Monday, May 29, 2023

42. நண்பனை ஆராய்ந்து தேர்ந்தெடு

 42 - நண்பனை ஆராய்ந்து தேர்ந்தெடு


திண்டுக்கல் பக்கத்தில் ஒரு கிராமத்தில் விவசாய தோட்டங்கள் இருந்தன..அதில் வேலாயுதம் என்ற விவசாயி க்கு சொந்தமான  இரண்டு தோட்டங்கள் உள்ளன.வேலாயுதம் தினமும் வந்து தோட்ட்த்திற்கு தண்ணீர்  விட்டு குப்பைகளையெல்லாம் அகற்றிவிட்டு செல்வ்து வழக்கம்.

அந்த தோட்டத்திற்கு ஒரு மானும்,ஒரு காகமும் வேலாயுதம் இல்லாத பொழுது வந்து மான் புற்களையும்,காகம் பழங்கள்,கொட்டைகள் முதலியவைகளை உண்டுவிட்டு செல்வது வழக்கம்.

மானும், காகமும் சிறந்த நண்பர்களாக இருந்தனர்.இரவில் அவர்கள் ஒரு மரத்தடியில்  மானும் ,மரத்தின் கிளையில் காகமும் வசிப்பது  வழக்கம்.

அந்த தோட்டத்தில் ஒரு நரி அவ்வப்போது வருவது வழக்கம்.மானும் காகமும் சிறந்த நண்பர்களாக இருப்பது நரிக்கு பிடிக்கவில்லை.எப்படியாவது அவர்களை பிரிக்கவேண்டும் என்று நினைத்தது.

ஒரு நாள் மானிடம் நரி ,"நண்பா அடுத்த தோட்டத்தில் நிறைய பச்சைபசேலென்று புல்வெளிகள் நிறைய உள்ளன.நீ என்னுடன் வந்தால் அதை நீ உண்டு மகிழலாம் "என ஆசைக்காட்டியது.

மானும்  வருவதாக கூறியது.மரத்தின் மேலிருந்த காகம் அதைக்கேட்டு மானிடம் நண்பா’ முன் பின் தெரியாதவர்களிடம் நாம் நட்புடன் பழகக்கூடாது.நீ நரியுடன் செல்ல வேண்டாம்" என்றது.

மான் கேட்கவில்லை.அடுத்த நாள் மான் நரியுடன் சென்றது.

மானுக்கு அந்த புல்வெளியை பார்த்ததும் மிகவும்மகிழ்ச்சி.துள்ளி துள்ளி  குதித்து ஓடியது.வேண்டிய அளவு புற்களை  சாப்பிட்டது.இதை தூரத்திலிருந்து பார்த்த வேலாயுதம்." இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும்,நாளைக்கு மான் வரட்டும் பிடித்து விடுகிறேன் "என்று மனதில் சொல்லிக்கொண்டு இரவு ஒரு வலையை மான் வரும் டத்தில்  போட்டான்.

அடுத்த நாள் மான் வந்தபோது வலைக்குள் சிக்கிக்கொண்டது. நரியிடம், "என்னை காப்பாத்து" என்று கூற நரியோ 'நான் இன்று விரதம் எதையும் கடிக்கமாட்டேன்" என்று கூறி தப்பியது.

நரியிம் எண்ணம் மானை இரவு அடித்து சாப்பிடலாம் என்பதே.

அப்பொழுது காகம் நண்பனை தேடிக்கொண்டுவர, மான் வலையில் மாட்டிக்கொண்டு இருப்பதை பார்த்து "நான் சொல்வதை நீ கேட்கவில்லை,இப்பொழுது மாட்டிக்கொண்டாய்.சரி இப்பொழுது நான் சொல்வதைக்கேள் ..அந்த விவசாயி தூரத்தில்  வந்துகொண்டிருக்கிறான்.நீ இறந்தது போல் நடி.நான் உன்னை மெதுவாக கொத்திக்கொண்டிருக்கிறேன்.விவசாயி நீ இறந்து விட்டாய் என்று நினைத்து வலையை எடுத்துக்கொண்டு போய்விடுவான்.நாமும் தப்பிக்கலாம்" என்றது.

 அது போல் மானும் இறந்தது போல் மூச்சை அடக்க வேலாயுதம் மான் இறந்து விட்டது என்று நினைத்து வலையை எடுத்து விட்டான்.இரண்டும் தப்பி ஓடின.

இதை பார்த்த அவன் தன் கையில் இருந்த கம்பால் மானை நோக்கி வீசினான்.கம்பு தவறி புதருக்குள் இருந்த நரியின் தலையின் மேல் பட்டு அது இறந்தது.

நட்பை தேர்ந்தெடுக்கும் முன்பு ஆராய்ந்து பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று காகம் கூறியபடியே மானுடன் சென்றது.

Monday, May 1, 2023

41. பிறன் பொருள் விரும்பாதே


41- பிறன் பொருள் விரும்பாதே



 வயலூர் என்ற ஊரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ராஜனும்,சிங்காரமும் ஆறாம் வகுப்பு படிக்கிறார்கள்.ராஜனுடைய அப்பா பக்கத்து ஊரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். ராஜனும் நன்றாகப் படிப்பான்.நல்ல பழக்க வழக்கங்கள் உள்ளவன்.எல்லோரிடமும் மரியாதையாக இருப்பான்.

அவனுக்கு நேர்மாறாக சிங்காரம் இருப்பான்.படிப்பில் ஆர்வம் கிடையாது.பள்ளிக்கும் சரியாக வருவதில்லை.

இருவரும் அடுத்தடுத்த வீட்டில் இருப்பதால் நன்றாகபேசிக்கொள்வார்கள்.சேர்ந்து விளையாடுவார்கள்.சிங்காரத்திற்கு ராஜன் தன்னை விட இரண்டு வயது சிறியவன் என்பதால் அவனிடம் மட்டும் அன்பாக நடந்து கொள்வான்.

ஒரு நாள் ராஜனுக்கு அவனுடைய அப்பா புஸ்தகம் வாங்குவதற்கு ஐம்பது ரூபாய் கொடுத்தார்.அதை எடுத்துக்கொண்டு வந்தவன் வழியில் சிங்காரத்தை பார்த்து "சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டபின் கடைக்கு போய் ஒரு புஸ்தகம் வாங்கவேண்டும்,நீயும் கூட வருகிறயா என்று கேட்டான்.

"வருகிறேன்" என்றான் சிங்காரம்.

ராஜன் பையில் ஐம்பது  ரூபாயை பார்த்த சிங்காரம் இடைவேளையின் போது அவனுடைய பையிலிருந்து அதை எடுத்து விட்டான். சாயங்கால்ம் இதை வைத்துக்கொண்டு சினிமாவுக்கு செல்லலாம் என்பது அவனது எண்ணம்.

இடைவேளை முடிந்து ராஜன் பையைப் பார்க்க அதில் ஐம்பதுரூபாய் இல்லை.

அவன் உடனே ஆசிரியரிடம் முறையிட்டான்.

ஆசிரியர் உடனே  “மாணவர்களே எல்லோரும் நான் உட்பட கண்ணை இரண்டு நிமிடம் மூடியிருப்போம்.திருடியவன் யாராக இருந்தாலும் மெதுவாக வந்து ராஜன் பையில் பணத்தை வைத்து விடுங்கள். இதனால் யார் எடுத்தார் என்று யாருக்கும் தெரியாது,எடுத்தவனும் திருந்தி விடலாம்"என்றார்.

அனைவரும் கண்களை மூடிக் கொண்டனர்

இரண்டு நிமிடம் கழித்து எல்லோரும் கண் திறந்துபார்த்தபோது, ராஜன் பையில் பணம் இருந்தது.

"யார் வைத்தார்கள்" என்று தெரியவில்லை.

மாலை பள்ளி விட்டபின் ஆசிரியர் தனியாக அமர்ந்திருக்க சிங்காரம் வந்தான்."சார், நான் தான் பணத்தை எடுத்தேன்ஆனால் பணத்தை திருப்பி வைக்கவில்லை.மனசு உறுத்தலாக இருக்க உங்களிடம் உண்மையை சொல்லி மன்னிப்பு கேட்டு பணத்தை கொடுத்து  விட  வந்தேன் "என்றான்.

அதைக்கேட்டு ஆசிரியர் எ"னக்கு தெரியும் இப்படி நடக்குமென்று.நான் தான் அந்த ஐம்பது ரூபாயை வைத்தேன்.எடுத்தவன் எப்படியும் திருந்தி என்னிடம் வருவான் என்ற நம்பிக்கையில் இதை செய்தேன் "என்றார்.

"மேலும் நீயும் திருந்திவிட்டாய் எனக்கும் மிகவும் மகிழ்ச்சி.இனிமேல் நீயும்  பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் ராஜனைப்போல நன்றாகப்படித்து சிறந்த மாணவனாக வ்ரவேண்டும்" என்றார். 

சிங்காரமும் தவறை உண்ர்ந்து அன்று முதல் நன்றாக படித்து நல்ல மாணவனான்.