Monday, April 3, 2023

23.தன்னம்பிக்கை

     23 - தன்னம்பிக்கை


ஒரு ஊரில் ராமன்,லட்சுமணன் என்ற இரு சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். ராமனுக்கு 10 வயது லட்சுமணனுக்கு 8 வயது.இருவரும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருந்தனர்.எங்கு சென்றாலும் ஒற்றுமையாகவே சென்றனர்.படிப்பிலும் அவர்கள் புத்திசாலிகள்.

விடுமுறை அன்று ஒருநாள் அவர்கள் இருவரும் விளையாட வீட்டின் பின்புறம்  சென்றனர்.அவர்கள் அப்படி விளையாடிக்கொண்டிருக்கும் போது அவர்களையும் அறியாமல் வெகுதூரம் சென்றுவிட்டனர்.அங்கு ஒரு பாழடைந்த   கிணறு இருந்தது.அதில் பெரியவன் ராமன்  தவறி விழுந்து விட்டான்.சிறியவனான லட்சுமணன் செய்வதறியாது அழுது அங்குமிங்கும் ஓடினான்.யாருமின்றி அந்தப் பகுதி வெறிச்சோடி இருந்தது.

அப்பொழுது லட்சுமணன் கண்ணில் ஒரு வாளியும் அதனுடன் இணைந்த கயிறும் கண்ணில் தென்பட்டது.உடனே அதை அவன் எடுத்து கிணற்றில் போட்டு அண்ணனை வாளியை கெட்டியாக பிடித்துக் கொள்ளச் சொன்னான்.ராமனும் கயிற்றை பிடித்துக் கொள்ள லட்சுமணன் தன்பலத்தையெல்லாம் உபயோகித்து ராமனை  மேலே  இழுத்தான். ராமனும் மேலே வந்துவிட்டான்.லட்சுமணனுக்கு அவனாலேயே அவனது செயலை நம்பமுடியவில்லை.

லட்சுமணன் தன்னம்பிக்கையோடு தன்னால் முடியுமென்று நினைத்து இந்த காரியத்தை செய்தான்.

நாமும் ஒரு செயலில்  ஈடுபடுமுன் அச்செயலை நம்மால் செய்து முடிக்கமுடியும் என்ற நம்பிக்கையோடு செய்தால் வெற்றி நிச்சயம்.

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

நம்பிக்கை குறித்த சிறுகதை மிகவும் நன்று. பாராட்டுகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...