உஷாவும் ஸ்ரீனிவாசனும் Pandian Express ல் சென்னையில் இருந்து மதுரைக்கு அவர்களுடைய பெண் வீட்டுக்கு போவதற்காக ஏறினார்கள்.
உஷா சினிமா பாட்டு கேட்பதில் ஆர்வம் உள்ளவர்.அதனால் mobilட்e phone ல் பாட்டு கேட்டுக் கொண்டு வந்தார்.ஸ்ரீனிவாசன் ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
ஒரு சிறு ஸ்டேஷனில் வண்டி நின்றது..உஷா கணவனிடம் காபி வாங்க சொன்னாள்.அவரும் அங்கு காபியோட வந்த ஒரு சிறுவனிடம் இரண்டு காபி கொண்டுவா என்றார். அவன் காபியை கொடுத்துவிட்டு ரூபாய் நாற்பது வேண்டும் என்றான்,ஸ்ரீனிவாசனும் ரூபாய் 200/ நோட்டு ஒன்றை கொடுத்துவிட்டு மீதி பணத்துக்காக காத்திருந்தார், அதற்குள் வண்டி கிளம்பிவிட்டது.
ஸ்ரீனிவாசன் மிகவும் வருத்தப்பட்டார்.அவருடைய மனைவி உஷா அவருடைய கவனமின்மைக்கு அவரை கோபித்துக்கொண்டார்,ஸ்ரீனிவாசனும் தன்னையே நொந்துகொண்டு அமைதியாக இருந்தார்.
அடுத்து Trichy Junction வந்தது.அங்கு வண்டி அரைமணிநேரம் நிற்கும்.அப்பொழுது ஒருவர் ஓடிவந்து அவரிடம் "ஐயாநீங்கள் போன ஸ்டேஷனில் இரண்டு காபி வங்கினீர்களா? என்று கேட்டார்,ஸ்ரீனிவாசனும் ஆமாம் என்று சொல்ல,அவர் ஸ்ரீனிவாசனிடம் ரூபாய் 160/ கொடுத்து என் மகன் கொடுக்கசொன்னான் என்றார்.
ஸ்ரீனிவாசனுக்கு ஆச்சிரியமாக இருந்தது.ஸ்ரீனிவாசன் அவரிடம் நீங்கள் உங்களுடைய பையனை நன்றாக வளர்த்திருக்கிறீர்கள் என்று பாராட்டி பேசினார்,
உடனே பையனின் தந்தை "ஐயாநாங்கள் ஏழை குடும்பம் தான்.ஆனால் அதில் நேர்மையும் உண்மையும் இருக்கும்.என் இரண்டு பையன்களுக்கும் அதை சொல்லித்தான் வளர்த்திருக்கிறோம் என்றார். மேலும் உங்களைப்போல உள்ள பெரியவர்களின் ஆசீர்வாதத்தால்நன்றாக இருக்கிறோம் என்றார்,
முக்கியமாக செய்யும் வியபாரத்தில் நேர்மை இருக்கவேண்டும்.அப்பொழுதுதான் வாழ்நாளில் முன்னுக்கு வரமுடியும் என்று சொல்லி வள்ர்த்திருக்கிறோம் என்றார்,
நாம் நேர்மையாக நடந்துகொண்டால் அதற்காக கிடைக்கும் பரிசு பெருமதிப்புள்ளதாக அமையும்,
No comments:
Post a Comment