Friday, February 24, 2023

.12.முயன்றால் முடியாதது இல்லை (நீதிக்கதை)

   12- முயன்றால் எல்லாமே முடியும்


மதன நாட்டு அரசனின் படை மிகவும் சிறியது.அவனால் பக்கத்து ஊர் அரசனிடம் போராடி வெல்ல முடியவில்லை.

தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு எதிரி நாட்டு அரசன் கட்டளையிட்டான்.அதனால் மதன நாட்டு அரசன் ஒருகுகைக்குள் ஓடி ஒளிந்து கொண்டான்,மனச்சோர்வினால் துணிவு இழந்தான்.

ஒரு நாள் சோம்பலுடன் அரசன் குகைக்குள் படுத்துக்கொண்டிருந்தான்.அப்பொழுது  ஒரு சிலந்தி வலையை ப் பின்ன கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது.ஒவ்வொரு தடவையும் அது பின்னிய வலைஅறுந்து விழுந்து கொண்டிருந்தது.அது தன் முயற்சியை கைவிடாமல் மீண்டும் மீண்டும் முயற்சித்தது.

சிலந்தியின் விடாமுற்சியை பார்த்ததும் அரசனுக்கு தைரியம் வந்தது.தானும் சிலந்தி மாதிரி முயற்சி செய்யவேண்டும்,ஓடி ஒளியக்கூடாது என்று சபதம் பூண்டான்.

வெளியே சென்று தனக்கு நம்பிக்கையான ஆட்களை சந்தித்து பலம் மிகுந்த படையை உருவாக்கினான்.தன் எதிரிகளுடன்  மீண்டும் போர் புரிந்து இழந்த நாட்டை  மீண்டான்.

எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் சோர்வு இன்றி முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

முயற்சி+பயிற்சி=வெற்றி...