Thursday, January 30, 2025

2. கல்விச் செல்வம்




 கருப்பன் ஒரு அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தான். அவன் ஒரு ஏழை.அவனது அப்பா அம்மா இருவரும் படிக்காதவர்ககள்.அரசாங்கம் அமைத்துள்ள ' 100நாள் வேலை' திட்டத்தில்  வேலை செய்பவர்கள். கருப்பனுக்கு வீட்டில் வழிகாட்ட யாரும் இல்லாததால் அவன் வகுப்பில் சுமாராகத்தன் படிப்பான்.

இதனால் அவனுடன்  படிக்கும் மற்ற சிறுவர்கள் அவனிடம் பேசுவதில்லை.அவனை குறை கூறிக்கொண்டேயிருப்பார்கள்.அதனால் வருத்தமடைந்த கருப்பன் வீட்டில் அவனது தந்தையிடம் கூறி அழுதான்.

அவனது தந்தை 'கருப்பா அழாதே.உன்னோடுயாரும் பேசாதபோது உன்னை குறைகூறும்போது உனக்கு கோபம் வரும்.அந்த சமயங்களில் நீ மௌனமாக இருப்பதே சிறந்தது.

மேலும் நீ படிக்கும் விஷயத்தில் கவன்ம் செலுத்து,புரியாதது எதுவும் இல்லை.மீண்டும் மீண்டும் படிக்க எல்லாம் புரியும்.வகுப்பில் முதல் மாணவனாக வருவதற்கு முயற்சி செய்.பின் உன் பின்னால் எல்லோரும் வருவார்கள் என்று அறிவுரை கூறினார்.

கருப்பனும் தந்தை சொல் கேட்டு நன்றாக படித்து வருடாந்திர தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்து வகுப்பில் சிறந்த மாணவனாக திகழ்ந்தான்.சக மாணவர்கள் அவனுடன் நணப்ர்களாக பழ்க ஆரமித்தனர்.

Tuesday, January 28, 2025

சிறுவ்ர் கதைகள்----- 1.எதிலும் குறை காணாதீர்கள்

 


1.எதிலும் குறை காணாதீர்கள்

---------------------------------------------------------

சிதம்பரத்திற்கு அருகே உள்ள ஒரு கிரமத்தில் சங்கரன் என்பவன் ஒரு ஹோட்டeலை நடத்தி வந்தான்.அந்த ஹோட்டல் நெடுஞ்சாலைக்கு அருகில் இருப்பதால் அவனுடைய ஹோட்டலுக்கு கூட்டம் அதிகம் வரும்.

சமீபகாலமாக அந்த ஹோட்டலின் இட்லியை விரும்பி சாப்பிடுபவர்கள் அதிகமாக இருந்தனர்.இட்லி மாவை அரைப்பதற்கு ஆட்கள் தேவைப்பட்டனர்.அடுத்த நாள்' ஆட்கள் தேவை' என விளம்பரம் செய்தான்.

விளம்பரத்தை பார்த்து ராமன் என்பவன் வந்தான்.அவனிடம் சங்கரன் ஒரு கிலோ அரிசியும் அதற்கு தேவையான உளுந்தும் கொடுத்து அரைக்க சொன்னான்.ராமன் அரைத்து முடித்தவுடன் இவனிடம் காண்பித்தான்.சங்கரன் உடனே அரைத்த பதம் போதாது 'வெண்ணெய்" போல் இருக்கவேண்டும் என்றான்.

இரண்டு முறை மீண்டும் மீண்டும் அரைத்தும் சங்கரன் திருப்தி அடையவில்லை.

மூன்றாம் முறையாக ராமன் உண்மையான வெண்ணையை கொண்டு வந்து காண்பித்தான்.அப்பொழுதும் சங்கரன் வெண்ணெய் போல் இருக்கவேண்டும் என்றான்.

உடனே ராமன் இந்த முறை நான் வெண்ணையைத்தான் கொண்டு வந்தேன்.அதுவும் மாவு என்று எண்ணி வேண்டுமென்றே குறை சொன்னீர்கள்.உங்கள் நோக்கம் குறை சொல்வதுதான் என்று தெரிந்து கொண்டேன்,இப்படிப்பட்ட ஒருவரிடம் நான் வேலை செய்ய விரும்பவில்லை என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்,

நாமும் எப்பொழுதும் ஒருவர் செய்யும் வேலையை குறை கூறிக்கொண்டே இருக்கக்கூடாது,

Friday, September 1, 2023

50.-உறுதி..முயற்சி..நம்பிக்கை

50 - உறுதி,முயற்சி,நம்பிக்கை 




சரவணன் ஒரு ஏழை விவசாயியின் மகன்.

ஒருநாள்,சரவணனின் மாமா அவனுக்கு ஒரு பேனா பரிசளித்தார்..பின் அவனிடம்  ‘நீ படித்து என்னவாகப்போகிறாய்  ?’என்று கேட்டார்.

அவன்  ‘கலைக்டர் ஆவேன்’ என்றான்.

அவன் மாமா அவன் பதிலைக் கேட்டு சிரித்துவிட்டு  ‘ நீ ஒரு ஏழை…உன்னால் எப்படி அவ்வளவு பெரிய பதவியை அடைய முடியும்’ என்றார். 

பள்ளிக்கு அழுதபடியே வந்தவனை பள்ளி தலைமை ஆசிரியர் பார்த்து,அவன் அழுவதின் காரணத்தைக் கேட்டார்.அவனும் தன் மாமா சொன்னதை சொல்லி ‘ஏன் சார் என்னால் கலைக்டர் ஆக முடியாதா?’ என்று கேட்டான்.

"கண்டிப்பாக முடியும்..நன்கு படித்து ..நேர்மையான வழியில்  உழைத்தால்..கலைக்டர் மட்டுமல்ல நீ எண்ணிய இலக்கை அடையலாம்.முதலில் நம்மால் முடியும் என்ற நம்பிக்கை வேண்டும்’ என்றார்.

அவர் கூறியதை மனதில் கொண்டு சரவணன் நன்கு படித்து எல்லா பரீட்சைகளிலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து கலைக்டர் பதவிக்கு வந்தான்.

இன்று ..அவன் படித்த பள்ளியில் ஆண்டுவிழா நிகழ்ச்சி அவன் தலைமையில் நடக்க இருக்கிறது.

நிகழ்ச்சியில் பேசியவன்.."மாணவர்களே! நம்மால் முடியாதது என்று எதுவுமே இல்லை.முதலில் நாம் ஒரு இலக்கை நிர்ணயித்து கொண்டு..அதை அடைந்தே தீருவேன்..என்ற நம்பிக்கையுடன் செயல் பட்டால் வெற்றி நிச்சயம்" என்றான்.

நாமும் நம் விரும்பிய வாழ்வை அடைய வேண்டுமானால் அதற்கான உறுதி, முயற்சி,நம்பிக்கை ஆகியவற்றுடன் செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.

Wednesday, August 30, 2023

49.தேனீயும் ..கொடுக்கும்

49.தேனீயும் கொடுக்கும்



 ஒரு மரத்தில் தேன் கூடு ஒன்று இருந்தது.தேனீக்களின் தலைவியாகிய ராணித் தேனிக்கு கடவுளை சந்திக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்ததால்,அது கடவுளை நினைத்து தவம் செய்தது.

ராணித் தேனியின் முன் கடவள் தோன்றி..’உனக்கு என்ன வரம் 

வேண்டும்? "என்று கேட்டார்.

‘இறைவா… என்னிடமிருக்கும்  தேனை நாடி வருவோரைக்கொட்டி…அவர்கள் சகிக்க முடியாத வேதனையை அனுபவிக்குமாறு செய்து அருள வேண்டும்’ என்று ராணித் தேனி கேட்க…கடவுளுக்கு வருத்தம் ஏற்பட்டது.

‘தேனியே..பிறர்க்கு உதவ வேண்டும் என நீ கேட்டிருந்தால்  எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும்.ஆனால் நீயோ பிற்ர்க்கு  தொல்லை தரவேண்டும் என வரம் கேட்கிறாய்.நீ கேட்ட வரத்தை கொடுக்கிறேன்,ஆனால் பிறரை துன்புறுத்தவேண்டும் என நினைக்கும் உனக்கு ஒரு பாடம் கற்பிக்க விரும்புகிறேன்..எனது வரம் மூலம் உனக்கு கொடுக்கு ஒன்று முளைக்கும்.அந்த கொடுக்கினால் மற்றவர்களை கொட்டி துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும்போது உன்  கொடுக்கின் நுனி உன்னால் கொட்டப்பட்டுள்ளவரின் உடலில் ஒட்டிக்கொள்ளும்.உடன் நீ இறந்து விடுவாய் "என்று கூறி மறைந்தார்.

அன்றுமுதல் தேனி  யாரையும் கொட்டவில்லை.ஏனெனில் கொட்டினால் அது  இறந்துவிடுமே.

வன்முறையால் அழிந்துவிடுவோம்  ஆகவே  வன்முறையில் ஈடுபடாமல் நாம் பிறர்கு நன்மை செய்யவேண்டும்…அப்படி நடந்தால் நமக்கும் நன்மை  வந்து சேரும்.

Sunday, July 16, 2023

48.தகுதி

48.தகுதி




ராமன்,வாசுகி தம்பதியருக்கு கந்தன் ஒரே பையன்.

பக்கத்திலுள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறான்.படிப்பிலும் கெட்டிக்காரன்.விளையாட்டிலும் ஆர்வம் அதிகம்.

ஆனால் அவனிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது,அளவுக்கதிகமாக இனிப்பு சாப்பிடுவான்.வீட்டில் இனிப்பு ஏதும் இல்லாவிடில் சர்க்கரை டப்பாவை காலி செய்து விடுவான்.

கந்தனின் பெற்றோருக்கு கந்தனின் இந்த கெட்ட பழக்கம் மிகவும் கவலையை  உண்டு  பண்ணியது.பிற் காலத்தில் அவனது உடல் நலம் இதனால் கெட்டுவிடும் என்று அஞ்சினர்.

பக்கத்து வீட்டு நண்பர் ஒருவர் கந்தனின்  தந்தையிடம் "பக்கத்து ஊரில் ஒரு வைத்தியர் உள்ளார்..அவர் மருத்துவர் மட்டுமல்லாது மன ரீதியான ஆலோசனைகளையும் கூறுவார்.அவரிடம் கந்தனை கூட்டிச்செல்லுங்கள்" என்றார்.

 அவனது பெற்றோர் அவனை பக்கத்து ஊர் மருத்துவரிடம்  காண்பித்தனர்.ம்ருத்துவர் கந்தனின் கெட்ட பழக்கத்தை கேட்டுவிட்டு," ஒரு வாரம் கழித்து வாருங்கள். நான் இதற்கு ஒரு தீர்வு சொல்கிறேன்" என்றார்.

கந்தனின் பெற்றோருக்கு ஒரே ஆச்சிரியம்,ஏன் மருத்துவர் ஒரு வாரம் கழிச்சு வரச்சொன்னார் என்று.ஒன்றும் புரியவில்லை  அவர்களுக்கு.

அடுத்த வாரம் வந்தது.கந்தனின் பெற்றோர் அவனை மருத்துவரிடம் அழைத்து சென்றனர்.

அவரிடம் கந்தனின் தந்தை" எங்களை ஏன் ஒரு வாரம் கழிச்சு வரச்சொன்னீர்கள் "என்று கேட்டார்.

அதற்கு மருத்துவர்," ஒருவருக்கு அறிவுரை  கூறவேண்டுமென்றால் சொல்பவருக்கு ஒரு   தகுதி வேண்டும்..எனக்கு  அன்று அந்த தகுதியில்லை.ஏனென்றால்  நானும் நிறைய இனிப்பு சாப்பிடுவேன் உங்களது  குறையை கேட்டவுடன் நானும் ஒரு வாரமாக இனிப்பு சாப்பிடாமல்..அறிவுரை கூறுவதற்கான தகுதியினை உண்டாக்கி கொண்டேன். மேலும்இனிமேலும் இனிப்பை அதிகம் சாப்பிடமாட்டேன்.

கந்தன் நல்ல பையன்.நன்றாக படிக்கிறான்.நான்  சொல்வதைக்கேட்டு அவனும் கொஞ்சம் கொஞ்சமாக இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தி விடுவான்.நீங்கள் கவலைப்படாதீர்கள்.வீடு  போய் சேருங்கள்" என்றார்.

வீட்டுக்கு சென்றவுடன் கந்தனின் நடவடிக்கையில் ஒரு மாற்றம் தெரிந்தது.கொஞ்சம் கொஞ்சமாக அதிகம் இனிப்பு சாப்பிடுவதை  நிறுத்தினான்.

நாம் யாருக்காவது அறிவுரை சொல்ல நேரிட்டால் முதலில் அதற்கான தகுதியை நாம்  உண்டாக்கிகொள்ளவேண்டும்..


Friday, July 14, 2023

47.விழிப்புணர்வு

47- விழிப்புணர்வு 




குரு சிஷ்யர்களுக்கு பாடம்  நடத்திக்கொண்டிருந்தார்.

அப்பொழுது ஒரு சிஷ்யன் ஐயா, நாங்கள் எப்படி ‘விழிப்புணர்வு’ பெறுவது என்று கேட்டான்.

குரு உடனே நீங்கள் உங்களை"அறிவால்’ நிரப்பிக்கொள்ளுங்கள்' என்றார்.

சிஷ்யர்களுக்கு புரியவில்லை".சற்று விளக்கமாக கூறுங்கள்" என்றனர்.

குரு உடனே அவர்களிடம் ‘அறிவால் நிரப்பிக்கொள்வது  என்றால் ...பல நூறு ஓட்டைகளை கொண்ட சல்லடையில்   நீரை நிரப்புவதாகும்" என்றார்.

பின் சீடர்களிடம், " நீங்கள் போய் முயன்று பாருங்கள்" என்றார்.

சீடர்கள் வெளியே வந்து சல்லடையில் தண்ணீர் ஊற்ற அது முற்றிலும் ஓட்டைகள் வழியாக வெளியே வந்தன.

இன்னொரு சீடன் "ஐஸ் கட்டியை போடலாம்" என்று கூற அதையும் செய்து  பார்த்தனர்.அதுவும் சிறிது நேரத்தில் உருகிவிட்டது.

என்ன செய்வது என்று புரியாமல் குருவிடம் வந்து தங்களது இயலாமையக் கூறினர்.

குரு உடனே சீடர்களே "சல்லடையை எடுத்துக்கொண்டு என்னோடு வாருங்கள்" என்றார்.

சீடர்களும் அவர் பின்னால் சென்றனர்.

குரு சீடர்கள் குளிக்கும் பெரிய நீர் தொட்டியில் சல்லடையை போட்டார். சல்லடை நீருக்குள் மூழ்கியது.சீடர்களிடம் "இப்பொழுது சல்லடையில் நீர் நிரம்பியுள்ளது பார்த்தீர்களா"என்றார்.

"அதுபோல விழிப்புணர்வு பெறுவது எப்படி என்று கேட்டீர்களே அதை பெற அறிவு என்னும் கடலுக்குள் உங்களை தூக்கிப்போடுங்கள்.அறிவு உங்களை விட்டு விலகாது எ"ன்றார் குரு.

சீடர்களுக்கு தெளிவு பிறந்தது.

46.உருவ கேலி கூடாது

 

46- உருவ கேலி கூடாது




ஒரு மிருக காட்சி சாலையில் ஒட்டகம்,யானை ,மான் மூன்றும் நண்பர்களாக இருந்தனர்.

ஆனால் ஒட்டகம் மட்டும் எப்போதும் மானைப்பார்த்து ‘ உனக்கு நீண்ட காதுகளும்,பெரிய கொம்புகளும் சிறிய வயிறும் இருக்கு’. பார்க்க நன்றாக இல்லை' என்று கேலி செய்யும்.

யானையை பார்த்து ‘நீ பருமனானவன்.உன் தோல் மிகவும் தடிப்பானது.கால்களும் தூண்கள் போன்றவை.முறம் போன்ற காதுகள்,நீண்ட தும்பிக்கை,சம்பந்தமில்லாமல் தந்தம் வேறு’ என்று கேலி செய்யும்.

யானையும் மானும் ஒன்றும் சொல்லாமல் நம்மை இறைவன் இப்படி படைத்துவிட்டான் என்ன செய்வது.காரணமில்லாமல் இறைவன் எதையும் செய்யமாட்டான் என்று தன்னைத்தானே தேற்றிக்கொள்ளும்

ஒரு நாள் மிருக காட்சி சாலைக்கு ஒரு ஆளுயுர முகம் பார்க்கும் கண்ணாடியை அந்த நிறுவத்தினர் கொண்டு வைத்தனர்.அதைப்பார்க்க எல்லா மிருகங்களும் ஆவலோடு  ஓடி வந்தன.

ஒட்டகமும் வந்தது.தன் உருவத்தை பார்த்தது.

‘நீண்ட கால்கள்,முதுகின் பின்புறம் உள்ள திமில்பெரிய மற்றும் தட்டையான பாதங்கள், நீண்ட கண் இமைகள்,மெல்லியபிளவுபட்ட நாசித்துவாரங்கள்,மிக நீண்ட வயிறு’ இவ்வளவும் கொண்ட விகாரமான உருவம் யார் ?"என்று  யானையிடமும் மானிடமும் கேட்டது.

அவர்கள் இருவரும் "நீ தான் இத்தகைய அம்சங்களைக்கொண்டவன்." என்றன

"நீ எப்பொழுதும் எங்கள் உருவத்தை கேலி செய்து கொண்டிருக்கிறாய்.உன் உருவத்தை பற்றி உனக்கு தெரியவில்லை.ஆண்டவ்னின் படைப்பில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.அவை எல்லாம் நன்மைக்குத்தான்.நீ பாலைவனங்களில் அதிகமாக் காணப்படுவ்தால் இந்த மாதிரி உருவம் இறைவன் உனக்கு கொடுத்திருக்கிறார்.அதை புரிந்துகொண்டு நீ இனிமேல் யாரையும் ஏளனமாக உருவக்கேலி செய்யாதே!" என்றன.

ஒட்டகமும் தன் தவறை உண்ர்ந்து அன்று முதல்அவர்களுடன் நண்பனாக இருந்தது.

..