பிரகாஷ் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன்,அவனது வீட்டில் அவனுடைய தாய் தந்தை,தாத்தா ஆகியோர் இருக்கின்றனர். அப்பாவும் அம்மாவும் வங்கியில் வேலை பார்க்கின்றனர்.தாத்தாவும் தாசில்தாராக வேலைபார்த்து ஓய்வு பெற்று பல வருடங்கள் ஆகிவிட்டன.
பிரகாஷ்க்கு தாத்தாவை ரொம்ப பிடிக்கும்.அவர் தான் சிறுவயதிலிருந்து அவனை வளர்த்தவர். அவர் சொல்லும் கதைகளை ஆர்வமுடன் கேட்பான்.பெரியவர்களிடத்தில் மிகவும்மரியாதையாக இருப்பான்.
அவனது அப்பாஅம்மா இருவரும் சேர்ந்து அவனது பள்ளி அருகே ஒரு அபார்ட்மென்ட் வாங்கியுள்ளனர்.அதில்நான்கு அறைகள் உள்ளன.ஒன்று அவனது அப்பா அம்மவுக்கு,ஒன்று அவனுக்கு,ஒன்று தாத்தாவுக்கு. வீட்டின் கிருகப்பிரவேசம் முடிந்து ஒருநாள் எல்லோரும் அந்த வீட்டிற்கு குடிபோனார்கள்
தாத்தாவிற்கு வயதாகிவிட்டதால் நடப்பதற்கு சிரமபட்டார். ஒரு நாள் அவர் தலையில் எண்ணெய் வைத்திருந்தார்.அவர் கையெல்லாம் எண்ணைய்.உடம்பு தள்ளாடியதால் கீழே விழாமல் இருக்க ஹாலில் உள்ள சுவற்றினை பிடித்துக்கொண்டு வந்தார்..
சுவற்றில் வரிசையாக அவரின் கைகளின் தடயங்கள் இருந்தன.அதைபார்த்த பிரகாஷின்அப்பா தன் தந்தையை கடிந்து கொண்டார்.
தாத்தாவுக்கு பிரகாஷின் அப்பா ஒரு ஊன்றுகோல் வாங்கிக்கொடுத்து இனிமேல் நீங்கள் சுவரைப் பிடிக்காமல் இந்த ஊன்றுகோலின் உதவியோடு நடக்கவேண்டும் என்றார். தாத்தாவும் அதன்படியே நடந்துகொண்டார்.
ஒருநாள் தாத்தாவுக்கு ஊன்றுகோல் வழுக்கி கீழே விழுந்து இடுப்பில் பலத்தக் காயம் ஏற்பட்டது.அறுவை சிகிச்சை செய்தும் பயனில்லாமல் இறந்து போனார்.பிரகாஷுக்கு ரொம்ப வருத்தம். தனக்கு கதைகள் சொல்ல யாருமில்லை என்று
தாத்தாவின் காரியங்கள் முடிந்த பின் பிரகாஷின் தந்தை அந்த வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கலாம் என்று ஒரு பெயின்டெரை வரவழைத்தார். அவரிடம் பிரகாஷ் ' இந்த ஹாலில் உள்ள என்னுடைய தாத்தாவின் கைவிரல் அடையாளங்களை எடுக்கக்கூடாது என்றான்,மேலும் இதைப்பார்த்தால் எனக்கு என்னுடைய தாத்தா என்னுடனே இருக்கிறமாதிரி தோன்றுகிறது என்றான்.பெயின்டரும் அவனுடைய உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுத்து தாத்தாவின் எண்ணெய் விரல்களுக்கு வண்ணம் பூசி அழகுபடுத்தினார்.அதைப்பார்த்த எல்லோரும் நன்றாக இருக்கிறது என்று பாராட்டினர்..
பிரகாஷ் தனது பள்ளியில் நடந்த ஓவியப் போட்டியில் "சுவற்றில் தாத்தாவின் விரல்கள்" என்ற தலைப்பில் ஒரு ஓவியம் வரைய அவனுக்கு முதல் பரிசு கிடைத்தது.
பிரகாஷ் அப்பாவிடம் ஓவியத்தைக் காண்பித்து " அப்பா நாம் தாத்தாவை சுவற்றைப் பிடித்துக்கொண்டு நடக்க அனுமதித்தால் கீழே விழுந்திருக்கமாட்டார்" இப்பவும் நம்முடன் இருந்திருப்பார் அல்லவா என்று கேட்டான்.
அப்பா மிகவும் வருத்தப்பட்டு தனது செயலுக்கு வருந்தினார்.
இதிலிருந்து நாம் உணர்வது சிறுவர்களே " வீட்டிலுள்ள பெரியோர்களிடம் நாம் பாசமாகவும் மரியாதையோடும் நடந்துகொள்ளவேண்டும் "என்பதே.