Friday, July 7, 2023

45. திட்டமிடுதல்

 
  45 - திட்டமிடுதல்


முருகனின் தந்தை ஒரு விவசாயி. அவரிடம் சிறு விவசாய நிலம் ஒன்று இருந்தது.அதில் நான் கு தென்னை மரங்களும் உண்டு.

முருகனின் தகப்பனார் இதில் வரும் சொற்ப வருமானத்தைக்கொண்டு முருகனை பக்கத்திலுள்ள அரசு பள்ளியில் படிக்க வைத்தார். அவன் எட்டாவது படித்துக்கொண்டிருந்தான்.முருகன் படிப்பிலும் நல்ல புத்திசாலி.அவனுக்கு விவசாயத்திலும் ஈடுபாடு அதிகம்.

விடுமுறை நாட்களில் தந்தையுடன் விவசாய நிலத்தை அவன் பார்வையிடுவது வழக்கம்.

ஒரு நாள் அப்படி  செல்லும்போது பக்கத்து நிலத்தில் அந்த விவசாயிக்கு மூன்று கருவேலமரங்கள் உள்ளன.அதை வெட்டுவதற்கு  அவர் மூன்று பேரை அழைத்து ' நீங்கள் மூன்று மணிநேரத்தில் யார் வேகமாக மரத்தை  வெட்டுகிறார்களோ அவர்களுக்கு சன்மானம் அதிகம்'என்று கூறினார்.

அதில் இரண்டு பேர் கோடாரியை வாங்கியவுடன் மரத்தை வெட்ட ஆரம்பித்தனர்.மூன்றாமவர் இரண்டு மணிநேரம் கோடாரியை கூர்மையாக்கிவிட்டு மரத்தை வெட்ட களத்தில் குதித்தார்.அவரே சவாலில் ஜெயித்தார்.

இதை பார்த்துக்கொண்டிருந்த முருகனிடம் அவனது தந்தை "அந்த மூன்றாம் நபர் எப்படி வெற்றி பெற்றார் என்பதை கவனித்தாயா? அவரது வெற்றியில் ஒரு திட்டமிடுதல் இருந்தது.எந்த காரியத்தை செய்வதிலும் ஒரு திட்டமிடுதலும்,புத்திசாலித்தனமும் அவசியம்.ஓட்ட பந்தயத்தில் ஓடுபவர்கள் கூட முதலில் மெதுவாக ஆரம்பித்து போகப்போக வேகத்தை கூட்டுவார்கள்.அதுபோல் நீயும் எந்த பாடத்தை ஆரம்பிக்கும் முன் ஒரு திட்டமிடுதல் வேண்டும்.அதுவே உனக்கு வெற்றி க்கு வழி தரும்.உன்  புத்திசாலிதனத்தால் நீ அடைய வேண்டியதை அடையலாம்" என்றார்.