Tuesday, February 2, 2021

3. பிரச்சனையை தீர்க்கும் வழி...(நீதிக்கதை)

3-பிரச்னையை தீர்க்கும் வழி





 ஓரு நாட்டின் அரசன் தனக்கு சமயோசித புத்தியுள்ள முதலமைச்சர் ஒருவரை தேர்ந்தெடுக்க எண்ணினான்.

அவரது அமைச்சரவையில் நான்கு அமைச்சர்கள் இருந்தனர்.அவர்களை அழைத்து அரசன் 'என்னிடம் ஒரு பெரிய பூட்டு இருக்கிறது.கணித முறைப்படி வடிவமைக்கப்பட்ட  அப்பூட்டை திறக்கவேண்டும்'. நாளை உங்கள் அனைவருக்கும் அதற்கான வாய்ப்பு தரப்படும்.யார் பூட்டை  குறைவான நேரத்தில் திறக்கிறார்களோ அவரே முதலமைச்சர் ஆவார்.' என்றார்.

முதலமைச்சர் ஆகும் ஆசையில்,அவர்கள் பூட்டு பற்றிய ஓலைச்சுவடிகளையும்,கணிதம் பற்றிய எல்லா குறிப்புகளையும் தேடினார்கள்.எதுவும் கிடைக்கவில்லை.ஒரு அமைச்சர் மட்டும் ' இந்த அறிவிப்பில் ஒரு மர்மம் இருப்பதாக எண்ணினார்;. அதைப்பற்றி மட்டும் யோசிக்கலானார்.

அடுத்த நாள் அரசவையில் அந்த பூட்டை சேவகர்கள் தூக்கி வந்து மையப்பகுதியில் வைத்தனர்.பூட்டின் பிரம்மாண்டம் அமைச்சர்களுக்கு படபடப்பை அதிகரித்தது.ஆனால் மூன்று அமைச்சர்களுக்கு பூட்டை எப்படி திறப்பது என்று புலப்படவில்லை. அதனால் தோல்வியை ஒப்புக்கொண்டனர்.

நான்காவது அமைச்சர் பூட்டின் அருகே வந்து பூட்டை பார்த்தார்.பூட்டு பூட்டப்படவில்லை. சாவியே இல்லாமல் எந்த கணித சூத்திரமும் இல்லாமல் பூட்டை திறந்தார். அரசர் அவரை அமைச்சர் ஆக்கினார்.

பிரச்சனையை தீர்க்கவேண்டுமானால் முதலில் பிரச்சனையை புரிந்துகொள்ளவேண்டும்.மனம் பதட்டமில்லாமல் ஆற அமர சிந்திக்கவேண்டும்.அப்போதுதான் பிரச்சனைக்கு தீர்வானது கிடைக்கும்.


5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆம்... உண்மை...

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு கதை.

Kanchana Radhakrishnan said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்

Kanchana Radhakrishnan said...

நன்றி வெங்கட் நாகராஜ்

Anonymous said...

Coin Casino | The Best Casino | No Deposit Bonuses
The Best Coin Casino is Not for No Deposit. งานออนไลน์ This online 샌즈카지노 casino has you covered in the best free spins and 인카지노 no deposit bonuses. Read more here.