Sunday, April 16, 2023

30. முட்டாளாக்கிய முட்டாள்




 ஒரு ஊரில் சங்கரன் என்ற அப்பாவி ஒருவன் இருந்தான்.அவனது செயல்கள் எல்லாம் வினோதமாகவே இருக்கும்.அவனை எல்லோரும் முட்டாள் என்றே கூப்பிடுவர்.

அவன் ஒரு வீட்டில் தோட்டவேலைகளை செய்துகொண்டு அந்த வீட்டம்மா கொடுக்கும் உணவை சாப்பிட்டுக்கொண்டு பொழுதை கழித்து வந்தான்.அந்த ஊரில் உள்ள மற்றவர்கள் அவனிடம் வேலை வாங்குவர்.ஆனால் சரியான ஊதியம் கொடுப்பதில்லை.

ஒரு நாள் அவன் வேலை செய்யும் வீட்டிற்கு ஒரு விருந்தினர் வந்தார்.அந்த வீட்டுக்காரர் விருந்தினரிடம் சங்கரை காண்பித்து 'இவன் ஒரு முட்டாள்இவனிடம் எந்த வேலையையும் இலவசமாக வாங்கலாம்.வேண்டுமென்றால் சோதித்து பாருங்கள்' என்றார்.

உடனே விருந்தினர் அவருடைய ஒரு கையில் ஒரு ரூபாயும் மற்றொரு கையில் 5 ரூபாயும் வைத்திருந்து அவனிடம் "உனக்கு எது வேண்டும்?" என்று கேட்டார்.அவன் ஒரு ரூபாய் வைத்திருந்த கையை தேர்ந்தெடுத்தான்.விருந்தினர் அவனை தனியே அழைத்து," ஏன் அப்படி செய்கிறாய் ?"என்று கேட்டார்.

அதற்கு அவன் ,"ஒரு ரூபாயை எடுத்தால் எல்லோரும் நான் முட்டாள் என்று நினைத்து மீண்டும் மீண்டும் எனக்கு பணம் கொடுப்பார்கள்.இவ்வாறு நான் ஒரு நாளைக்கு ரூபாய் 5 முதல் 10 வரை சம்பாதிப்பேன் .ஆனால் நான் 5 ரூபாயை எடுத்தால் அதற்கு பிறகு யாரும் பணம் கொடுக்கமாட்டார்கள்."என்றான்

அவன் மேலும்  .’ நான் முட்டாளில்லைஎன்னை முட்டாளாக நினைத்து கொடுப்பவர்கள் தான் முட்டாள்கள்" என்றான்.