ராமன் உடனே அவனுக்கு உணவளித்தான்.கோவிந்தனோ,ராமனைப் பார்த்து 'ராமா...இப்படி நீ இவனுக்கு உணவளித்து அவனை சோம்பேறியாக்குகிறாய்'என்றான்.
அடுத்தநாளும் அவன் பிச்சை எடுக்க வந்தான்.ராமன் அவனுக்கு உணவளிக்க வந்தபோது அவனை தடுத்து நிறுத்தி.அந்த பிச்சைக்காரனை தடதடவென இழுத்துக் கொண்டு போனான் கோவிந்தன்.
அவனுக்கு ஒரு தூண்டிலை வாங்கிக்கொடுத்து ...பக்கத்து ஊர் குளத்தில் மீன் பிடித்து உழைத்துப் பிழைத்துக்கொள் என்று சொல்லிவிட்டு திரும்பினான்.
ஒரிரு வருடங்கள் கழித்து ராமனும் கோவிந்தனும் வீட்டில் இருந்தபோதுஅவர்கள் வீட்டின் முன் ஒரு பெரிய கார் வந்து நின்றது.அதிலிருந்து ஒரு செல்வந்தர் இறங்கி வந்தார்.அவனது கார் ஓட்டுநர் கூடைகூடையாய் இனிப்புகளும்,பழங்களும் எடுத்து உள்ளே வைத்தார்.
செல்வந்தர் கோவிந்தனைப் பார்த்து 'என்னை யார் என்று தெரிகிறதா.நான் உங்கள் வீட்டுக்கு பிச்சை எடுக்க வந்தேன்.எனக்கு தூண்டில் வாங்கிக்கொடுத்து மீன் பிடித்து உழைத்து சம்பாதிக்க கற்றுக்கொடுத்தவர் நீங்கள்.நான் பின் உழைத்து....இன்று மீன் களை பதப்படுத்தி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் பெரிய தொழிலதிபர் ஆகிவிட்டேன்.உழைப்பின் அருமையை எனக்கு உணர்த்திய உங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன்''என்றார்.
உழைப்பு உயர்வு தரும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்தால் வாழ்வில் நமக்கு முன்னேற்றம் ஏற்படும்.
No comments:
Post a Comment