எப்பொழுதும் சேர்ந்தேத் திரியும் இரண்டு பறவைகள் மிகவும் நட்புடன் இருந்து வந்தன.
அந்தப் பறவைகளைப் பிடிப்பதற்காக வேடன் ஒருவன் தரையில் வலையை விரித்து தானியங்களை வலையின் மீதுத் தூவி இருந்தான்.
தானியங்களைக் கொத்த வந்த இரு பறவைகளும் வலையில் சிக்கின.
தூரத்திலிருந்து பறவைகள் சிக்கிவிட்டதைக் கண்ட வேடன்..அவற்றைப் பிடிக்க வந்தான்.
எப்போதும்..எங்கும்..ஒன்றாய்ச் சுற்றித் திரிந்த பறவைகள்,வேடன் வருவதைப் பார்த்து விட்டன.அவை வலையுடன் சேர்ந்து பறக்கத் தொடங்கின.வேடன் திடுக்கிட்டு அந்தப் பறவைகளின் பின்னாலேயே துரத்திச் சென்றான்.
வழியில் ஒருவர்,"ஆகாயத்தில் பறவைகளைப் பிடிக்க தரையில் ஓடிக்கொண்டு இருக்கிறாயே..அவை எப்படி சிக்கும்?" என்றார்.
"அந்தப் பறவைகள் இரண்டும் என் வலையில் சிக்கி வலையுடன் ஒற்றுமையாகப் பறந்து கொண்டிருக்கின்றன.அவற்றின் ஒற்றுமை அழிந்து ,எப்போது விவாதம் தோன்றுமோ அப்போது என் கையில் அவை சிக்கி விடும்" என்றான் வேடன்.
ஒரு சில வினாடிகள் கைழ்ந்ததும்..பறவைகள் ஒற்றுமை இழந்தன.
"இந்தப் பக்கம் போகலாம்"என்றது ஒரு பறவை
"இல்லை..இல்லை..அந்தப் பக்கம் போகலாம் "என்றது மற்றது.
இரு பறவைகளும் இதில் ஒன்றுபடாது..ஒரு பறவை இந்தப் பக்கம் இழுக்க..மற்றொன்று அந்தப் பக்கம் இழுக்க..இரண்டும் வலையோடு கீழே விழுந்தன.வேடன்..இரு பறவைகளையும் வலையுடன் சேர்ந்து எடுத்துக் கொண்டான்.
ஒற்றுமையை இழந்ததால்..பறவைகள் வேடனிடம் சிக்கின.
வேடனின் விடாமுயற்சியால் அவன் வெற்றி அடைந்தான்.
இக்கதையினால் அறியப்படும் இரு நீதிகள்..
நாமும் ஒற்றுமையாய் இருந்தால் யாராலும் நம்மை அழிக்க முடியாது.
அடுத்து...வேடனைப் போல விடாமுயற்சி செய்தால் விரும்பியதைப் பெறலாம்.
2 comments:
உண்மை...
நன்றி தனபாலன்
Post a Comment