Friday, February 14, 2025

6 எட்டு




 கந்தசாமி வாத்தியார் கரூர் பக்கத்தில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒனபதாம் வகுப்புக்கு தமிழ் வாத்தியாராக இருக்கிறார். அவரிடம் படித்த மாணவர்கள் பலர் இன்று பல துறைகளில் பெரும் புள்ளிகளாக இருகின்றனர்.

கந்தசாமி வாத்தியார் மிகவும் கண்டிப்பானவர்.ஒரே பள்ளியில் 35 வருடமாக இருப்பதால் அவர் மீது எல்லோருக்கும் தனி மதிப்பும் மரியாதையும் உண்டு.ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஆறு மாதங்கள் இருப்பதால் தலைமை ஆசிரியர் அவரை கூப்பிட்ட்டு ஐயா,இன்னும் 6 மாதங்கள் தான் உங்களூக்கு சர்வீஸ் இருப்பதால் மாணவர்களிடம் மிகவும் கண்டிப்பாக இருக்கவேண்டாம்.உங்கள் காலம் போல் இப்போது இல்லை. மாணவர்களை கோபமாக பேசினாலும் கண்டனத்திற்கு ஆளாக நேரிடும்.அதனல் ஜாக்கிரதையாக இருங்கள் என்றார்.

கந்தசாமி வாத்தியாருக்கு அன்று  போதாத காலம்.அவருடடைய வகுப்பில் விக்ரம் என்ற ஒரு பையன் படிக்கிறான்,நன்றாக படிப்பதில்லை.எப்பொழுதும் மற்றவர்களுடன் பேசிக்கொண்டே இருப்பான்.அவன் அன்று வீட்டு பாடங்களை முடிக்கவில்லை,அவனை இப்போது திருத்த முடியவில்லை என்றால் அவனது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்று அவரது உள் மனம்  சொல்ல"அவர் விக்ரமின் அரைக்கை சட்டையை சற்றே தூக்கி "எட்டு" போடுவது போல் ஒரு கிள்ளு கிள்ளினார்.மாணவன் மயக்கம்  அடைந்தான்.

விக்ரமை அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துசென்றனர்.அவனது பெற்றோருக்கும் காவல் துறையினருக்கும் விவரம் தெரிவிக்கப்பட்டது.

பள்ளியே அல்லோலப்பட்டது.என்ன செய்வது என்று தெரியாமல் கந்தசாமி வாத்தியார் தானே சரணடையும் நோக்கத்தில் காவல்நிலையம் வந்தார்.காவல் துறை அதிகாரி இல்லாததால் அருகில் இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தார்.

சிறிது நேரத்தில் அதிகாரி வர அவருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு வாத்தியார் நடந்ததைக் கூறினார்.

பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த அதிகாரி...தன் அரைக்கை சட்டையை சற்றே உயர்த்தி...அந்த கருமை நிற வடுவை  காண்பித்தார்

இந்த வடுவை பார்த்தீங்களா...இது எனக்கு நீங்க போட்ட எட்டு,,,என்னைத்தெரிகிறதா உங்களுக்கு..நான் தான் அருணாசலம்..உங்க பழைய மணவன்.ஒரு நாள்..நான் ..பக்கத்து பையன் பையிலிருந்து பணத்தை திருடிட்டேன் .அதை தெரிஞ்சிக்கிட்ட நீங்க கொடுத்த பரிசு.,.மேலும் நீங்கள் என்னிடம்  இனிமேல் நீ தப்பு பண்ணக்கூடாது,ஏதாவது செஞ்சா...அந்த நேரம் இந்த காயம் எப்படி ஏற்பட்டதுங்கிற எண்ணம் உனக்கு வரணும்.இந்த காயத்தால் ஏற்படப்போகும் வடு ...உன்னை ஒரு நேர்மையானவனாக மாற்றும்  என்று சொன்னீங்க..அன்னிக்கு நீங்க எனக்கு இந்த தண்டனை கொடுக்கலைன்னா...நான் இன்னிக்கு இப்படி ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியாக மாறியிருப்பேனான்னு தெரியாது.

நீ அருணசலமா.....ரொம்ப மகிழ்ச்சி என்றார்.வாத்தியார்.

ஐயா....அன்னிக்கு நான் நடந்துகிட்ட மாதிரி..ஒரு மாணவன் தப்பா நடந்துகிட்டு இருக்கான்..நீங்களும் அன்னிக்கு எனக்கு கொடுத்த அதே தண்டனையை கொடுத்திருக்கீங்க.அவன் பயத்திலே மயங்கி விழுந்திட்டான்.இது ஒரு பெரிய தவறாக என்று எனக்கு தெரியவில்லை,

உங்க மேலே ஏதவது புகார் வந்தா நான் பாத்துகிறேன்.நீங்க போங்க...கான்ஸ்டபிள் ...சாரை....நம்ம ஜீப்பிலே கொண்டு போய் வீட்டிலே விட்டுட்டு வா என்றார்,

இன்ஸ்பெக்டர் வாத்தியாரிடம் இன்றைய தலைமுறை தங்கள் ஆசிரியர்கள் சொல்வதைக்கேட்டு பொறுப்புடன் நடந்தால் எதிர்காலத்தில் சிறந்த குடிமகனாக திகழ்வார்கள் என்றார்.

உண்மைதான் உன்னைப்போல என்றார் கந்தசாமி வாத்தியார்.

No comments: