ரவி நன்கு படிப்பான்.சோமுவோ சோம்பேறி.படிப்பிலும் மக்கு.
ஒரு நாள் ரவி சோமுவிடம், 'நீயும் நன்றாக படித்தால் வாழ்க்கையில் பெரிய ஆளாக வரலாமே' என்றான்.
சோமுவிற்கோ..ரவியையும் படிக்க விடாமல்..சோம்பறியாக்க வேண்டும் என கெட்ட புத்திமதிகளைச் சொல்லி வந்தான்.
ரவி...இது குறித்து அம்மாவிடம் ' சோமு ஏன் இப்படி இருக்கிறான்' என்றான்
அம்மா'அதை சொல்வதற்கு முன் உனக்கு ஒருகதை சொல்கிறேன்' என்று கதை சொல்ல ஆரம்பித்தாள்
ஒரு நரி காட்டில் இரு மரங்களிக்கிடையே சென்றபோது ....அதன் வால் மாட்டிகொண்டது.அதை விடுவிக்க முயன்றபோது வால் அறுந்து போய்விட்டது.
வாலை இழந்த நரிக்கு அவமானமாய் இருந்தது.அனைத்து நரிகளும் தன்னைப் போலவே வாலில்லாது போனால் தன் குறைபாடு யாருக்கும் தெரியாது என
எண்ணி ...அனைத்து நரிகளையும் ஒரு நாள் கூட்டியது.
கூடிய நரிகளைப்பார்த்து,வாலிழந்த நரி ' வாலை வைத்துக்கொண்டு நீங்கள் படும்பாடு எனக்கு வருத்தமாக இருக்கிறது.வால் இருப்பதால் எவ்வளவு இன்னல்கள் தெரியுமா.நம்மை தொடரும் விலங்குகள் நம் வாலை இழுத்துப் பிடித்து நம்மை பிடித்து விடுகின்றன.உண்மையில் இந்த வாலினால் எந்த பிரயோசனமும் இல்லை.மனிதர்களைப் பாருங்கள்..வாலே இல்லை.நாமும் நம் வாலை வெட்டிக்கொண்டால் ஒன்றாக செயல் பட முடியும். 'நான் இப்பொழுது சந்தோஷமாக இருக்கிறேன்.அது போல நீங்களும் வாலை வெட்டிக்கொண்டால் சந்தோஷமாக இருக்கலாம்' என்றது.
அப்போது மூத்த நரி ஒன்று அங்கு வந்தது.' வாலில்லாத நரி ...வால் தேவையில்லை என்பதை உனக்கு வால் இருக்கும்போதே சொல்லியிருந்தால்....நாங்கள்
நம்பி இருப்போம்.' இப்போது உன்னைபோல எங்களை மாற்றும் உன் தந்திரம் புரிந்து விட்டது.' என்றது.
என்று கதையை முடித்த அம்மா,'சோமு மக்காய் இருப்பதால் ...அவனைப்போல உன்னை மக்காய் இருக்கவேண்டும் என உன்னைப் படிக்காதே என்று சொல்கிறான்...அவன் சொல்வதைக் கேட்காதே என்றார்.
நாமும் நமக்கு தீயசெயல்களை செய்ய சொல்பவர்களை ஒதுக்கி விடவேண்டும்.
.
No comments:
Post a Comment