்டது.

விவசாயி வந்து பறவைகளைப் பிடித்தான். மாட்டிக்கொண்ட கொக்கு விவசாயியைப் பார்த்து ' ஐயா நீங்கள் பறவைகளைப் பிடிக்கத்தானே வலையைப் போட்டீர்கள்.நான் பறவை அல்ல ...அதனால் என்னை விடுவிக்கவேண்டும்' என்று கேட்டது.

அதற்கு விவசாயி ..." நீ சொல்வது உண்மை. ஆனால் நீ கெட்டவர்களுடன் அகப்பட்டாய்.கெட்டவர்கள் நட்பு உனக்கு இருப்பதால்..அவற்றுடன் சேர்ந்து நீயும் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றான்.

நாமும்....கெட்டவர்கள் நட்பை விட்டொழிக்க வேண்டும்.இல்லையேல் என்றேனும் ஒரு நாள் அவர்களுடன் சேர்ந்து நமக்கும் தண்டனை கிடைக்கும்.

" நல்ல நண்பனையே தேர்ந்தெடுங்கள்"