Sunday, January 3, 2021

53. 'எறும்பும் வெட்டுக்கிளியும் ..(நீதிக்கதை)



 மாலை நேரம் வெட்டுகிளை ஒன்று இங்கும் அங்கும் குதித்து விளையாடிக்கொண்டிருந்தது.

அப்போது எறும்பு ஒன்று அரிசி ஒன்றை இழுத்துக் கொண்டு சென்றது.அதைப்பார்த்த வெட்டுக்கிளி....எப்போதும் அரிசி எங்கு கிடைக்கும்...அதுகிடைத்ததும் அதை எடுத்துக்கொண்டு உன் இல்லத்தில் வைத்துக் கொள்கிறாயே..கொஞ்சம் என்னுடனும் விளையாடலாமே' என்று எறும்பை கேலி செய்தது.

அதற்கு எறும்பு இன்னும் சில நாட்களில் மழைக்காலம் வந்துவிடும்.அப்போது வெளியே செல்ல முடியாது.ஆகவே இப்போதே நான் அதற்காக சேமித்துக் கொள்கிறேன்' என்றது.

சில நாட்கள் கழித்து ..மழைக்காலமும் வந்தது. தான் சேகரித்த உணவை  உண்டு தன் வீட்டிலேயே எறும்பு இருந்தது.ஆனால் வெட்டுக்கிளியோ உணவு எதுவும் கிடைக்காமல் உணவைத் தேடி மழையில் சுற்றி திரிந்தது.

வெட்டுக்கிளிக்கு பசி அதிகமாக எறும்பைத்தேடி போய் ' எனக்கு மிகவும் பசிக்கிறது..ஏதாவது உணவு கிடைக்குமா/..என்று கேட்டது.

எறும்பும், தான் சேர்த்து வைத்திருந்த உணவில் சிறிது வெட்டுக்கிளிக்கு கொடுத்துவிட்டு...அன்று என்னை கேலி செய்தாயே...அப்போது நான் சேகரித்த உணவு தான் இன்று உனக்கும் உதவுகிறது.இனி நீ எப்போதும் சோம்பலில்லாமல் வெயில் காலத்திலேயே...மழைகாலத்திற்கு வேண்டியதை சேகரித்துக்கொள்.' என்றது.

காலம், நேரம் பார்க்காது உழைத்தால் வாழ்வு பிரகாசிக்கும் என வெட்டுக்கிளியும் உணர்ந்தது.

கடின உழைப்பு உடனடி பலனை தராதது போல இருக்கும்.பின்னாளில் கண்டிப்பாக பலன் தரும்.