முருகன் செங்கல்பட்டு பக்கத்தில் பூஞ்சேரி எனும் கிராமத்தில் அவனது தாய் தந்தையருடன் வசிக்கிறான். அவன து தந்தை ஒரு சலவை தொழிலாளி.தாய் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்க்கிறார். முருகன் BE முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கிறான்,
அவன் ஒரு பெரிய கம்பெனியில் வேலைக்கு விண்ணப்பம் செய்ததில் முதல் இண்டர்வியூவில் பாஸ் செய்துவிட்டு இறுதி தேர்ந்தெடுப்பிற்காக அந்த கம்பெனியின் அதிகாரியை சந்திக்க வெளியில் உட்கார்ந்து கொண்டிருந்தான்.
அவனது படிப்பு பற்றிய விவரங்களை பார்த்த அதிகாரிக்கு அவன் மேல் நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டது.அவர் முருகனிடம் நீங்கள் கல்லூரியில் ஏதாவது scholarship வாங்கி படித்தீர்களா என்று கேட்டார்.எதுவும் இல்லை என்று முருகன் கூறினான். அப்படியென்றால் உங்கள் பெற்றோர்கள்தான் உங்களது கல்விக்கு உதவி செய்துள்ளார்கள் சரி தானே? என்றார் ஆம் என்று முருகன் ஒப்புக்கொண்டான்.
அடுத்ததாக அதிகாரி அவனிடம் உங்கள் தந்தை ஒரு சலவைத்தொழிலாளி தானே,நீங்கள் உங்கள் தந்தைக்கு என்றைக்காவது உதவி செய்திருக்கிறீர்களா என்று கேட்டார்.அதற்கு முருகனிடமிருந்து இல்லை என்று பதில் வந்தது.
பின்னர் அந்த அதிகாரி முருகனிடம் நீங்கள் இன்று வீட்டுக்கு போய் உங்கள் தந்தையின் கைகளை கழுவுங்கள் நாளைக்கு உங்கள் அனுபவத்தைக்கூறுங்கள் என்றார்.
வீட்டிற்கு திரும்பிய முருகன் அவனுடைய தந்தையிடம் அவருடைய கைகளை கழுவ அனுமதி கேட்டான் தந்தைஆச்சிரியப்பட்டு அவருடைய கைகளை நீட்டினார்.,அப்பாவின் கைகளைக் கழுவும்போது.முருகனின் கண்கள் குளமாயின.தந்தையின் கை கடினமாகவும்,காயங்களும் கொப்புளங்களும் நிறைந்ததாக இருந்தது.கைகளைக் கழுவும்போது ஏற்படும் வலி அவருடைய முகத்தில் தெரிந்தது..
தனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கவேண்டும் என்பதற்காக அவர் எவ்வளவு கடினமாக உழைத்து இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டான்.
அடுத்த நாள் காலை முருகன் மிகுந்த வருத்தத்தோடு அந்த அதிகாரியை போய் சந்தித்தான்.அவரிடம் நேற்று "ஓரு வாழ்க்கையின் உண்மையான பாடத்தை நான் கற்றேன்" என்றான். எனது தாய் தந்தையரின் முயற்சிகள் இல்லாமல் நான் இவ்வளவு தூரம் வந்திருக்கமுடியாது எனபதை புரிந்து கொண்டேன் என்றான்,
அதிகாரி அவனிடம் முருகா நீங்கள் உங்களுடைய தாய் தந்தையரின் அருமையை புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக இந்த செயலை உன்னை செய்யச் சொன்னேன் என்றார். மேலும் அவனுக்கு வேலையில் சேருவதற்கான ஆர்டர் வீட்டுக்கு வரும் என்றும் கூறினார்.
யாராக இருந்தாலும் அவர்கள் தாய்தந்தையரின் உழைப்பினை புரிந்துகொண்டு அவர்கள் மனம் கோணாதவாறு நடந்து கொள்ளவேண்டும்
அதுவே வாழ்க்கையில் முன்னேறுவதற்கான் முதல் படி.