Monday, January 11, 2021

60.அனைத்தும் அறிந்தவர் யாருமில்லை...(நீதிக்கதை)

 


ஓரு ஊரில் படித்த அறிவாளி ஒருவன் இருந்தான்.அதனால் அவனுக்கு தனக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவம் இருந்தது.

ஒரு நாள் அவன் ஒரு ஆற்றைக்கடக்க ஒரு படகில் ஏறினான்.படகு ஓட்டி அவனை வணங்கினான்.படிப்பாளி ஆணவம் தலை தூக்க' நீ எவ்வளவு படித்திருக்கிறாய்?' என்றான்.

'ஐயா...எனக்கு படிக்க வசதியில்லை.என் குடும்பம் ஏழ்மையானது.சிறு வயது முதலே நான் சம்பாதித்துக் கொடுக்கும் பணத்தில்தான் குடும்பமே நடந்துவருகிறது.' என்றான்.

உடனே அறிவாளி,..'அடடா..உன் வாழ்வையே வீணாக்கிவிட்டாயே...என்னைப்பார்..என்னைப்போன்று எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை' என்றான்.

படகு ஆற்றில் செல்ல செல்ல...காற்றின் வேகத்தால் படகு சரியத்தொடங்கியது.'ஐயா..அலைவீச்சு மோசமாகிவிட்டது.படகு கவிழப்போகிறது.உங்களால் நீந்த முடியுமா ?' என்றான்.

உடனே அறிவாளி பயத்துடன் ' எனக்கு நீந்தத்தெரியாதே' என்றான்.

ஐயா,படிக்காமல் நான் என் வாழ்வைவீணாக்கி விட்டேன்.ஆனால் நீங்கள் நீந்தத்தெரியாததால் ...வாழ்க்கையையே இழக்கப்போகிறீர்களே' என்றான்.

பின் படகு ஆற்றில் மூழ்க ...அறிவாளியையும்  சேர்த்து இழுத்து ...நீந்தியபடியே கரைக்கு வந்து சேர்ந்தான் படகோட்டி.

அப்போதுதான் அறிவாளிக்கு புத்தி வந்தது.'இந்த உலகில் கற்றது கைமண் அளவு.எல்லாம் தெரிந்தவர்களும் கிடையாது.எதுவும் தெரியாதவரும் கிடையாது.எனவே எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தை விட்டொழிக்கவேண்டும் என உணர்ந்தான்.

நாமும் எவரையும்'  இவருக்கு என்ன தெரியப்போகிறது' என ஒதுக்கிவிடக்கூடாது.