மோகன் படிக்கும் பள்ளியில் அவனுடைய நண்பனான கந்தனின் பிறந்த நாளுக்கு கந்தனின் தந்தை மாணவர்களுக்கு கொடுப்பதற்காக ஒரு கூடையில் நிறைய ஆப்பிள் பழங்களைக் கொண்டு வந்தார்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழம் கொடுத்துக் கொண்டிருந்தார்.
கடைசியில் நின்று கொண்டிருந்த மோகனிடமும் அப்படியே ஒரு பழத்தைக் கொடுத்தார்..
கூடையில் மீதம் இரண்டு பழங்கள் இருப்பதைக் கண்ட மோகன் ..மேலும் கையை நீட்டினான்.
அவரும் இன்னொரு பழத்தை எடுத்து அவனிடம் தந்தார்.இன்னொரு கையில் அதை வாங்கினான் அவன்..அப்போதும் மோகனுக்கு திருப்தி ஏற்படவில்லை.
இரண்டு பழங்களையும் நெஞ்சில் அணைத்துக் கொண்டு ...அவன் மீண்டும் கையை நீட்டினான்.
அவர் கடைசியாக இருந்த பழத்தையும் அவனிடம் கொடுத்தார்.
அப்போது அவன் அணைத்திருந்த பழம் ஒன்று நழுவி தரையில் விழுந்தது. அதை எடுக்க குனிந்தான்.அப்போது மற்ற இரண்டு பழங்களும் கீழிருந்து உருண்டு ஓடி அருகில் இருந்த சாக்கடையில் விழுந்தன.
மோகன் கிடைத்த ஆப்பிள் பழங்களை நழுவ விட்டோமே என்று வருந்தினான்.
அப்போது கந்தனின் தந்தை ...'தம்பி..நான் ஒரு ஆப்பிள் கொடுத்தேன்.மற்றவர்களைப்போல அதுவே போதும் என நீ நினைக்கவில்லை.ஆனால் மேலும் மேலும் ஆசைப்பட்டாய்...கடைசியில் மற்றவர்களுக்கு கிடைத்த ஒரு ஆப்பிள் கூட உனக்கு கிடைக்கவில்லை...இனிமேலும் ..அதிகம் ஆசைப்படாது கிடைத்தது போதும் என்று நினை...போதுமென்ற மனம் அனைவருக்கும் வேண்டும் என்றார்.
பின்னர் தனது கைப்பையிலிருந்த ஒரு ஆப்பிளை எடுத்து மோகனுக்கு கொடுத்தார். மோகன் வெட்கி தலை குனிந்தான்.