Wednesday, April 18, 2012

110. நம்பிக்கை துரோகம் கூடாது (நீதிக்கதை)




பணக்காரன் ஒருவன் வெளியூருக்கு செல்ல வேண்டியிருந்தது.அதனால் தன் சொத்துக்களை பாதுகாக்க தன் நண்பன் மாணிக்கம் என்பவனை நம்பி ஒப்படைத்துவிட்டு சென்றான்.

பணக்காரனின் நிலங்களின் நடுவே ஒரு குளம் இருந்தது.அக்குளத்தில் பலவகையான மீன்கள் வளர்க்கப்பட்டன.

ஒரு நாள் ...மீனுக்கு ஆசைப்பட்ட மாணிக்கம்..வலைவீசி மீன்களைப் பிடித்தான்.அச்சமயம் ஊருக்கு சென்றிருந்த பணக்காரன் திரும்பி வந்தான்.

தன் சொத்துக்களை பாதுகாக்க வேண்டி அமர்த்தப்பட்ட தன் நண்பன் மாணிக்கம் குளத்தில் மீன்களைபிடிப்பதைக்கண்டு " மற்றவர்கள் தவறு செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய நீயே தவறு செய்கிறாயே?" என்று கேட்டுவிட்டு அவனை வேலையிலிருந்து நீக்கி விட்டார்.

மாணிக்கம் ..தன்னை நம்பிய பணக்காரனுக்கு துரோகம் செய்து விட்டதை எண்ணி பின்னர் வெட்கமடைந்தான்.

நாமும்...நம்மை நம்பி பிறர் ஒப்படைக்கும் காரியங்களை நம் காரியங்களைப்போல செய்யவேண்டும்.

நம்மை நம்பியவர்களை ஏமாற்றக்கூடாது.

Thursday, April 5, 2012

109. உள்ளதும் போய்விடும்...(நீதிக்கதை)




ஒரு கொக்கு ஒன்று நதிக்கரையில் நின்றபடியே...நீரில் மீன் வரும்போது கொத்தித்தின்ன காத்திருந்தது.

பல சிறிய மீன்கள் நதியில் கொக்கின் கண்ணில் பட்டாலும்....அது பேராசையுடன் பெரிய மீன் வருகைக்குக் காத்திருந்தது.

அப்போது பெரிய மீன் ஒன்று ஆற்றில் வர ...அதைக் கொத்தி விழுங்கியது கொக்கு...ஆனால் கொக்கின் தொண்டை சிறியதாய் இருந்ததாலும் ....மீன் பெரியதாய் இருந்ததாலும் மீன் கொக்கின் தொண்டையில் அகப்பட்டுக்கொண்டது.

மீனை துப்பவும் முடியாமல்......விழுங்கவும் முடியாமல் ...மூச்சுத் திணறிக் கொக்கு மயங்கி விழுந்தது,

அதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு கொக்கு ..' என்னைப் போல சின்ன மீன்கள் ஒன்றிரண்டை கொத்தி சாப்பிடாமல் பேராசையுடன் .....பெரிய மீனை விழுங்கின உனக்கு
இந்த தண்டனை தேவை தான்' என்றது.

நாமும்...நமக்கு கிடைக்கும் பொருளை வைத்து சந்தோஷம் அடைய வேண்டுமேயன்றி பெரும் பொருள் வேண்டி பேராசைப்பட்டால் உள்ளதும் போய்விடும்.