Saturday, January 2, 2021

50 - ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு

 



மாடசாமி என்பவன் தன் மனைவியுடன் ஒரு கிராமத்தில் வசித்து வந்தான்.பல வருடங்களாகியும் அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.


அந்த ஏக்கத்தைப் போக்க ஒரு கீரிப்பிள்ளையை வளர்த்து வந்தனர்.


சிறிது காலம் கழித்து அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தைப் பிறந்தது.குழந்தையைச் செல்லமாக வளர்த்து வந்தனர்.


ஒருநாள் மாடசாமி வேலைக்குக் கிளம்பியதும், அவன் மனைவி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்துவர குடத்துடன் புறப்பட்டாள்.கீரிப்பிள்ளை தன் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் என்ற எண்ணத்துடன்.


குழந்தையின் அருகிலேயே அமர்ந்துக் கொண்டிருந்தது கீரி.அப்போது ஒரு கருநாகம் குழந்தையின் தொட்டிலில் ஏறியது.அதைக் கண்ட கீரி பாய்ந்து..அந்த கருநாகத்தைக் கடித்து துண்டுத் துண்டாக்கியது.


பின் வாசலில்..தன் செயலை மாடசாமியின் மனைவி பாராட்டுவாள் என வந்து காத்திருந்தது.தண்ணீர்க் குடத்துடன் வந்த மாடசாமியின் மனைவி.. வாயில் ரத்தத்துடன் காத்துக் கொண்டிருந்த கீரியைப் பார்த்தாள்.தன் குழந்தையைத்தான் அந்தக் கீரி கடித்து விட்டது என்ற எண்ணத்தில் அழுகையும், கோபமும் மீறிட தண்ணீர்க் குடத்தைக் கீரியின் தலையில் போட்டாள்.கீரியும் வலி தாங்காமல் கத்தியவாறே உயிர் நீத்தது.


உள்ளே வந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி.துண்டாகிக் கிடந்த பாம்பைப் பார்த்ததும்..தன் குழந்தையைக் கடிக்க வந்த பாம்பைக் கொன்ற கீரியைத் தவறாக எண்ணிக் கொன்று விட்டோமே என வருந்தி அழுதாள்.


எந்தப் பிரச்னையையும் தீர ஆராயாது அவசப் புத்தியில் முடிவெடுத்தால் தவறாகிவிடும் என உணர்ந்தாள்.


அவசரக்காரனுக்கு புத்தி மட்டு. 



2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மையே...

Kanchana Radhakrishnan said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்