அன்புடையீர்
வணக்கம்.
"சிறுவர் உலகம்"என்ற வலைப்பூ பற்றி சில வரிகள்.
பெரியம்மா,சித்தி,சித்தப்பா,அத்தை ,மாமா போன்ற உறவுகள் என்றால் என்ன என்று குழந்தைகளுக்கு
சொல்லி விளக்கவேண்டிய நிலை இன்று.அது மட்டுமன்றி தாத்தா,பாட்டி தனியாக ஒரு இடத்திலும்..
அம்மா,அப்பா ஒரு இடத்திலும்..நாம்..நம் குடும்பம்..(கணவன்,மனைவி,ஒரு குழந்தை)என தனியாகவும் இருக்கும்
காலகட்டம்...கூட்டுக்குடும்பக் காலங்கள் சிதைந்து விட்டது இப்போது.
இந்நிலையில் ...தாத்தா பாட்டிகளை அணைத்துக்கொண்டு..அவர்கள் மேல் கால் போட்டுக்கொண்டு ..இரவு படுக்கையில்
நாம் கேட்ட கதைகளை நம் குழந்தைகளுக்கு நம்மால் சொல்ல முடியவில்லை.
அதற்கு நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் சமாதானம் நேரமின்மை....ஆனால் உண்மையான காரணம் பல கதைகளை நாம் மறந்துவிட்டதே.
ஆகவேதான் இந்த "சிறுவர் உலகம்" என்ற வலைப்பூவின் மூலம் அவற்றை சொல்ல வருகிறேன்.
படியுங்கள்...குழந்தைகளை படிக்கச்சொல்லுங்கள்..நீங்களும் படித்து குழந்தைகளுக்கு சொல்லுங்கள்.
நன்றி.வணக்கம்.