Friday, July 14, 2023

46.உருவ கேலி கூடாது

 

46- உருவ கேலி கூடாது




ஒரு மிருக காட்சி சாலையில் ஒட்டகம்,யானை ,மான் மூன்றும் நண்பர்களாக இருந்தனர்.

ஆனால் ஒட்டகம் மட்டும் எப்போதும் மானைப்பார்த்து ‘ உனக்கு நீண்ட காதுகளும்,பெரிய கொம்புகளும் சிறிய வயிறும் இருக்கு’. பார்க்க நன்றாக இல்லை' என்று கேலி செய்யும்.

யானையை பார்த்து ‘நீ பருமனானவன்.உன் தோல் மிகவும் தடிப்பானது.கால்களும் தூண்கள் போன்றவை.முறம் போன்ற காதுகள்,நீண்ட தும்பிக்கை,சம்பந்தமில்லாமல் தந்தம் வேறு’ என்று கேலி செய்யும்.

யானையும் மானும் ஒன்றும் சொல்லாமல் நம்மை இறைவன் இப்படி படைத்துவிட்டான் என்ன செய்வது.காரணமில்லாமல் இறைவன் எதையும் செய்யமாட்டான் என்று தன்னைத்தானே தேற்றிக்கொள்ளும்

ஒரு நாள் மிருக காட்சி சாலைக்கு ஒரு ஆளுயுர முகம் பார்க்கும் கண்ணாடியை அந்த நிறுவத்தினர் கொண்டு வைத்தனர்.அதைப்பார்க்க எல்லா மிருகங்களும் ஆவலோடு  ஓடி வந்தன.

ஒட்டகமும் வந்தது.தன் உருவத்தை பார்த்தது.

‘நீண்ட கால்கள்,முதுகின் பின்புறம் உள்ள திமில்பெரிய மற்றும் தட்டையான பாதங்கள், நீண்ட கண் இமைகள்,மெல்லியபிளவுபட்ட நாசித்துவாரங்கள்,மிக நீண்ட வயிறு’ இவ்வளவும் கொண்ட விகாரமான உருவம் யார் ?"என்று  யானையிடமும் மானிடமும் கேட்டது.

அவர்கள் இருவரும் "நீ தான் இத்தகைய அம்சங்களைக்கொண்டவன்." என்றன

"நீ எப்பொழுதும் எங்கள் உருவத்தை கேலி செய்து கொண்டிருக்கிறாய்.உன் உருவத்தை பற்றி உனக்கு தெரியவில்லை.ஆண்டவ்னின் படைப்பில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.அவை எல்லாம் நன்மைக்குத்தான்.நீ பாலைவனங்களில் அதிகமாக் காணப்படுவ்தால் இந்த மாதிரி உருவம் இறைவன் உனக்கு கொடுத்திருக்கிறார்.அதை புரிந்துகொண்டு நீ இனிமேல் யாரையும் ஏளனமாக உருவக்கேலி செய்யாதே!" என்றன.

ஒட்டகமும் தன் தவறை உண்ர்ந்து அன்று முதல்அவர்களுடன் நண்பனாக இருந்தது.

..