7 - அன்னமும்...காகமும் -
அந்த ஊருக்கு வெளியே ஒரு பெரிய அரசமரம் இருந்தது.அதில் அன்னம் ஒன்றும்...காக்கை ஒன்றும் நண்பர்களாக வசித்து வந்தன.
ஒருநாள் கடும் வெயிலில்...வேடன் ஒருவன் களைப்புடன் அங்கு வந்து மர நிழலில் தன் வில்..அம்பு ஆகியவற்றை பக்கத்தில் வைத்துக்கொண்டு படுத்து உறங்கினான்.
ஆனால் சிறிது நேரத்தில் வெயில் ஏற.. வெயில்அவன் முகத்தில் விழுந்தது.
வாயைத்திறந்து கொண்டு அசதியில் தூங்கும் அவன் மீது வெயில் விழுவதைப்பார்த்து பரிதாபப் பட்ட அன்னம் தன் இறக்கைகளை நன்றாக விரித்து அவன் முகத்தில் நிழல் விழுமாறு செய்தது.
அதேசமயம் பிறர் நலனை சற்றும் எண்ணாத குணம் கொண்ட காகம் அவனது திறந்த வாயில் எச்சத்தை விட்டு பறந்து சென்றது.
எழுந்து உட்கார்ந்த வேடன் ..தன் மேலே சிறகு விரித்துக் காணப்பட்ட அன்னம்தான் எச்சமிட்டுவிட்டது என எண்ணி ..சற்றும் சிந்திக்காது அம்பை எய்தி அதைக்கொன்றான்.
குணம் கெட்ட காகத்துடன் கூடா நட்பு கொண்டிருந்ததாலே அன்னம் உயிர் நீக்க நேர்ந்தது.
நாமும் நமது நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
கூடா நட்பினை தவிர்க்கவேண்டும்.
1 comment:
நல்லதோர் நீதிக் கதை.
Post a Comment