Friday, January 29, 2021

2. அறிவுடைமை

 2- அறிவுடைமை

ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது பூனை ஒன்று வகுப்பில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துகொண்டிருந்தது.

ஆனாலும் ....ஆசிரியர் அதைப்பற்றி கவலைப்படாது  பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.ஆனால் மாணவர்களின் கவனம் பாடத்தில் செல்லாமல்...பூனையின் மீதே இருந்தது.

அதனால் அவர்...அந்த பூனையை பிடித்து பக்கத்தில் இருந்த ஒரு தூணில் கட்டச்சொன்னார்.பூனையும் கட்டப்பட்டது.

அடுத்த நாள் முதல்..அடுத்தடுத்த நாட்களிலும் பூனை தொந்தரவு செய்யக்கூடாது என பாடம் நடத்தும்போது தவறாமல் பூனை தூணில் கட்டப்பட்டது.

சில மாதங்கள் கழித்து ஆசிரியர் வெளியூர் சென்றுவிட   வேறு ஒரு ஆசிரியர் வந்தார்..ஆனாலும் மாணவர்கள்...வகுப்பு ஆரம்பிக்கும் முன் பூனையை தூணில் கட்டி வைத்தனர்.

புது ஆசிரியர் வந்து....மாணவர்களிடம் ....பூனையை ஏன் கட்டி வைத்திருக்கிறீர்கள்?' எனக் கேட்டார்.

மாணவர்களும்...முந்தைய ஆசிரியர் தினமும் பூனையை தூணில் கட்டிவிட்டுத் தான் வகுப்பில் பாடத்தை நடத்துவார், என்றனர்.

புது ஆசிரியருக்கோ இது ஆச்சிரியத்தை தந்தது.பின்னர் அவர் மாணவர்கள் சொன்னதிலிருந்து ,பூனை வகுப்பில் பாடம் நடக்கும் போது  இங்கும் அங்கும் நடந்தது தான் பூனையை கட்டி வைக்க காரணம் என்பதைபுரிந்து கொண்டார்.

பின் மாணவர்களிடம் அவர்களின் அறியாமையை விளக்கி...எந்த ஒரு செயலுக்கும்...அது ஏன் செய்யப்படுகிறது என்பதை அறிந்து செயல்படவேண்டும் எனவும்...அதை அறியாமல்....இயந்திரத்தனமாக...சிந்திக்காமல் நடக்ககூடாது என்று கூறினார்.

இதையே திருவள்ளுவர்'

எப்பொருள் யார்யார்வாய்க்  கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பதறிவு.

என்றார்.

இதற்கானப் பொருள்...'எந்த ஒரு பொருள் குறித்தும் எவர் எதைச்சொன்னாலும் (செய்தாலும்)ஆதை அப்படியே நம்பி ஏற்றுக்கொள்ளாமல் உண்மை என்ன என்பதை ஆரய்ந்து தெளிவது தான் அறுவுடைமையாகும்.



Wednesday, January 27, 2021

சிறுவர் உலகம் - பாகம் 4.

 1. ' இதுதான் உலகம் 

-------------------------------------------



ஒரு அழகிய கிராமத்தில் ஏரிக்கரையில் ஒரு சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது ' என்னைக்காப்பாற்று...என்னை காப்பாற்று' என ஆற்றினுள் வலைக்குள் சிக்கிக்கொண்ட முதலை ஒன்று இவனைப்பார்த்து கதறியது.

' உன்னை வலையிலிருந்து காப்பாற்றினால் நீ என்னை விழுங்கிவிடுவாயே ' என்றான் சிறுவன்.

முதலையோ' உன்னை சத்தியமாக சாப்பிடமாட்டேன்' என்றது.

முதலையின் சத்தியத்தை நம்பி சிறுவன் வலையை அறுக்க ஆரம்பித்தான்.வலையிலிருந்து முதலில் முதலையின் தலை வெளியே வர..உடன் சிறுவனின் காலைப்பற்றியது முதலை.

'பார் முதலையே..இது நியாயமா' என சிறுவன் கதறிக்கொண்டு கேட்க.'இதுதான் உலகம்' என்றது முதலை.

முதலையின் வாய்க்குள் போய் கொண்டிருந்த சிறுவன்.' மரத்தில் இருந்த பறவைகளிடம் கேட்டான்,' முதலையை காப்பாற்றியதற்கு எனக்கு இந்த தண்டனையா.' என கேட்டான்.பறவைகளும் உடனே' இதுதான் உலகம்' என்றன.

இப்படி யாரைக்கேட்டாலும் சிறுவனுக்கு உதவாது' இதுதான் உலகம்'..இதுதான் உலகம்' என்றனர்.

அப்போது அங்கு ஒரு முயல் வந்தது.அது முதலையைப் பார்த்து உனக்கு உதவியவனை நீ இப்படி செய்வது தர்மமா? என்று கேட்டது.முதலைக்கு கோபம் ஏறியது.சிறுவனின் காலை பிடித்தபடியே ....முயலிடம் ஏதோ சொல்ல ..முயல் ' நீ என்ன சொல்கிறாய் என்று புரியவில்லை..சரியாக வாயைத்திறந்து சொல்'.

முதலை உடனே,'நான் வாயைதிறந்து சொன்னால் சிறுவன் ஓடி விடுவானே' என்று ஒரு மாதிரி வாயை கோணி சொல்லி முடித்தது.

உடன் முயல்,' உன் வாலை மறந்து விட்டாயா.நீ வாயை திறந்ததும் சிறுவன் தப்ப முயன்றால்...வாலால் அடித்து வீழ்த்தலாமே'.

அப்போதுதான் தன் வாலின் திறமையை அறிந்த முதலை சிறுவனை விட்டது.உடன் முயல் சிறுவனை நோக்கி ' தம்பி ஓடி விடு..ஓடி விடு' என்றது.

சிறுவன் ஓட ...முதலை அவனை தன் வாலால் அடிக்க முயன்றது.அப்போதுதான் தன் வால் பகுதி இன்னமும் வலைக்குள் சிக்கிக்கொண்டிருப்பதை முதலை உணர்ந்தது. அப்போது முதலை முயலிடம் 'நீ செய்தது நியாயமா?' என்றது.

அதற்கு முயல் ' இது தான் உலகம்' என்று சொல்லியபடியே தாவி ஓடி மறைந்தது.

எளியோரை..வலியார் துன்புறுத்தக் கூடாது.






Monday, January 11, 2021

61- முட்டாளுக்கு புத்தி சொல்லி பயன் இல்லை

 




குளிர் காலம்.ஒருநாள் மிகவும் குளிராக இருந்தது.காட்டில் இருந்த குரங்கிகளால் குளிரைத் தாங்க முடியவில்லை.


கொஞ்சம் நெருப்புக் கிடைத்தால் சருகுகளைப் போட்டு தீமூட்டி குளிர் காயலாம் என குரங்குகள் எண்ணின.நெருப்புக்கு என்ன செய்யலாம் என அவை யோசித்த போது..சில மின் மினிப் பூச்சிகள் பறந்து கொண்டிருப்பதைக் கண்டன.உடனே குரங்குகள் மரத்திலிருந்து தவைத்தாவி அப்பூச்சிகளியப் பிடித்தன.


மற்ற குரங்குகள் சுற்றிலும் இருந்த குப்பை கூளங்களைச் சேகரித்தன.அக்குப்பையில் பிடித்த  மின்மினிப் பூச்சிகளைப் போட்டன. பின்..நெருப்பு கொழுந்து விட்டு எரியப் போகிறது என எதிர்பார்த்து சூழ்ந்து அமர்ந்து கொண்டன.ஆனால் தீ எரியும் வழியைக் காணோம்.


குரங்குகள் வாயினால் குப்பையை ஊதி நெருப்பை எரிய விடும் முயற்சியில் ஈடு பட்டன.மரத்தின் மீது அமர்ந்து அந்தக் குரங்குகளின் கோமாளித்தனத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பறவை சிரித்தபடி கீழே வந்து அமர்ந்தது.


பின் பறவை குரங்குகளைப் பார்த்து "நண்பர்களே! மின்மினிப் பூச்சியை நெருப்பு என எண்ணிக் கொண்டு தீ மூட்ட வீணாக முயலுகிறீர்கள்.மின்மினிப் பூச்சியிலிருந்து நீங்கள் எவ்வளவு ஊதினாலும் நெருப்பு வரவே வராது.வீண் வேலையை விடுங்கள்" என புத்தி சொல்லியது.


"உனக்கு ஒன்றும் தெரியாது ..நீ உன் வேலையைப் பார்"   எனக் கூறிவிட்டு குரங்குகள் மீண்டும் தீ மூட்ட ஊதத் தொடங்கின.


பறவை ,குரங்குகளின் முட்டாள்தனத்தை எண்ணி..மீண்டும் புத்திமதி சொன்னது.இதனால் கோபமடைந்த குரங்குகள் பறவை மீது பாய்ந்து அதனைத் தரையில் மோதிக் கொன்றன.


முட்டள்களுக்கு புத்தி சொல்வது வீண்.. 

60.அனைத்தும் அறிந்தவர் யாருமில்லை...(நீதிக்கதை)

 


ஓரு ஊரில் படித்த அறிவாளி ஒருவன் இருந்தான்.அதனால் அவனுக்கு தனக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவம் இருந்தது.

ஒரு நாள் அவன் ஒரு ஆற்றைக்கடக்க ஒரு படகில் ஏறினான்.படகு ஓட்டி அவனை வணங்கினான்.படிப்பாளி ஆணவம் தலை தூக்க' நீ எவ்வளவு படித்திருக்கிறாய்?' என்றான்.

'ஐயா...எனக்கு படிக்க வசதியில்லை.என் குடும்பம் ஏழ்மையானது.சிறு வயது முதலே நான் சம்பாதித்துக் கொடுக்கும் பணத்தில்தான் குடும்பமே நடந்துவருகிறது.' என்றான்.

உடனே அறிவாளி,..'அடடா..உன் வாழ்வையே வீணாக்கிவிட்டாயே...என்னைப்பார்..என்னைப்போன்று எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை' என்றான்.

படகு ஆற்றில் செல்ல செல்ல...காற்றின் வேகத்தால் படகு சரியத்தொடங்கியது.'ஐயா..அலைவீச்சு மோசமாகிவிட்டது.படகு கவிழப்போகிறது.உங்களால் நீந்த முடியுமா ?' என்றான்.

உடனே அறிவாளி பயத்துடன் ' எனக்கு நீந்தத்தெரியாதே' என்றான்.

ஐயா,படிக்காமல் நான் என் வாழ்வைவீணாக்கி விட்டேன்.ஆனால் நீங்கள் நீந்தத்தெரியாததால் ...வாழ்க்கையையே இழக்கப்போகிறீர்களே' என்றான்.

பின் படகு ஆற்றில் மூழ்க ...அறிவாளியையும்  சேர்த்து இழுத்து ...நீந்தியபடியே கரைக்கு வந்து சேர்ந்தான் படகோட்டி.

அப்போதுதான் அறிவாளிக்கு புத்தி வந்தது.'இந்த உலகில் கற்றது கைமண் அளவு.எல்லாம் தெரிந்தவர்களும் கிடையாது.எதுவும் தெரியாதவரும் கிடையாது.எனவே எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தை விட்டொழிக்கவேண்டும் என உணர்ந்தான்.

நாமும் எவரையும்'  இவருக்கு என்ன தெரியப்போகிறது' என ஒதுக்கிவிடக்கூடாது.

Saturday, January 9, 2021

59. ' நாம் நாமாக இருக்கவேண்டும்..(நீதிக்கதை)



 கழுதை ஒன்று வழி தெரியாமல் காட்டிற்குள் வந்துவிட்டது. வரும் வழியில் பல மிருகங்கள் எதிரே பயத்துடன் ஓடி வந்தன.அவற்றில் ஒன்றான மானைப் பார்த்து' ஏன் அனைவரும் இப்படி பயந்து ஓடி வருகிறீர்கள்' என்று  கேட்டது கழுதை

இந்த காட்டில் சிங்கம் ஒன்று உள்ளது.அதைக் கண்டு பயந்து ஓடுகிறோம் என்றது மான்.

சிங்கத்தை நினைத்தபடியே நடந்து சென்ற கழுதை ஆறு ஒன்றைப் பார்த்தது.

அதில் தண்ணீர் குடிக்கச்சென்றபோது ...வேட்டையாட வந்த சிலர் தாங்கள் வேட்டையாடிய ...புலி. சிங்கம்,மான்  ஆகிய விலங்குகளின் தோல்களை பாறைகளின் மேல் உலர்த்தி வைத்திருந்தனர்.

அதைப்பார்த்த கழுதைக்கு ஒரு ஆசை வந்தது.உடனே ஒரு சிங்கத்தின் தோலை எடுத்து போர்த்திக்கொண்டது.இப்போது அது பார்ப்பதற்கு சிங்கம் போலவே இருந்தது.மற்ற மிருகங்களும் கழுதையை சிங்கம் நினைத்து பயந்து ஓடின.இதைப் பார்த்த கழுதைக்கு கர்வம் அதிகமானது.

சிறிது தூரம் சென்ற கழுதை வழியில் ஒரு நரியை பார்த்தது.நரியும் பயந்துகொண்டே 'சிங்க ராஜா..நான் தெரியாமல்  இந்த பக்கம் வந்துவிட்டேன்.இனி நான் உங்கள் பக்கம் வரமாட்டேன்' என்றது.

இப்போது கழுதைக்கு சிங்கம் போல கர்ஜிக்கவேண்டும் என்ற ஆசை வந்தது.' ங்கே,,,ங்கே' என கத்தியது.உடனே நரிக்கு அது கழுதை எனத்தெரிய அது அதனை மதிக்கவில்லை.

"ஏய் கழுதையே நீ  சிங்கத்தோல் போட்டாலும் உன் உண்மையான குரலை மாற்ற முடியாது' எனக்கூறியது நரி.இதனிடையே எல்லா மிருகங்களும் அங்கு வந்து கழுதையைக் கேலி செய்தன.

எப்போதுமே நாம் பிறரைப்போல் இருக்கவேண்டும் என்று நினைக்கக்கூடாது.நாம் ...நாமாகவே இருக்கவேண்டும்.

Friday, January 8, 2021

58. ' வினை விதைத்தவன் வினை அறுப்பான்... (நீதிக்கதை)

 



ஒரு யானை தினமும் ஒரு தெரு வழியே ஆற்றுக்கு சென்று தண்ணீர் குடித்து வருவது வழக்கம்.

அந்த தெருவில் தையல்காரன் ஒருவன் கடை நடத்தி வந்தான்.யானை ஆற்றுக்கு போகும்போது ஒரு வாழைப்பழத்தை வழக்கமாக தினமும் கொடுப்பது வழக்கம்.

ஒரு நாள் அவன் மனைவியிடம் சண்டையிட்டதால் மிகவும் கோபமாக இருந்தான்.

அப்போது யானை வழக்கம் போல் வந்தது.கோபத்தில் இருந்த கடைக்காரன்' உனக்கு தினமும் இது வழக்கமாகி விட்டது' என்று கூறி வாழைப் பழத்தில் தையல் ஊசியை செருகி யானைக்கு கொடுத்துவிட்டான்.

அதை கண்டுபிடித்த யானை ஒன்றும் சொல்லாமல் அந்தப் பழத்தை தூக்கி எறிந்துவிட்டு அந்த தையல் காரனுக்கு புத்தி புகட்டவேண்டும் என்று எண்ணி ஆற்றுக்கு சென்றது.

தண்ணீரை குடித்துவிட்டு தன் தும்பிக்கை நிறைய சேற்று நீரை உறிஞ்சு கொண்டு அந்த தையல் கடைக்கு வந்து....சேற்று நீரை அவன் கடையில் வைத்திருந்த புதிய துணிகளில் பீச்சி அடித்தது.அனைத்து துணிகளும் வீணாயின.தையல்காரன் மக்களிடம் திட்டும் அடியும் வாங்கினான்.

நம்மால் முடிந்தால் பிறர்கு உதவவேண்டும்.நம்மால் முடியாவிடின் அவர்களுக்கு எந்த நஷ்டத்தையும் கொடுக்கக்கூடாது.

நாம் ஏதேனும் தீங்கு செய்தால் நமக்கு ஒரு தீங்கு வந்து சேரும்.

Thursday, January 7, 2021

57. தவளையும் எலியும்..(நீதிக்கதை)

 


ஓரு அழகான குளம். 'குளத்தின் கரையில் இருந்து ஒரு பெரிய மரப்பொந்தில் எலி ஒன்று வசித்து வந்தது.அந்த எலிக்கு குளத்தில் வாழ்ந்து வந்த தவளையின் நட்பு கிடைத்தது. தினமும் அவை இரண்டும் சந்தித்து பேசிக்கொண்டிருக்கும்.

ஒரு நாள் எலி தவளை நீரில் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்த்து  தனக்கும் தவளை நீச்சல் கற்றுத் தரமுடியுமா?' என்று கேட்டது.

'சரி'என ஒப்புக்கொண்ட தவளை தன்னுடைய காலை எலியின் காலுடன் சேர்த்து 

ஒரே கயிற்றினைக் கட்டிக்கொண்டு  தண்ணீரில் இறங்கியது.

அப்போது மேலே பறந்து கொண்டிருந்த கழுகு ஒன்று இவர்களைப் பார்த்து தாக்க வந்தது. அதைப்பார்த்த தவளை தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள  சுண்டெலியுடன் தண்ணீரில் மூழ்கியது.தண்ணீரில் மூழ்கிய எலி மூச்சு திணறி இறந்து போனது.இறந்த உடல்மேலே மிதந்த போது அதனுடைய கால்கள் தவளையையும் சேர்த்து கட்டப்பட்டிருந்தது.

தண்ணீரில் எலி செத்துக் கிடப்பதைப்பார்த்த கழுகு ...அதைக்கொத்திக்கொண்டு பறந்தது.அதனுடன் சேர்ந்து கட்டப்பட்டிருந்த தவளையும் கழுகின் பிடியில் சிக்கியது.

கழுகு தவளையயும் கொன்று தின்னது.

நாம் ஒருவரை நண்பனாக தேர்ந்தெடுக்கும் முன் ....அவர்கள் நமக்கு தகுதியானவர்களா என யோசித்து ஒட்டிக் கொள்ளவேண்டும்.