Wednesday, December 23, 2020

44 - தன் வினை தன்னை சுடும்

 


சலவைத் தொழிலாளி ஷண்முகத்திடம் இரண்டு கழுதைகள் இருந்தன.சுறுசுறுப்பாய் இருக்கும்  கழுதை ஒன்று.எப்போதும் சோம்பேறியாய் இருக்கும் கழுதை ஒன்று.


தினமும் சுறுசுறுப்பாய் இருக்கும் கழுதையின் முதுகில் அழுக்குத்துணி மூட்டைகளை வைத்து நதிக்கு எடுத்துச் சென்று,துணிகளைத் தோய்த்து காயவைத்து..மீண்டும் மூட்டையாகக் கட்டி கழுதையின் முதுகில் வைத்து திரும்பி வருவதை ஷண்முகம் வழக்கமாய்க் கொண்டிருந்தான்.

ஒரு நாள் மிகுந்த பாரமாய் இருந்ததால் உழைத்த களைப்புடன் சோர்வாக சுறுசுறுப்பான கழுதைவந்து சேர்ந்தது. இரவு அதற்கான உணவைக்கூட உண்ணாமல் படுத்தது.இதைக்கண்ட சோம்பறிக் கழுதை பரிதாபப்பட்டு அதனிடம் சொன்னது.

'உன்னை பார்க்க பாவமாக இருக்கிறது....ஏன் தினமும் உழைக்கிறாய்...என்னைப்பார்...காலையில் அவன் வந்து எழுப்பும்போது ..எழுந்திராமல் படுத்துக்கொண்டே இருப்பேன்.சாட்டையால் என்னை நாலடி அடிப்பான்.பொறுத்துக்கொள்வேன். சரி...இது வேலைக்கு ஆகாது என என்னை விட்டுவிட்டு உன்னை மட்டும் பாரம் சுமக்கவைப்பான்.என்னைப்போல நீயும் சண்டித்தனம் செய்....உன்னையும் இரண்டு அடி அடிப்பான்.பின் விட்டுவிடுவான் என்றது.

அதன் பேச்சைக் கேட்டு அடுத்த நாள் சுறுசுறுப்பு கழுதை அடித்தும் எழுந்து கொளவதாய் இல்லை.உடனே சண்முகம் ' பாவம் தினமும் உழைக்கும் இந்த க் கழுதை சண்டித்தனம் செய்கிறதென்றால் ஒரு வேளை உண்மையாகவே அதற்கு உடம்பு சரியில்லை என்று நினைத்தான்,'

இன்று சுறுசுறுப்புக் கழுதைக்க்கு ஓய்வு கொடுத்துவிட்டு,உழைக்காமல் காலத்தைத் தள்ளும் சோம்பறிக்கழுதையை இன்று அழைத்து செல்லலாம்..என்று சாட்டையால் பலமாக  அதை அடித்து ஓட்டிக்கொண்டு சென்றான்.'

சோம்பறிக்கழுதை சுறுசுறுப்பு கழுதைக்கு கெட்ட அறிவுரைகள் சொல்லியதால்  அதன் பிழைப்பும் கெட்டது.

நாம் தவறாக சொன்னாலோ,தவறாக அறிவுரை சொன்னாலோ...அதுவே திரும்ப வந்து நம்மைதாக்கும்.


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மையே...

Kanchana Radhakrishnan said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்.