முனுசாமி தன் வீட்டுத் தேவைக்காக தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவான்.
தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான்.அந்தப் பானைகளை..ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு..கழியைத் தோள்களில் சுமந்து வருவான்.
இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது.அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் போது ஓட்டைப் பானையில் பாதியளவே நீர் இருக்கும்.
ஓட்டை இல்லா நல்ல பானை....ஓட்டையுள்ளப் பானையைப் பார்த்து இதனால் கிண்டல்செய்யும். அதனுடைய கேலியை பொறுக்க முடியாமல்...ஓட்டை பானை ஒரு நாள் முனுசாமியைக்கேட்டது.
'ஐயா...தினமும் என் குறையால்....நீங்கள் வரும் வழியில் தண்ணீர் சிந்தி உங்கள் வேலைப்பழுவை அதிகரிக்கின்றேன். என் குறையை தயவுசெய்து சரி செய்யுங்கள் என்றது.'
அதற்கு முனுசாமி ' பானையே...ஒன்றைப் பார்த்தாயா?..நாம் வரும்போது உன் பக்கம் இருக்கும் பூச்செடிகளின் வரிசையைப் பார்த்தாயா.உன்னிடம்
இருந்து சிந்தும் தண்ணீர் படும்படி வழி முழுவதும் பூச்செடிகளை நட்டு வைத்தேன்.அவை தினமும் நீ சிந்தும் நீரினால் இப்பொழுது பெரிதாக வளர்ந்து அழகான
பூக்களை அளிக்கின்றன.நான் அவற்றை விற்று லாபம் அடைகிறேன்.அது உன்னால்தானே' என்றான்.
இதைக்கேட்ட பானை தன் குறையை மறந்தது.மற்றவர் பேச்சைப் பற்றி கவலைபடாது தன் வேலையை செய்யத்தொடங்கியது.ஓட்டை பானையின் செயலை அறிந்து நல்ல பானையும் அதை கேலி செய்வதை நிறுத்தியது.
அடுத்தவர் பேச்சைப்பற்றி கவலைப்படாது நாம் நம் வேலையை செய்யவேண்டும்.
No comments:
Post a Comment