Monday, February 17, 2025

8.பூமராங்




பாஸ்கருக்கு இருமல்,ஜுரம் அதிகமாக இருந்ததால் அருகிலுள்ள மருத்துவரிடம் சென்றார்.மருத்துவரும் அவரை நன்கு பரிசோதித்து விட்டு சில மருந்துகள் எழுதி கொடுத்தார்.பாஸ்கர் மருத்துவரிடம்  consulting fees எவ்வளவு என்று கேட்டார். அவர் ஐநூறு ரூபாய் என்றார்.பாஸ்கர் ஆச்சிரியப்பட்டார்..ஏன் இவ்வளவு அதிகம் என்று டாக்டரிடம் கேட்டார்.டாக்டர் உங்களுக்கு ஏன் இருமல் ஜுரம் வந்தது என்று பார்த்து பரிசோதித்து மருந்துகளை கொடுக்கவேண்டும் , அதனால் தான் ஐநூறு ரூபாய் வாங்குகிறேன் என்றார். பாஸ்கர் மனமில்லாமல் பணத்தை கொடுத்துவிட்டு வீட்டுக்கு திரும்பினார்.

அன்று மாலை டாக்டர் தன் காரில் வெளியே சென்றார்,கார் நடுவழியில் நின்றது.அருகிலுள்ளவர்களிடம் சொல்லி mechanic ஐ வரவழைத்தார்.வந்தது அவரிடம் காலையில் சிகிச்சைக்கு வந்தபாஸ்கர்.பாஸ்கர் பத்து நிமிடம் காரை பரிசோதித்துவிட்டு ஏதோ ஒரு இடத்தில் ஒரு தட்டு தட்டினார்.உடனே கார்  start ஆகி விட்டது.கூலி ஆயிரம் ரூபாய் கேட்டார்.

டாக்டர் ஆச்சிரியப்பட்டார்,ஒருதட்டு தட்டியதற்கு ஆயிரம் ரூபாயா என்றார்.பாஸ்கர் , டாக்டர் சார் நான் தட்டியதற்கு கூலி வேண்டாம்.ஆனால் எந்த இடத்தில் தட்டினால் கார் மூவ் ஆகும் என்று கண்டுபிடித்து தட்டினேன்,அதற்குதான் ஆயிரம் ரூபாய் என்றார்.

டாக்டருக்கு காலையில் தான் பாஸ்கரிடம் நடந்துகொண்டது ஞாபகம் வந்தது.

அவர்து செய்கை ' பூமராங்காய்' அவருக்கே திரும்பியது.


No comments: