Friday, January 1, 2021

49 - கொக்கும் ..ஆமையும்..(நீதிக்கதை)

 


ஏரி ஒன்றில் ஆமை ஒன்று தன் இரு கொக்கு நண்பர்களுடன் வாழ்ந்து வந்தது.


பல வருடங்களாக மழை இல்லாததால், ஏரி வறண்டு வந்தது.அப்போது அந்த கொக்குகள் ஆமையைப் பார்த்து,"இன்னமும் சில நாட்களில் நீர் முற்றிலும் வற்றி விடும்.ஆகவே நாங்கள் இருவரும் பக்கத்து ஊரில் உள்ள ஏரிக்கு சென்று விடலாம் என்று இருக்கிறோம்.அங்கு தண்ணீர் இருப்பதால், மீன்களும் இருக்கும்..எங்களுக்கு உணவும் கிடைக்கும்" என்றன. 


"என்னை விட்டுச் செல்ல உங்களுக்கு எப்படி மனம் வந்தது?என் மீது அன்பு இருக்குமானால் என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்" என்றது ஆமை.

உன்னால் பறக்கமுடியாதே' உன்னை எப்படி அழைத்து போகமுடியும்?' எனச்சொன்ன கொக்குகள் சிறிது நேர யோசனைக்கு பின்'ஒரு நீண்ட குச்சியை எடுத்துக்கொண்டு நாங்கள் இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் தூக்கிக்கொள்கிறோம்,நீ குச்சியின் நடுவில் குச்சியை பற்களால் கெட்டியாய் பிடித்துக்கொள்.ஆனால் நாங்கள் உயர பறக்கும்போது நீ வாயைத்திறந்தால் கீழே விழுந்து இறந்து விடுவாய் என்றன.'

நீங்கள் பறக்கும்போது ' நான் வாய் பேசாமல் இருக்கிறேன்' என்றது ஆமை.

அடுத்து இரு கொக்குகளும் இரு பக்கமும் குச்சியை பிடித்து பறக்க ஆமை குச்சியின் நடுவில் பற்றிக்கொண்டு அதுவும் பறந்தது.

வழியில் கொக்குகளுடன் ஆமையும் பறந்து   செல்வதை ப் பார்த்த மக்கள் .. சந்தோஷத்தால் கூச்சல் போட்டனர்.அவர்களின் கூச்சல் ஆமையின் காதுகளில் விழ ' மக்கள் ஏன்  இப்படி கூச்சலிடுகிறார்கள்' என கேட்க வாயைத்திறந்த ஆமை பிடி விட்டு கீழே விழுந்து உடல்  சிதறி இறந்தது.

கீழே விழுவோம்  என தெரிந்தும் அறிவில்லாத ஆமை வாயைத் திறந்து தன் உயிரை இழந்தது.

அறிவில்லாத செயல்களைச் செய்தால் இழப்பினை சந்திக்க நேரிடும்.




2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உறுதியாக...

Kanchana Radhakrishnan said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்