Tuesday, January 5, 2021

56.யானையும் பூனையும் ...(நீதிக்கதை)

 


யானையும் பூனையும்  நண்பர்களாக பழகி வந்தன.

யானையின் மீது பூனை ஏறி உட்கார்ந்து கொள்ள யானை அழகாக தும்பிக்கையை ஆட்டியபடி நடந்து வரும்.

யானையை பார்த்த விலங்குகள் பயந்து,யானயை வணங்கி வழி விடும்.ஆனால் பூனைக்கோ தன்னைக் கண்டுதான் விலங்குகள் பயப்படுகின்றன என்று எண்ணி ஆணவம் இருந்தது.

அதனால் ...யானைக்கு பயந்து ஓடும் விலங்குகளைப் பார்த்து கேலி செய்தது பூனை.

ஒரு நாள் யானையிடமே ' என்னைக் கண்டால் விலங்குகள் எல்லாம் எவ்வளவு பயப்படுகின்றன என்று தெரியுமா?' என்றது.

அதற்கு யானை...'அட முட்டாள் பூனையே உன்னைக் கண்டால் எலிகள் தான்  பயப்படும்.விலங்குகள் என்னைகண்டு தான் பயப்படுகின்றன.உனக்கு பயப்படும் அளவு அவைகள் கோழைகள் அல்ல' என்றது.

'யானையே..உனக்கு புத்தி மழுங்கிவிட்டது.எல்லா விலங்குகளும் எனக்குத்தான் பயப்படுகின்றன.நாளை 

நிரூபித்துக் காட்டுகிறேன்' என்றது பூனை.

யானைக்கு  கோபம் வந்து 'என் முன்னால் நிற்காதே...உன்னை மிதித்து நசுக்கி விடுவேன்' என்றது.

பூனை பயந்து ஓடியது.இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வேட்டை நாய் ஒன்று...எல்லா விலங்குகளிடமும் சென்று  பூனை,யானையிடம் சண்டையிட்டதை கூறிவிட்டது.

'யானை இருக்கும் தைரியத்தில் ...இந்த பூனை எவ்வளவு முறை நம்மை கேவலப்படுத்தியுள்ளது.அதற்கு ஒரு பாடம் கற்பிக்கவேண்டும்' என அவை திட்டமிட்டன.

'மறுநாள்  பூனை தனியாக கம்பீர நடை போட்டு வந்தது.எந்த விலங்கும் பயந்து ஓடவில்லை.' ஆனால் நேற்று வரை நம்மை மதிக்காதவனை நாம் தாக்குவோம்' என ஓடி வந்து பூனையை தாக்க ஆரம்பித்தன.

அப்போதுதான் பூனைக்கு அறிவு வந்தது.நம்மை விட வலிமை மிக்கவர்களின் வலிமையை மதித்து நடந்தால் கேடு எதுவும் விளையாது என்று உணர்ந்தது.

No comments: