Monday, January 4, 2021

55. புத்தியில்லாத செயல்....(நீதிக்கதை)

 


ஓரு தோட்டக்காரன், தினமும் தோட்டத்தில் உள்ள செடி கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வந்தான்.அவன் தண்ணீர் ஊற்றுவதை சில குரங்குகள் பாத்துக்கொண்டே விளையாடிக்கொண்டிருந்தன.

இது தினசரி வழக்கமானது.

பல வருடங்கள் அப்படியே நடந்ததால் ...தோட்டக்காரனும்., குரங்குகளும் நண்பர்கள் ஆயினர்.தோட்டக்காரன் செய்யும் காரியங்களுக்கு அவனுக்கு உதவி புரிந்தன.

ஒரு முறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்கு போகவேண்டியிருந்தது. குரங்குகளை அழைத்து விஷயத்தை சொன்னான்.பின் தான் திரும்பி வரும்வரை செடி,கொடிகளுக்கு தண்ணீர் விடும் பொறுப்பை அவர்களுக்கு தந்தான்.

ஆனால் அவற்றுக்கு ஒரு பிரச்சனை...எந்த செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.

'அது ஒன்றும் பிரச்சனை இல்லை.வேர் பெரிதாக இருந்தால் அதிக  தண்ணீரும், சிறிய வேராக இருந்தால் குறைவான தண்ணீரும் ஊற்றுங்கள்' என் சொல்லிவிட்டு ஊருக்கு கிளம்பினான்.

பின் ஊரிலிருந்து  அவன் திரும்பி வந்து தோட்டத்தைபார்த்தபோது.' அனைத்து செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன.'குரங்குகளிடம் ' என்ன ஆச்சு' என வினவினான்.

'வேர் பெரிசாக இருக்கா,சின்னதாக இருக்கா என்று பார்க்க செடிகளைப் பிடுங்கினோம்' என்றன அவை.

தோட்டக்காரனும் புத்தியில்லாதவகளிடம் பொறுப்பை கொடுப்பது புத்தியில்லாத செயல் என்று உணர்ந்தான்.