Sunday, January 3, 2021

52 - தந்தை சொல் மிக்க மந்திரமில்லை


 

பிரசாத் ஒரு சோம்பேறி.அவனை திருத்த நினைத்த அவனது தந்தை, அவனது ஆசிரியரிடம் அழைத்துச் சென்று, "இவன் சோம்பேறியாய் இருக்கிறான். நான் என்ன சொன்னாலும் தன் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள மாட்டேன் என சொல்கிறான்.நீங்கதான் அவனைத் திருத்தணும்" என்றார்.


ஆசிரியரும் அவனை ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்,அங்கு இருந்த ஒரு சிறு செடியை பிடுங்கச் சொன்னார்.மிகவும் எளிதாக பிரசாத் அச்ச்செடியைப் பிடுங்கி எறிந்தான்.


பின்னர், கொஞ்சம் வளர்ந்த பெரியச் செடி ஒன்றினைப் பிடுங்கச் சொன்னார்,சற்று முயற்சி செய்து அதைப் பிடுங்கினான்.


அதைவிடச் சற்று பெரியச் செடியிடம் அழைத்துப் போய்..:அதை பிடுங்க முடியுமா? எனப் பார்" என்றார்.அவனும் மிகவும் கஷ்டப்பட்டு அதைப் பிடுங்கினான்.


பிறகு, நன்கு வளர்ந்த ஒரு மரத்தைக் காட்டி ,அதையும் பிடுங்கி எறி என்றார்.


"மரததை எப்படி பிடுங்க முடியும்?" என்றான் பிரசாத்.


அப்போது ஆசிரியர் சொன்னார், "அது போலத்தான்..நம் பழக்க..வழக்கமும்.நீ சின்னப் பையனாய் இருக்கும் இப்போது உன் சோம்பேறித்தனத்தையும், கெட்ட பழக்க வழக்கங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.இப்போது முயன்றால் சின்ன செடியை பிடுங்கியது போல எளிதாக உன்னால் முடியும்.இல்லையேல்..நீ பெரியவனானதும் அப்பழக்கங்களை..பெரிய மரத்தை எப்படி பிடுங்க முடியாதோ.அது போல உன்னால் அவற்றை மாற்றமுடியாது.உன் அப்பா சொல்வதைக் கேள்.நீ சுறுசுறுப்பாய் மாறி நன்றாக இருப்பாய்"என்றார்.


பிரசாத்தும், ஆசிரியர் அறிவுரைப்படி..தந்தையின் சொல்படி சுறுசுறுப்பானவனாக மாறினான்.


தந்தை சொல் மந்திரமில்லை என்பதை நாமும் உணர்ந்து நம் பெற்றோர் சொல்படி நடக்க வேண்டும்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு பாடம்...

Kanchana Radhakrishnan said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்