Friday, March 31, 2023

19.தைரியமும் வலிமையும்

19 -தைரியமும் வலிமையும்

 



 ஒரு காட்டில் முயல் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது.அந்த காட்டில் பச்சை  பசேல் என்று எங்கு பார்த்தாலும் செடிகளும்,காய்கறிகளும்,பழங்களும்  இருந்தன .இந்த முயல்கள் இதை சாப்பிட்டு சந்தோஷமாக  வாழ்ந்து வந்தன.

கோடை காலம் வந்தது.வெப்பம் அதிகமாக இருந்ததால் செடிகள் எல்லாம் கருகி பாலைவனம் போல் தோற்றமளித்தன..முயல்களுக்கு  சாப்பிட உணவு கிடைக்கவில்லை.

அந்த காட்டில்  வேட்டை நாய்கள் அதிகம் காணப்பட்டன..அவை தினமும் ஒரு முயலை அடித்து கொன்று சாப்பிடுவது வழக்காக கொண்டிருந்தன..ஆகையால் மற்ற முயல்கள்  உயிருக்கு பயந்து தனது பொந்துக்குள்ளேயே அடைந்து கிடந்தன..எவ்வளவு நாள் நாம் இப்படியே அடைந்து கிடப்பது நாம் ஏதாவது செய்யவேண்டும் என்று பேசிக்கொண்டன.

ஒரு முயல் ‘என்னால் இந்த பொந்தில் அடைந்து  கிடக்கமுடியாது.ஏதாவது ஒரு நதியில் விழுந்து  என் உயிரை மாய்த்துக்கொள்ளப்போகிறேன்’என்றது..

"நம்மை ஏன் கடவுள் இப்படி பலவீனமாக படைத்துவிட்டார்" என்று எல்லா முயல்களும் வருத்தப்பட்டன.

அந்த முயல்கள் எல்லாம் நதிக்கரையை அடைந்தபோது முயல்களைப் பார்த்து  தவளைகள் பயந்து நீருக்குள் குதித்தன.

இதைப்பார்த்த முயல்கள் ஆச்சிரியம் அடைந்தன..ஆண்டவன் நம்மைவிட வலிமை குறைந்தவர்களையு ம்  உலகில் படைத்திருக்கிறான்.ஆகவே உயிர் வாழ தைரியத்துடன் கூடிய வலிமை தான் தேவை

என்பதை உணர்ந்தன.

இனி நாம் தைரியமாக செயல்படவேண்டும் என்று தீர்மானம் எடுத்துக்கொண்டன.

வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்ளவேண்டும்.



.

.

No comments: