Thursday, August 30, 2012

111. " பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் " (நீதிக்கதை)




முருகன் ஒரு கடவுள் பக்தன்.
தமக்கு என்ன வேண்டுமானாலும் அந்த இறைவனை வேண்டினால் போதும் என எண்ணுபவன்.

பல நாட்களாய் அவன் கடவுளை தன் வீட்டிற்கு விருந்து உண்ண வரும்படி வேண்டிக்கொண்டிருந்தான்.

ஒரு நாள் கடவுள் அவன் முன் தோன்றி அன்று இரவு விருந்துண்ண அவன் வீட்டிற்கு வருவதாகக் கூறினார்.

முருகனும் தடபுடலாய் விருந்து ஏற்பாடு செய்தான்.

அவன் இறைவனுக்காக காத்திருக்கையில்....ஒரு வயதான பிச்சைக்காரர்..' ஐயா பசிக்குது. உணவு கொடுங்கள் ' என்று கேட்டார்.

' கடவுள் என் வீட்டிற்கு வரும் நேரம்...நீ இங்கே இருக்காதே..போ..போ..' என பிச்சைக்காரரை விரட்டினான் முருகன்.

ஆனால் இரவு கடவுள் விருந்துண்ண முருகன் வீட்டிற்கு வரவில்லை.

அடுத்த நாள் முருகன் ...இறைவனிடம் " நேற்று ஏன் வரவில்லை" என வினவினான்.

இறைவனும் ...' நான் சொன்னபடி நேற்று வந்தேன்..பிச்கைக்காரர் உருவில்....நீ தான் விரட்டி விட்டாய்' என்றார்.

பின் ..மனிதர்களுக்கு நீ செய்யும் தொண்டே எனக்கு செய்யும் தொண்டு என்று உணர்ந்து கொள் என்றார் கடவுள்.

அன்று முதல் முருகனும் தன்னால் இயன்றவரை ஏழை மக்களுக்கு உதவி வந்தான்.