Friday, September 1, 2023

50.-உறுதி..முயற்சி..நம்பிக்கை

50 - உறுதி,முயற்சி,நம்பிக்கை 




சரவணன் ஒரு ஏழை விவசாயியின் மகன்.

ஒருநாள்,சரவணனின் மாமா அவனுக்கு ஒரு பேனா பரிசளித்தார்..பின் அவனிடம்  ‘நீ படித்து என்னவாகப்போகிறாய்  ?’என்று கேட்டார்.

அவன்  ‘கலைக்டர் ஆவேன்’ என்றான்.

அவன் மாமா அவன் பதிலைக் கேட்டு சிரித்துவிட்டு  ‘ நீ ஒரு ஏழை…உன்னால் எப்படி அவ்வளவு பெரிய பதவியை அடைய முடியும்’ என்றார். 

பள்ளிக்கு அழுதபடியே வந்தவனை பள்ளி தலைமை ஆசிரியர் பார்த்து,அவன் அழுவதின் காரணத்தைக் கேட்டார்.அவனும் தன் மாமா சொன்னதை சொல்லி ‘ஏன் சார் என்னால் கலைக்டர் ஆக முடியாதா?’ என்று கேட்டான்.

"கண்டிப்பாக முடியும்..நன்கு படித்து ..நேர்மையான வழியில்  உழைத்தால்..கலைக்டர் மட்டுமல்ல நீ எண்ணிய இலக்கை அடையலாம்.முதலில் நம்மால் முடியும் என்ற நம்பிக்கை வேண்டும்’ என்றார்.

அவர் கூறியதை மனதில் கொண்டு சரவணன் நன்கு படித்து எல்லா பரீட்சைகளிலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து கலைக்டர் பதவிக்கு வந்தான்.

இன்று ..அவன் படித்த பள்ளியில் ஆண்டுவிழா நிகழ்ச்சி அவன் தலைமையில் நடக்க இருக்கிறது.

நிகழ்ச்சியில் பேசியவன்.."மாணவர்களே! நம்மால் முடியாதது என்று எதுவுமே இல்லை.முதலில் நாம் ஒரு இலக்கை நிர்ணயித்து கொண்டு..அதை அடைந்தே தீருவேன்..என்ற நம்பிக்கையுடன் செயல் பட்டால் வெற்றி நிச்சயம்" என்றான்.

நாமும் நம் விரும்பிய வாழ்வை அடைய வேண்டுமானால் அதற்கான உறுதி, முயற்சி,நம்பிக்கை ஆகியவற்றுடன் செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.