Thursday, May 26, 2022

9.யானையும் பன்றியும்...

     9- யானையும்..பன்றியும் 




கோயில் யானை ஒன்று அந்த ஊரில் இருந்த நதி ஒன்றில் குளித்துவிட்டு ..நெற்றியில் திரு நீறு மணக்க சுத்தமாக வந்து கொண்டிருந்தது.

ஒரு சிறிய பாலத்தை அது கடக்க முயன்றபோது ...அதன் எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி வாலை ஆட்டிக்கொண்டே வந்தது.

யானை பாலத்தின்  ஓரத்தில் ஒதுங்கி பன்றிக்கு வழிவிட்டது

அதைக்கண்ட பன்றி,,,தனக்கு பயந்து யானை வழி விட்டது என்று தன்னை பற்றி மி கவும் ஆணவம் கொண்டது,.

அத்துடன் நில்லாது ' யானை என்னைக் கண்டு பயந்துவிட்டது ' என்று ஊர் முழுவதும் சொல்லி விட்டது.

இதை கேட்ட மற்றொரு யானை ஒன்று கோயில் யானையிடம் சென்று, 'உண்மையிலே நீ பன்றியைப்பார்த்து பயந்து  விட்டாயா' என்று கேட்டது.

அதற்கு கோயில் யானை சொன்னது'நான் குளித்து சுத்தமாக இருந்தேன்,பன்றியின் சேறு என் மீதுவிழுந்துவிடக்கூடாதே என்று ஒதுங்கினேன்.'

'நான் பன்றியின் மீது ஏறி அதனை துவம்சம் பண்ண்யிருக்கலாம்.அதற்கு ஒரு நொடி கூட ஆகாது.ஆனால் என் கால் அல்லவா சேறாகிவிடும் 'என்றது.

ஆணவக்காரர்களைக்கண்டால் ஒதுங்கி விடவேண்டும் என  கேள்வி கேட்ட யானை உணர்ந்தது.

நாமும் ஆணவத்துடன் செயல் படக்கூடாது.அதே நேரம் ஆணவம் கொண்டவரிடம்  இருந்து விலகி விடவேண்டும்.

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

நல்லதோர் நீதிக்கதை.