47- விழிப்புணர்வு
குரு சிஷ்யர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.
அப்பொழுது ஒரு சிஷ்யன் ஐயா, நாங்கள் எப்படி ‘விழிப்புணர்வு’ பெறுவது என்று கேட்டான்.
குரு உடனே நீங்கள் உங்களை"அறிவால்’ நிரப்பிக்கொள்ளுங்கள்' என்றார்.
சிஷ்யர்களுக்கு புரியவில்லை".சற்று விளக்கமாக கூறுங்கள்" என்றனர்.
குரு உடனே அவர்களிடம் ‘அறிவால் நிரப்பிக்கொள்வது என்றால் ...பல நூறு ஓட்டைகளை கொண்ட சல்லடையில் நீரை நிரப்புவதாகும்" என்றார்.
பின் சீடர்களிடம், " நீங்கள் போய் முயன்று பாருங்கள்" என்றார்.
சீடர்கள் வெளியே வந்து சல்லடையில் தண்ணீர் ஊற்ற அது முற்றிலும் ஓட்டைகள் வழியாக வெளியே வந்தன.
இன்னொரு சீடன் "ஐஸ் கட்டியை போடலாம்" என்று கூற அதையும் செய்து பார்த்தனர்.அதுவும் சிறிது நேரத்தில் உருகிவிட்டது.
என்ன செய்வது என்று புரியாமல் குருவிடம் வந்து தங்களது இயலாமையக் கூறினர்.
குரு உடனே சீடர்களே "சல்லடையை எடுத்துக்கொண்டு என்னோடு வாருங்கள்" என்றார்.
சீடர்களும் அவர் பின்னால் சென்றனர்.
குரு சீடர்கள் குளிக்கும் பெரிய நீர் தொட்டியில் சல்லடையை போட்டார். சல்லடை நீருக்குள் மூழ்கியது.சீடர்களிடம் "இப்பொழுது சல்லடையில் நீர் நிரம்பியுள்ளது பார்த்தீர்களா"என்றார்.
"அதுபோல விழிப்புணர்வு பெறுவது எப்படி என்று கேட்டீர்களே அதை பெற அறிவு என்னும் கடலுக்குள் உங்களை தூக்கிப்போடுங்கள்.அறிவு உங்களை விட்டு விலகாது எ"ன்றார் குரு.
சீடர்களுக்கு தெளிவு பிறந்தது.
1 comment:
அறிவு அற்றம காக்கும் கருவி...
Post a Comment