Wednesday, January 27, 2021

சிறுவர் உலகம் - பாகம் 4.

 1. ' இதுதான் உலகம் 

-------------------------------------------



ஒரு அழகிய கிராமத்தில் ஏரிக்கரையில் ஒரு சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது ' என்னைக்காப்பாற்று...என்னை காப்பாற்று' என ஆற்றினுள் வலைக்குள் சிக்கிக்கொண்ட முதலை ஒன்று இவனைப்பார்த்து கதறியது.

' உன்னை வலையிலிருந்து காப்பாற்றினால் நீ என்னை விழுங்கிவிடுவாயே ' என்றான் சிறுவன்.

முதலையோ' உன்னை சத்தியமாக சாப்பிடமாட்டேன்' என்றது.

முதலையின் சத்தியத்தை நம்பி சிறுவன் வலையை அறுக்க ஆரம்பித்தான்.வலையிலிருந்து முதலில் முதலையின் தலை வெளியே வர..உடன் சிறுவனின் காலைப்பற்றியது முதலை.

'பார் முதலையே..இது நியாயமா' என சிறுவன் கதறிக்கொண்டு கேட்க.'இதுதான் உலகம்' என்றது முதலை.

முதலையின் வாய்க்குள் போய் கொண்டிருந்த சிறுவன்.' மரத்தில் இருந்த பறவைகளிடம் கேட்டான்,' முதலையை காப்பாற்றியதற்கு எனக்கு இந்த தண்டனையா.' என கேட்டான்.பறவைகளும் உடனே' இதுதான் உலகம்' என்றன.

இப்படி யாரைக்கேட்டாலும் சிறுவனுக்கு உதவாது' இதுதான் உலகம்'..இதுதான் உலகம்' என்றனர்.

அப்போது அங்கு ஒரு முயல் வந்தது.அது முதலையைப் பார்த்து உனக்கு உதவியவனை நீ இப்படி செய்வது தர்மமா? என்று கேட்டது.முதலைக்கு கோபம் ஏறியது.சிறுவனின் காலை பிடித்தபடியே ....முயலிடம் ஏதோ சொல்ல ..முயல் ' நீ என்ன சொல்கிறாய் என்று புரியவில்லை..சரியாக வாயைத்திறந்து சொல்'.

முதலை உடனே,'நான் வாயைதிறந்து சொன்னால் சிறுவன் ஓடி விடுவானே' என்று ஒரு மாதிரி வாயை கோணி சொல்லி முடித்தது.

உடன் முயல்,' உன் வாலை மறந்து விட்டாயா.நீ வாயை திறந்ததும் சிறுவன் தப்ப முயன்றால்...வாலால் அடித்து வீழ்த்தலாமே'.

அப்போதுதான் தன் வாலின் திறமையை அறிந்த முதலை சிறுவனை விட்டது.உடன் முயல் சிறுவனை நோக்கி ' தம்பி ஓடி விடு..ஓடி விடு' என்றது.

சிறுவன் ஓட ...முதலை அவனை தன் வாலால் அடிக்க முயன்றது.அப்போதுதான் தன் வால் பகுதி இன்னமும் வலைக்குள் சிக்கிக்கொண்டிருப்பதை முதலை உணர்ந்தது. அப்போது முதலை முயலிடம் 'நீ செய்தது நியாயமா?' என்றது.

அதற்கு முயல் ' இது தான் உலகம்' என்று சொல்லியபடியே தாவி ஓடி மறைந்தது.

எளியோரை..வலியார் துன்புறுத்தக் கூடாது.






2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

Kanchana Radhakrishnan said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்.