Tuesday, February 9, 2021

5. பேராசை... (நீதிக்கதை)

5- பேராசை 


55

ஓட்டை வாளியில் தண்ணீர் ஊற்றினால்  எப்படி நிற்காதோ..அது போல திருப்தியற்ற மனம் உள்ளவர்களுக்கு எத்தனை சந்தோஷம் வந்தாலும் அது தங்காமல் அவர்கள் மனம் சோக மயமாகவே இருக்கும்.

குமரனின் மாமா கந்தசாமி...குமரனுக்கு சொத்துகளை எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார்.

அதனால் மிகவும்  சோகமாக இருந்த குமரனிடம் ' உன் மாமாவிற்கு வயது எண்பதுக்கு மேல் ஆகிவிட்டது.வயது மூப்பின் காரணமாகவே இறந்துவிட்டார்.மரணம் இயற்கையல்லவா..ஆனால் அதேநேரம் அவர் அவரது சொத்துக்களை உனக்கு எழுதி வைத்ததற்காக சந்தோஷப்படு" என்றான்ஒரு நண்பன்.

'என் சோகம் உனக்கு தெரியாது...இப்படித்தான் போன வாரம் என் சித்தப்பா பத்து லட்சம் சொத்தை என் பெயருக்குஎழுதி வைத்துவிட்டு அமரராகி விட்டார் 

உனக்கு தெரியாது.' பணக்காரர்களக இருந்து என் மாமாவும் சித்தப்பாவும் இறந்துவிட்டார்கள்.இனிமேல் என் பேரில் சொத்துஎழுதிவைக்க உறவு யாருமில்லை' என்றான்

.ஆசைக்கு அளவு வேண்டும். பேராசை கொண்டவன் எப்போதும் திருப்தி அடையமாட்டான்.

எப்போதும் திருப்தி அடையாதவன் எந்நாளும் சந்தோஷமாக இருக்கமுடியாது.

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

ஆசைப் படலாம். பேராசை படக்கூடாது!

சிறப்பான விஷயத்தினைச் சொன்ன கதை.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.