ஒரு யானை தினமும் ஒரு தெரு வழியே ஆற்றுக்கு சென்று தண்ணீர் குடித்து வருவது வழக்கம்.
அந்த தெருவில் தையல்காரன் ஒருவன் கடை நடத்தி வந்தான்.யானை ஆற்றுக்கு போகும்போது ஒரு வாழைப்பழத்தை வழக்கமாக தினமும் கொடுப்பது வழக்கம்.
ஒரு நாள் அவன் மனைவியிடம் சண்டையிட்டதால் மிகவும் கோபமாக இருந்தான்.
அப்போது யானை வழக்கம் போல் வந்தது.கோபத்தில் இருந்த கடைக்காரன்' உனக்கு தினமும் இது வழக்கமாகி விட்டது' என்று கூறி வாழைப் பழத்தில் தையல் ஊசியை செருகி யானைக்கு கொடுத்துவிட்டான்.
அதை கண்டுபிடித்த யானை ஒன்றும் சொல்லாமல் அந்தப் பழத்தை தூக்கி எறிந்துவிட்டு அந்த தையல் காரனுக்கு புத்தி புகட்டவேண்டும் என்று எண்ணி ஆற்றுக்கு சென்றது.
தண்ணீரை குடித்துவிட்டு தன் தும்பிக்கை நிறைய சேற்று நீரை உறிஞ்சு கொண்டு அந்த தையல் கடைக்கு வந்து....சேற்று நீரை அவன் கடையில் வைத்திருந்த புதிய துணிகளில் பீச்சி அடித்தது.அனைத்து துணிகளும் வீணாயின.தையல்காரன் மக்களிடம் திட்டும் அடியும் வாங்கினான்.
நம்மால் முடிந்தால் பிறர்கு உதவவேண்டும்.நம்மால் முடியாவிடின் அவர்களுக்கு எந்த நஷ்டத்தையும் கொடுக்கக்கூடாது.
நாம் ஏதேனும் தீங்கு செய்தால் நமக்கு ஒரு தீங்கு வந்து சேரும்.
2 comments:
உண்மை...
வருகைக்கு நன்றி
Post a Comment