Sunday, May 12, 2013

124.பெற்றோரைப் பேண்.....(நீதிக்கதை)





முன்னொருகாலத்தில் புண்டரிகன் என்று ஒருவன் இருந்தான்.

அவன் இறைவனை வேண்டுவதைவிட தன்னெய்பெற்ற தாய் தந்தையருக்கு பணிவிடை செய்வதையே பெறும் பேறாகச் செய்துக் கொண்டிருந்தான்.

அவனது செயல்களைக் கண்ட இறைவன் மனம் மகிழ்ந்து அவனுக்குக் காட்சியளித்தார்.

அந்த நேரம் அவன் தன் பெற்றொர்களை கவனித்துக் கொண்டிருந்தான். இறைவன், தான் வந்திருப்பதைச் சொல்லியும் அவன் மனம் மாறவில்லை.

" இறைவா...எனக்காக சற்றுப் பொறுங்கள்.பெற்றோர்களுக்கான என் கடமையை முடித்துவிட்டு உங்களைக் கவனிக்க வந்து விடுகிறேன்' என்றான்.

இறைவனும்....புண்டரிகன் மீது கோபம் கொள்ளாது...காத்திருந்து அவனைப் பார்த்துவிட்டு தன் நல்லாசிகளை வழங்கிச் சென்றார்.

ஒருவருக்கு இறைவன் வழிபாடு முக்கியம் ..அதைவிட முக்கியமானது....தன்னைப் பெற்றவர்களை பேணிக்காப்பது என்பதை நாம் உணரவேண்டும்.