Friday, March 31, 2023

16. உழைப்பிற்கேற்ற ஊதியம்

    16- உழைப்பிற்கேற்ற ஊதியம்



வயலூர் என்ற ஊரில் சின்னையன் என்ற ஒருவன் ஆடுகளை மேய்ப்பதை தொழிலாக கொண்டிருந்தான்.

அவனிடம் நிறைய ஆடுகள் இருந்தன.அவனால் சரியாக அவற்றை காவல்காக்க முடியவில்லை.தினமும் ஒரு ஆடு காணாமல் போயிற்று.

இதனை கண்காணிக்க வேட்டை நாய் இரண்டை வாங்கி காவலுக்கு வைத்தான்.ஆனால் அவற்றிற்கு சரியாக உணவு கொடுப்பதில்லை.

காவல் வைத்தும் மீண்டும் தினம் ஒரு ஆடு காணாமல் போயிற்று.சின்னையனுக்கு என்ன செய்வது  என்று புரியவில்லை.ஒரு நாள் என்ன நடக்கிறது என்பதை மறைந்திருந்து பார்த்தான்.ஒரு ஓநாய் ஒரு ஆட்டை கொன்று  சாப்பிட்டு மீதியை வேட்டை  நாய்கள்சாப்பிட போட்டு விட்டது.வேட்டை நாய்களும் தினமும் ஓநாய் மூலம் தங்களுக்கு உணவு கிடைக்கிறதே என்று ஓநாயை விரட்டாமல் இருந்தது.

சின்னையனும் மிகவும் மனம் வருந்தி தனக்கு  தெரிந்த பெரியவர் ஒருவரிடம் நடந்ததைக் கூறினான்.அவர்' யாருக்கும் சரியாக உணவு கொடுத்தால் தான்’வேலையை ஒழுங்காக செய்வர்.நீ கொடுத்த உணவு வேட்டை நாய்களுக்கு போதவில்லை.ஆகையால் வேட்டை நாய்களுக்கு தேவையான உணவு  கொடு. அவை உன்னிடம் விசுவாசமாக இருக்கும் "என்றார்.

அன்றிலிருந்து அவன் வேட்டை நாய்களுக்கு தேவையான உணவு கொடுத்தான்.அது முதல் வேட்டை நாய்கள் ஓநாய் வந்தால் அடித்து விரட்டியது.மந்தையில் ஆடுகள் குறையவில்லை.

நம்மிடம் வேலை செய்பவர்களுக்கு அவர்களை ஏமாற்றாமல்  உழைப்பிற்கேற்ப ஊதியம் கொடுத்தால் அவர்கள் நம்மிடம் விசுவாசமாக நடந்து கொள்வார்கள்.




No comments: