6 - பூட்டும்-சாவியும்
வீட்டின் வாசலில் நின்றிருந்த ராமனாதன் தன்மனைவியிடம் 'பூட்டைத் திறக்கும் சாவியைக் கொடு என்றார்'. ராமனாதனின் மனைவியோ சாவியை எங்கே வைத்தோம் என்பதை மறந்து தன் கைப்பையை நோண்டிக் கொண்டிருந்தாள்.
சாவி கிடைக்காததால்...பக்கத்தில் இருக்கிற வீட்டிலிருந்து ஒரு சுத்தியை வாங்கி பூட்டை உடைக்க ஆரம்பித்தார்.சுத்தியால் வாங்கிய அடி பூட்டிற்கு மிகவும் வலித்தது.அந்நேரம் சாவியை மனைவி கண்டுபிடித்து விட...அதனால் பூட்டை எளிதாக திறந்து விட்டார் ராமனாதன்.
அப்போது சுத்தியல் சாவியை பார்த்து . ' பூட்டின் தலையில் என்னை அவ்வளவு பலமாக அடித்தவர் உன்னை உபயோகித்து உடனே திறந்துவிட்டாரே.....அது எப்படி 'என்றது..
அதற்கு சாவி சொன்னது...' நீ பூட்டை திறக்க அன்புடன் செயல்படாது வன்முறையை உபயோகித்து அதன் தலையில் அடித்தாய்,அதனால் அது திறக்கவில்லை,ஆனால் நானோ அன்பாக அதன் இதயத்தில் நுழைந்து திறக்க முயற்சித்தேன்,என் அன்புக்கு கட்டுபட்டு அது திறந்தது.'
எவ்வளவு கடினமானவர்களாக இருந்தாலும் ..தன் இதயப்பூர்வமான அன்பினைச் செலுத்தினால் ...அவர்களை மாற்றிவிட முடியும் என்பதை உணரவேண்டும்.
2 comments:
அன்பிற்கு ஈடு இணை ஏது...
நல்ல கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ஆகா...! அருமை...
Post a Comment