Friday, February 14, 2025

6 எட்டு




 கந்தசாமி வாத்தியார் கரூர் பக்கத்தில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒனபதாம் வகுப்புக்கு தமிழ் வாத்தியாராக இருக்கிறார். அவரிடம் படித்த மாணவர்கள் பலர் இன்று பல துறைகளில் பெரும் புள்ளிகளாக இருகின்றனர்.

கந்தசாமி வாத்தியார் மிகவும் கண்டிப்பானவர்.ஒரே பள்ளியில் 35 வருடமாக இருப்பதால் அவர் மீது எல்லோருக்கும் தனி மதிப்பும் மரியாதையும் உண்டு.ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஆறு மாதங்கள் இருப்பதால் தலைமை ஆசிரியர் அவரை கூப்பிட்ட்டு ஐயா,இன்னும் 6 மாதங்கள் தான் உங்களூக்கு சர்வீஸ் இருப்பதால் மாணவர்களிடம் மிகவும் கண்டிப்பாக இருக்கவேண்டாம்.உங்கள் காலம் போல் இப்போது இல்லை. மாணவர்களை கோபமாக பேசினாலும் கண்டனத்திற்கு ஆளாக நேரிடும்.அதனல் ஜாக்கிரதையாக இருங்கள் என்றார்.

கந்தசாமி வாத்தியாருக்கு அன்று  போதாத காலம்.அவருடடைய வகுப்பில் விக்ரம் என்ற ஒரு பையன் படிக்கிறான்,நன்றாக படிப்பதில்லை.எப்பொழுதும் மற்றவர்களுடன் பேசிக்கொண்டே இருப்பான்.அவன் அன்று வீட்டு பாடங்களை முடிக்கவில்லை,அவனை இப்போது திருத்த முடியவில்லை என்றால் அவனது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்று அவரது உள் மனம்  சொல்ல"அவர் விக்ரமின் அரைக்கை சட்டையை சற்றே தூக்கி "எட்டு" போடுவது போல் ஒரு கிள்ளு கிள்ளினார்.மாணவன் மயக்கம்  அடைந்தான்.

விக்ரமை அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துசென்றனர்.அவனது பெற்றோருக்கும் காவல் துறையினருக்கும் விவரம் தெரிவிக்கப்பட்டது.

பள்ளியே அல்லோலப்பட்டது.என்ன செய்வது என்று தெரியாமல் கந்தசாமி வாத்தியார் தானே சரணடையும் நோக்கத்தில் காவல்நிலையம் வந்தார்.காவல் துறை அதிகாரி இல்லாததால் அருகில் இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தார்.

சிறிது நேரத்தில் அதிகாரி வர அவருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு வாத்தியார் நடந்ததைக் கூறினார்.

பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த அதிகாரி...தன் அரைக்கை சட்டையை சற்றே உயர்த்தி...அந்த கருமை நிற வடுவை  காண்பித்தார்

இந்த வடுவை பார்த்தீங்களா...இது எனக்கு நீங்க போட்ட எட்டு,,,என்னைத்தெரிகிறதா உங்களுக்கு..நான் தான் அருணாசலம்..உங்க பழைய மணவன்.ஒரு நாள்..நான் ..பக்கத்து பையன் பையிலிருந்து பணத்தை திருடிட்டேன் .அதை தெரிஞ்சிக்கிட்ட நீங்க கொடுத்த பரிசு.,.மேலும் நீங்கள் என்னிடம்  இனிமேல் நீ தப்பு பண்ணக்கூடாது,ஏதாவது செஞ்சா...அந்த நேரம் இந்த காயம் எப்படி ஏற்பட்டதுங்கிற எண்ணம் உனக்கு வரணும்.இந்த காயத்தால் ஏற்படப்போகும் வடு ...உன்னை ஒரு நேர்மையானவனாக மாற்றும்  என்று சொன்னீங்க..அன்னிக்கு நீங்க எனக்கு இந்த தண்டனை கொடுக்கலைன்னா...நான் இன்னிக்கு இப்படி ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியாக மாறியிருப்பேனான்னு தெரியாது.

நீ அருணசலமா.....ரொம்ப மகிழ்ச்சி என்றார்.வாத்தியார்.

ஐயா....அன்னிக்கு நான் நடந்துகிட்ட மாதிரி..ஒரு மாணவன் தப்பா நடந்துகிட்டு இருக்கான்..நீங்களும் அன்னிக்கு எனக்கு கொடுத்த அதே தண்டனையை கொடுத்திருக்கீங்க.அவன் பயத்திலே மயங்கி விழுந்திட்டான்.இது ஒரு பெரிய தவறாக என்று எனக்கு தெரியவில்லை,

உங்க மேலே ஏதவது புகார் வந்தா நான் பாத்துகிறேன்.நீங்க போங்க...கான்ஸ்டபிள் ...சாரை....நம்ம ஜீப்பிலே கொண்டு போய் வீட்டிலே விட்டுட்டு வா என்றார்,

இன்ஸ்பெக்டர் வாத்தியாரிடம் இன்றைய தலைமுறை தங்கள் ஆசிரியர்கள் சொல்வதைக்கேட்டு பொறுப்புடன் நடந்தால் எதிர்காலத்தில் சிறந்த குடிமகனாக திகழ்வார்கள் என்றார்.

உண்மைதான் உன்னைப்போல என்றார் கந்தசாமி வாத்தியார்.

Wednesday, February 12, 2025

5.நேர்மையின் வெற்றி

 



முனியன் 10 வயது சிறுவன்.அவனுக்கு தாய் மட்டும் இருக்கிறாள்.தந்தை முருகனின் சிறுவயதிலே காலமாகிவிட்டார்.முனியனின் அம்மா இரண்டு வீட்டில் வேலை செய்து வருகிறாள்.

முனியனின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் நிலக்கடலை வியாபாரம் செய்யும் ஒருபெரிய கடையில் வேலை பார்த்து வருகிறார்.அவர் முனிய்னிட்ம் நான் உன்னை நன் வேலை பார்க்கும்கடைக்கு அழைத்து செல்கிறேன்.அங்கு என்ன வேலை கொடுத்தாலும் செய்கிறாயா என்று கேட்டார்?.

முனியனும் சரி என்று சொல்ல அவர் அவனை தான் வேலை பார்க்கும் கடைக்கு அழைத்து சென்றார்.

அந்த கடையின் மேலதிகாரி அவனிடம் என் கடையில் பல சிறுவர்கள் வேலை பார்க்கிறார்கள் .அவர்கள் நாங்கக் கொடுக்கும் வேர்க்கடலைகளை சிறிய பொட்டலமாக போட்டு ஒரு பொட்டலம் இரண்டு ரூபாய் என்று விற்றுக்கொடுப்பார்கள்.அது மதிரி நீ செய்யவேண்டும்,போக்குவரத்து சாலையில் சென்று அங்கே வரும் வாகனங்களிடமும் விற்கலாம்.அது உன் சாமர்த்தியம்.நீ எத்தனை பொட்டலம் விற்கிறாயோ அதன் படி உன்னுடைய சம்பளம் இருக்கும் என்றார்.

முனியனும் வேலையை  ஒத்துக்கொண்டு மிகவும் நேர்மையுடன் கொடுத்த வேலையைசெய்துவந்தான்.

ஒரு நாள் முனியன் சாலையில் ஒரு கார் சிக்னலில் நின்றுகொண்டிருந்ததுஅவரிடம் நிலக்கடலலை வாங்கிக்கொள்ளும்படி கேட்டான்.அவர் அவனுக்கு பத்து ரூபாய் கொடுத்தார்.பதிலுக்கு அவன் அவரிடம் 5 நிலக்கடலை  பொட்டலங்களை கொடுத்தான்.அவர் வாங்கவில்லை.

முனியன் அவரிடம் ஐயா ' நான் என் முதலாளிக்கு நேர்மையாகவும்,உண்மையாகவும் இருக்க விரும்புகிறேன்,என் உழைப்புக்கு கிடைத்த பணம் போதும்.இனாமாக வாங்கினால் நான் அவ்ருக்கு செய்யும் துரோகம் ஆகும் என்றான்.காரில் இருப்பவர் அவனிடம்நீ உன் முதலாளியை பார்த்திருக்காயா என்று கேட்டார்.அவன் இல்லை என்றான்.

அடுத்தநாள் அவனுக்கு முதலாளி அழைப்பதாக சொல்ல அவருடைய அறைக்கு சென்றான்

அவனுக்கு ஆச்சிரியம் .அவன்காரில் பார்த்தவர் தான் அவனுடைய முதலாளி.அவர் அவனிடம் முனியா உன் நேர்மையை பாராட்டுகிறேன், இனிமேல்நீ வேர்க்கடலை விற்க போகவேண்டாம்..நான் என் கம்பெனியில் ஒரு வேலை கொடுக்கிறேன்,அதற்கு முதலில் நீ  மூன்று மாதம்  பயிற்சி எடுக்கவேண்டும்.அதன்பின் நீ வேலையில் சேரலாம் என்றார்.

முனியனும் அவர் சொல் படி கேட்டு அந்த கம்பெனியில் படிபடியாக உய்ர் பதவிகளை அடைந்து முன்னேறினான்.

நேர்மையும் உண்மையுமாக உழைத்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

Tuesday, February 11, 2025

4.உள்ளதைச் சொல்லும் கண்ணாடி

 





ரமேஷின் தாத்தா அடிக்கடி நிலைக்கண்ணாடியை பார்ப்பார்.பிறகு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்துவிடுவார்.

ரமேஷுக்கு ஆச்சரியம்.தாத்தா ஏன் அடிக்கடி கண்ணாடியை  உற்று உற்று பார்க்கிறார் என்று.அந்த கண்ணாடியில் அப்படி என்ன தான் இருக்கிறது..ஒரு வேளை மாயா ஜாலக் கண்ணாடியோ? அவனால் ஆவலை அடக்கமுடியவில்லை.

தாத்தாவை கேட்டான்

தாத்தா நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் கண்ணாடி சாதாரணக்கண்ணாடி தானே என்று கேட்டான்.ஆமாம் என்றார் தத்தா.

அதில் அப்படி என்ன தெரிகிறது என்றான்?

தாத்தா கூறினார், நான் பார்த்தால் என் முகம் தெரியும்,நீ பார்த்தால் உன் முகம் தெரியும்.

பின்னர் ஏன் நீங்கள் அடிக்கடி அதையே பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று வினவினான்.

தாத்தா சிரித்தார்.மேலும் தாத்தா கூறினார் இது சாதாரணகண்ணாடி தான்.ஆனால் அது தரும் பாடங்கள் நிறைய என்றார்,

ரமெஷுக்கு ஒன்றும் புரியவில்லை..பாடமா..?கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும் என்று கேட்க

தாத்தா கூறலானார்.:கண்ணாடி சொல்லும்முதல் பாடம்:

நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டடுவிட்டால் கண்ணடியில் அது தெரிகிறது.அந்தக் கறையை கண்ணாடி கூட்டுவதுமில்லை,குறைப்பதுமில்லை.உள்ளதை உள்ளபடி காட்டுகிறது.அதுபோல உன் சகோதரனிடமும் நணபனிடமும் எந்த அளவுக்கு குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் சுட்டிக்காட்டவேண்டும்,எதையும் மிகையாகவோ ஜோடித்தோ சொல்லக்கூடாது.

கண்ணாடி சொல்லும் இரண்டாவது பாடம்:

கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்போதுதான் உன் குறையைக்காட்டுகிறது,நீ அகன்றுவிட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும்,அதுபோல மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்டவேண்டும்.அவர் இல்லாதபோது முதுகுக்கு பின்னால்பேசக்கூடாது,

மூன்றாவது பாடம்

ஒருவருடைய முகக்கறையை கண்ணாடி காட்டியதால் அவர் அதன் மீது கோபப்படுவ்தில்லை.அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக்காட்டினால் அவர்மீது கோபமோ எரிச்சலோ படாமல் அந்த குறைகளை திருத்திக்கொள்ளவேண்டும்.

ரமேஷ் தாத்தாவை ஆரத்தழுவிக்கொண்டு கண்ணாடி உவமையில் இத்தனை கருத்துக்களா என்று ஆச்சிரியப்பட்டு நன்றி கூறினான்.

Wednesday, February 5, 2025

3. விரும்பி செய்யும் எந்த வேலையும் கடினமானதில்லை.





 முருகன் திண்டுக்கல் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான்.

அவனது தாய் தந்தை இருவரும் சிறிய அளவில் பாத்திரகடை ஒன்றை வைத்து வியாபாரம் செய்துவந்தனர்.

முருகனுக்கு படிப்பை விட வியாபாரத்தில் நாட்டம் அதிகம்.தினமும் சாயங்காலம் பள்ளி விட்டவுடன் கடைக்கு வந்து அவனது பெற்றோருக்கு வேண்டிய  உதவிகளை செய்வான்,

அவனுக்கு  பத்திரிகை  படிக்கும் பழக்கம் உண்டு, அதில் வரும் பெரிய பெரிய super market,departmental store  இவற்றை பார்த்துவிட்டு தன் கடையையும் இந்த மாதிரி கொண்டு வரவேண்டுமென்று நினைப்பான்.

அடுத்த நாள் பள்ளியில் டீச்சர் ஒவ்வொருவரிடமும் உங்கள் எதிர்கால ஆசை என்ன என்று கேட்டுக்கொண்டிருந்தார்.முருகன் முறை வந்ததும்  அவன் சொன்னான் ' எனக்கு படிப்பை விட வியாபாரம்' செய்ய  ஆசை. என.  பெற்றோரின் தொழிலை பெரிசு படுத்தவேண்டும் என்றான்.

டீச்சர் உடனே முருகா  நீ இப்பொழுதுபத்தாம் வகுப்பு படிக்கிறாய் .படிப்பிலும் ஓரளவுக்கு நீ நன்றாக படிக்கிறாய்,அதனால் இன்னும் இரண்டு வருடம்  படித்தால் பன்னிரண்டாவது முடித்துவிடுவாய்.அதற்கு பின் நீ உன் தொழிலை தொடரலாம்.

ஒவ்வொரு மாணவனும் அடிப்படை கல்வியான பன்னிரண்டாம் வகுப்பை முடித்திருக்கவேண்டும்.மேலும் நீ விருப்பபட்டால் அதற்கு பிறகு தொலைதூரகல்வி மூலம் நீ ஒரு டிகிரி வாங்கிவிடலாம்,அது உன் தொழிலை எவ்வாறு முன்னுக்கு கொண்டுவருவது பற்றி அறிய உதவும்.

விரும்பி செய்யும் எந்த தொழிலும் கடினமானதில்லை என்றார்.

Thursday, January 30, 2025

2. கல்விச் செல்வம்




 கருப்பன் ஒரு அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தான். அவன் ஒரு ஏழை.அவனது அப்பா அம்மா இருவரும் படிக்காதவர்ககள்.அரசாங்கம் அமைத்துள்ள ' 100நாள் வேலை' திட்டத்தில்  வேலை செய்பவர்கள். கருப்பனுக்கு வீட்டில் வழிகாட்ட யாரும் இல்லாததால் அவன் வகுப்பில் சுமாராகத்தன் படிப்பான்.

இதனால் அவனுடன்  படிக்கும் மற்ற சிறுவர்கள் அவனிடம் பேசுவதில்லை.அவனை குறை கூறிக்கொண்டேயிருப்பார்கள்.அதனால் வருத்தமடைந்த கருப்பன் வீட்டில் அவனது தந்தையிடம் கூறி அழுதான்.

அவனது தந்தை 'கருப்பா அழாதே.உன்னோடுயாரும் பேசாதபோது உன்னை குறைகூறும்போது உனக்கு கோபம் வரும்.அந்த சமயங்களில் நீ மௌனமாக இருப்பதே சிறந்தது.

மேலும் நீ படிக்கும் விஷயத்தில் கவன்ம் செலுத்து,புரியாதது எதுவும் இல்லை.மீண்டும் மீண்டும் படிக்க எல்லாம் புரியும்.வகுப்பில் முதல் மாணவனாக வருவதற்கு முயற்சி செய்.பின் உன் பின்னால் எல்லோரும் வருவார்கள் என்று அறிவுரை கூறினார்.

கருப்பனும் தந்தை சொல் கேட்டு நன்றாக படித்து வருடாந்திர தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்து வகுப்பில் சிறந்த மாணவனாக திகழ்ந்தான்.சக மாணவர்கள் அவனுடன் நணப்ர்களாக பழ்க ஆரமித்தனர்.

Tuesday, January 28, 2025

சிறுவ்ர் கதைகள்----- 1.எதிலும் குறை காணாதீர்கள்

 


1.எதிலும் குறை காணாதீர்கள்

---------------------------------------------------------

சிதம்பரத்திற்கு அருகே உள்ள ஒரு கிரமத்தில் சங்கரன் என்பவன் ஒரு ஹோட்டeலை நடத்தி வந்தான்.அந்த ஹோட்டல் நெடுஞ்சாலைக்கு அருகில் இருப்பதால் அவனுடைய ஹோட்டலுக்கு கூட்டம் அதிகம் வரும்.

சமீபகாலமாக அந்த ஹோட்டலின் இட்லியை விரும்பி சாப்பிடுபவர்கள் அதிகமாக இருந்தனர்.இட்லி மாவை அரைப்பதற்கு ஆட்கள் தேவைப்பட்டனர்.அடுத்த நாள்' ஆட்கள் தேவை' என விளம்பரம் செய்தான்.

விளம்பரத்தை பார்த்து ராமன் என்பவன் வந்தான்.அவனிடம் சங்கரன் ஒரு கிலோ அரிசியும் அதற்கு தேவையான உளுந்தும் கொடுத்து அரைக்க சொன்னான்.ராமன் அரைத்து முடித்தவுடன் இவனிடம் காண்பித்தான்.சங்கரன் உடனே அரைத்த பதம் போதாது 'வெண்ணெய்" போல் இருக்கவேண்டும் என்றான்.

இரண்டு முறை மீண்டும் மீண்டும் அரைத்தும் சங்கரன் திருப்தி அடையவில்லை.

மூன்றாம் முறையாக ராமன் உண்மையான வெண்ணையை கொண்டு வந்து காண்பித்தான்.அப்பொழுதும் சங்கரன் வெண்ணெய் போல் இருக்கவேண்டும் என்றான்.

உடனே ராமன் இந்த முறை நான் வெண்ணையைத்தான் கொண்டு வந்தேன்.அதுவும் மாவு என்று எண்ணி வேண்டுமென்றே குறை சொன்னீர்கள்.உங்கள் நோக்கம் குறை சொல்வதுதான் என்று தெரிந்து கொண்டேன்,இப்படிப்பட்ட ஒருவரிடம் நான் வேலை செய்ய விரும்பவில்லை என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்,

நாமும் எப்பொழுதும் ஒருவர் செய்யும் வேலையை குறை கூறிக்கொண்டே இருக்கக்கூடாது,

Friday, September 1, 2023

50.-உறுதி..முயற்சி..நம்பிக்கை

50 - உறுதி,முயற்சி,நம்பிக்கை 




சரவணன் ஒரு ஏழை விவசாயியின் மகன்.

ஒருநாள்,சரவணனின் மாமா அவனுக்கு ஒரு பேனா பரிசளித்தார்..பின் அவனிடம்  ‘நீ படித்து என்னவாகப்போகிறாய்  ?’என்று கேட்டார்.

அவன்  ‘கலைக்டர் ஆவேன்’ என்றான்.

அவன் மாமா அவன் பதிலைக் கேட்டு சிரித்துவிட்டு  ‘ நீ ஒரு ஏழை…உன்னால் எப்படி அவ்வளவு பெரிய பதவியை அடைய முடியும்’ என்றார். 

பள்ளிக்கு அழுதபடியே வந்தவனை பள்ளி தலைமை ஆசிரியர் பார்த்து,அவன் அழுவதின் காரணத்தைக் கேட்டார்.அவனும் தன் மாமா சொன்னதை சொல்லி ‘ஏன் சார் என்னால் கலைக்டர் ஆக முடியாதா?’ என்று கேட்டான்.

"கண்டிப்பாக முடியும்..நன்கு படித்து ..நேர்மையான வழியில்  உழைத்தால்..கலைக்டர் மட்டுமல்ல நீ எண்ணிய இலக்கை அடையலாம்.முதலில் நம்மால் முடியும் என்ற நம்பிக்கை வேண்டும்’ என்றார்.

அவர் கூறியதை மனதில் கொண்டு சரவணன் நன்கு படித்து எல்லா பரீட்சைகளிலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து கலைக்டர் பதவிக்கு வந்தான்.

இன்று ..அவன் படித்த பள்ளியில் ஆண்டுவிழா நிகழ்ச்சி அவன் தலைமையில் நடக்க இருக்கிறது.

நிகழ்ச்சியில் பேசியவன்.."மாணவர்களே! நம்மால் முடியாதது என்று எதுவுமே இல்லை.முதலில் நாம் ஒரு இலக்கை நிர்ணயித்து கொண்டு..அதை அடைந்தே தீருவேன்..என்ற நம்பிக்கையுடன் செயல் பட்டால் வெற்றி நிச்சயம்" என்றான்.

நாமும் நம் விரும்பிய வாழ்வை அடைய வேண்டுமானால் அதற்கான உறுதி, முயற்சி,நம்பிக்கை ஆகியவற்றுடன் செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.