விக்னேஷ் தாய் தந்தையரருடன் சென்னயில் வசிக்கிறான்,அவன் தந்தை ஒரு கம்பனியில் வேலை பார்க்கிறார்.தாய் ஒரு துணிக்கடையில் வேலை பார்க்கிறார்.விக்னேஷ் அருகிலுள்ள அரசுப் பள்ளியில் 8 ம் வகுப்பு படிக்கிறான்.
விக்னேஷின் தாத்தா பாட்டி கும்பகோணத்தில் வசிக்கிறார்கள்.ஒவ்வொரு வருடமும் கோடைவிடுமுறையில் அவன் அப்பா அவனை கும்பகோணத்தில் விட்டுவிட்டு விடுமுறை முடிந்ததும் அவனை திரும்ப அழைத்துக்கொண்டு வருவார்.
இந்த முறையும் கோடைவிடுமுறையில் அவன் தந்தையோடு செல்வதாக இருந்தது,
அடுத்த நாள் அவனுடைய வகுப்பு ஆசிரியர் ஒவ்வொருவரிடமும் கோடைவிடுமுறையை எப்படி கழிப்பீர்கள் என்று கேட்டார்.விக்னேஷிடம் கேட்க அவன் என் தந்தையோடு கும்பகோணம் செல்வேன்,அங்கு என் தாத்தா பாட்டி இருக்கிறார்கள்.அங்கு பல கோவில்கள் உள்ளன.அவர்களுடன் அங்கு செல்வேன்,மேலும் என் தாத்தா வீடு மிகவு ம் பெரியது.தோட்டத்தில் மா,பலா,தென்னை போன்ற மரங்கள் உள்ளன.தாத்தாவுடன் தோட்டத்துக்கு சென்று சிறு சிறு வேலைகள் செய்வேன் என்றான்.
வகுப்பு முடிந்தவுடன் அவனுடைய நண்பர்கள் அவனை கிண்டல் செய்தனர், எதற்கு கிண்டல்செய்கிறார்கள் என்று அவனுக்கு புரியவில்லை.அவர்களிடம் கேட்க அவர்கள்'விக்னேஷ் நீ எட்டாவதிலிருந்து ஒன்பதாவது போகப்போகிறாய்.உனக்கு தனியாக போகத்தெரியாதா' shame,,,, shame என்றனர்.விக்னேஷ்க்கு மிகவும் அசிங்கமாக போய்விட்டது,
வீட்டிற்கு வந்ததும் விக்னேஷ் தன் தந்தையுடம் அப்பாநீங்கள் இந்த தடவை என்னுடன் கும்பகோணம் வரவேண்டாம்.நான் பெரியவனாகிவிட்டேன் தனியே போகிறேன் என்றான்.அவன் மிகவும் அடம் பிடித்ததால் தந்தையும் சரி என்று சொல்லிவிட்டார்.
கிளம்பும்முன் அவனுக்கு கொஞ்சம்படபடப்பாகத்தான் இருந்தது.அம்மா விபூதி இட்டுவிட்டு பயப்படாதே, தைரியமாகச்செல் என்றாள்.தந்தை அவனது சட்டை பாக்கெட்டில் ஒரு கவர் வைத்தார், ஒன்றும் சொல்லவில்லை.
வண்டி கிளம்பியது.இரண்டு மூன்று ஸ்டேஷன் வரும்வரை அவனுக்கு பயமில்லை,வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தான்,நாலாம் ஸ்டேஷனில் 4 குண்டர்கள் ஏறினார்கள்.அவர்கள் வாட்டசாட்டமாக இருந்தார்கள்.அவர்களை பார்த்தவுடன் அவனுக்கு கைகால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டது.என்ன செய்வது என்று புரியவில்லை.
உடனே அப்பா ஒரு கவர் கொடுத்தாரே பிரிக்கவில்லயே என்று எண்ணி அதை எடுத்து பிரித்து பார்த்தான். அதில் 'விக்னேஷ் பயப்படாதே நான் அடுத்த பெட்டியில் தான் இருக்கிறேன் என்று எழுதியிருந்தார்,
அவன் ஓடிப்போய் தந்தையை இறுக கட்டிக்கொண்டு எனக்கு பயமாக இருக்கிறது என்றான்.;தந்தை உடனே ' அச்சம் தவிர்'அநாவசியத்திர்கு பயப்படக்கூடாது.ஒருவர் உருவத்தைப்பார்த்து பயம் கூடாது,அவர்கள் நல்லவர்களாகதான் இருப்பார்கள் என்று கூறி அவனுடன் அவன் இருந்த பெட்டிக்கு சென்றார்,மூவரையும் பார்த்து இவன் உங்கள் மூவரையும் பார்த்து பயந்து என்னிடம் வந்துவிட்டான் என்றார்.
மூவரும் தம்பி பயப்படாதே, நாங்களும் உனது அப்பா போலத்தான்.எதைக்கண்டும் யாரைக்கண்டும் பயப்படக்கூடாது என்று சொல்லி அவனை அவர்கள் பக்கத்தில் உட்காரச்சொன்னார்கள்,
விக்னேஷ் மனதிற்குள் எதற்கும் பயப்படாமல் தைரியமாகத்தான் வரவேண்டும் என்றுகூறிக்கொண்டான்.