Friday, February 5, 2021

4.ஆணவம் வேண்டாம் ...(நீதிக்கதை)

   4- ஆணவம் வேண்டாம்


 ஓரு ஊரில் மெத்தப்  படித்தவன் ஒருவன் இருந்தான்.மற்றவர்கள் எல்லாம் அவனைவிட ஏட்டுக்கல்வியினை குறைவாகவே படித்தவர்கள்.அதனால் அவனுக்கு தனக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவம் உண்டு.அதனால் அவன் அனைவரையும் அலட்சியம் செய்து வந்தான்.

அந்த ஊருக்கு ஒரு நாள் ஒரு துறவி வந்தார்.ஊர் மக்கள் அவரை வரவேற்று..வணங்கி மகிழ்ந்தனர்.

அவரைக்காண அந்த அறிவாளியும் வந்தான்.அவனைப்பற்றி துறவி முன்னரே கேள்விபட்டிருந்தார். அவருக்கு  முன்னால் கால் மீதுகால் போட்டு அமர்ந்து ஆணவத்துடன் ...'உங்களை மக்கள் மதிக்கிறார்கள்' ஆனால் உண்மையில் உங்களை விட நான் அதிகம் அறிந்தவன்' என்றான்.

அதற்கு துறவி..' இந்த உலகில்  அனைத்தும் அறிந்தவன் எவனும் இல்லை.கற்றது கைம்மண் அளவு தான்.உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்.நமது அறிவு என்பது ஓர் எறும்பு போல ...நமக்கு தெரியாத விஷயங்கள் யானையைப் போல....யானையின் காலுக்கு அடியில் கிடக்கும் எறும்பால்....என்றுமே யானையை முழுமையாக பார்த்து விட முடியாது.யானையின் ஒரு பகுதியைத் தான் பார்க்கமுடியும்.எறும்பின் பார்வையைப் போல உங்களது அறிவு கூர்மையாக இருக்கலாம். ஆனால் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை யானையை போல . இதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு என்று வருகிறதோ அன்று தான் உங்கள் ஆணவம் குறையும்' என்றார்.

சிறிது யோசித்த அறிவாளி,துறவி சொன்னது உண்மை என உணர்ந்து...அவரிடம் மன்னிப்பு க்கேட்டான். அன்று முதல் ' அனைத்தும் தனக்கு தெரியும்' என்ற ஆணவத்தைவிட்டான்.

உலகத்தில் எல்லாம் அறிந்தவன் என்று யாருமில்லை என்பதைஉணர்ந்தால் ..யாருக்கும் ஆணவம் ஏற்படாது.

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி