"மிதிலா" குடியிருப்புக்ககு கீழே வள்ளி கீரை விற்கும் சப்தம் கேட்டது.
உடனே பர்வதம்மாள் கீழே போனாள்.வள்ளியிடம் அரைக்கீரை ஒரு கட்டு எவ்வளவு என்றாள்? வள்ளி இருபத்திஐந்து ரூபாய் என்றாள்.பர்வதம் அவளிடம் நீ எப்பொழுதும் எனக்கு இருபது ரூபாய்க்குத்தான் கொடுப்பாய்.இப்பொழுது என்ன வந்தது என்றாள்., உடனே இல்லை அம்மா மற்றகீரை என்றால் பரவாயில்லை அரைக்கீரை சுலபமாக கிடைக்காது என்றாள வள்ளி..அதெல்லாம் இல்லை என்று பலவந்தமாக அவளிடம் இருபது ரூபாய் கொடுத்துவிட்டு கீரையை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினாள் பர்வதம்.
சிறிது தூரம் சென்றதும் மீண்டும் வந்து வள்ளியிடம் ஏன் உன் முகம் வாட்டமாக இருக்கிறது . காலையில் ஒன்றும் சாப்பிடவில்லையா என்று வினவினாள்.
வள்ளி கண்ணீருடன் இல்லையம்மா...வீட்டில் அரிசி கூட இல்லை.இருந்தால் கஞ்சி போட்டு குடித்துவிட்டு வருவேன் என்றாள்.
பர்வதம் உடனே வள்ளியிடம் ஒரு ஐந்து நிமிடம் இங்கேயே இரு ,வருகிறேன் என்றாள்.திரும்பியவள் கையில் ஒருதட்டில் 4 இட்லி சாம்பாருடன் வள்ளியிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னாள்
வீட்டுக்கு வந்த பர்வதத்திடம் மகன் சரவணன், ஏம்மா நீகீரைக்கட்டுக்கு ஐந்து ரூபாய்க்கு பேரம் பேசினாய்.ஆனால் அவளுக்கு 4 இட்லி சாம்பார் கொடுக்கிறாய்.வெளியில் ஒரு இட்லி ஐந்து ரூபாய் தெரியுமா என்றான்.
பர்வதம் சரவணனிடம் முதலில் பேரம் பேசியது வியாபரம்.இரண்டாவது இட்லி கொடுத்தது மனித நேயம்.இது வேறு அது வேறு/இரண்டையும் ஒப்பிடாதே என்றாள்.
அம்மாவை பெருமிதத்துடன் பார்த்தான் சரவணன்..
No comments:
Post a Comment