மதுரைக்கு பக்கத்தில் நத்தம் என்ற ஊர் உள்ளது. அங்கு சிதம்பரம் என்பவர் ஊர்மக்களுக்கு தேவயான பணத்தை அதிக வட்டிக்கு கொடுத்துவந்தார்,
அதில்சின்னசாமியும் ஒருவர்.அவரால் வட்டியை தவறாது கொடுக்கமுடியவில்லை.சின்னசாமிக்கு சாந்தி என்ற ஒரு மகள் இருக்கிறாள், நன்கு படித்தவள்.ஊர் மக்களுக்கு உரம் வாங்குவது பற்றியும் நெல்லை விற்பதற்கு வேண்டிய உதவிகளையும் செய்பவள்.சிதம்பரத்திற்கும் அவருடைய கம்பெனியில் கணக்கு வழக்குகளை பார்த்து அதில் வரும் வருமானத்தில் அப்பா வாங்கின வட்டியை அடைத்து வந்தாள்.அவளுக்கு சிதம்பரம் அதிக வட்டி வாங்குவது பிடிக்காது.
சிதம்பரத்திற்கு சாந்தி மேல் ஒரு கண் இருந்தது,நன்கு படித்தவள்.கணக்கு வழக்குகளை நன்றாக பார்க்கிறாள். அவளை தமது பையனுக்கு திருமணம் செய்துவைக்கவேண்டும் என்று நினைத்தார்,
ஒருநாள் சிதம்பரம் சின்னசாமியை கூப்பிட்டு நீ மூன்று மதமாக வட்டி கட்டவில்லை.உன் மகளும் படிப்பிற்காக கம்பெனி பக்கம் வரவில்லை.ஆகையால் உனது மகளை என் பையனுக்கு திருமணம் செய்து விடலாம்.உனது கடனையும் ரத்து செய்துவிடுகறேன் என்றார்.சின்னசாமி அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.
சிதம்பரம் மேலும் கூறினார். நான் ஒர் போட்டி வைக்கிறேன்.அதில் உன் மகள் ஜெயிக்கவேண்டும் என்று போட்டியைபற்றி கூறினார்,
நான் இரண்டு கூழாங்கற்களை ஒரு பையில் போடுவேன்.ஒன்று வெள்ளை மற்றொன்று கருப்பு,உங்கள் மகள் அதில் ஒன்றை எடுக்கவேண்டும்.அவள் கருப்புக் கல்லை எடுத்தால் உங்களது எல்லா கடன்களும் ரத்து செய்யப்படும்.நீங்கள் உங்கள் மகளை எனது மகனுக்குதிருமணம் செய்து வைக்கவேண்டும்.அந்த கல்வெள்ளையாக இருந்தால் உங்கள் கடன் அப்படியே இருக்கும்.நீங்கள் உங்கள் மகளை என் மகனுக்கு திருமணம் செய்து கொடுக்கவேண்டாம் என்றார்,சின்னசாமியும் சாந்தியும் அதற்கு உடன்பட்டனர்,
சிதம்பரம் தோட்டத்திலிருந்த கூழாங்கற்கள் குவியலிலிருந்து இரண்டு கற்களை எடுத்தார்,யாருக்கும் தெரியாமல் இரண்டையுமே கறுப்பாக எடுததார்.இதை சாந்தி பார்த்துவிட்டாள். போட்டி ஆரம்பமாயிற்று.
சிதம்பரம் சாந்தியிடம் ஒரு கல்லை எடுக்கசொன்னார்,அவள் தந்திரத்தை தந்திரத்தால் வெல்லவேண்டும் என்று நினைத்து அவள் பையிலிருந்து ஒரு கல்லை எடுத்து அதை யாரும் பார்க்காதவண்ணம் கீழே கிடக்கும் கற்களோடு போட்டுவிட்டாள்,பிறகு நான் வருந்துகிறேன் ஒருகல் தவறுதலாக கீழே விழுந்துவிட்டது என்றாள்.
உடனே கூடியிருந்த பொதுமக்கள் பையில் இருப்பது கருப்புக்கல்.ஆகவே அவள் எடுத்தது வெள்ளைக்கல் என்று கூறினர்.சிதம்பரத்திற்கும் வேறு வழி இல்லை, அதை ஒத்துக்கொண்டார்.இவ்வாறாக சாந்தி தன்னை அந்த கந்து வட்டிக்கரரிடமிருந்து காத்துக்கொண்டாள்,தனது சாதுர்யத்தால் சிதம்பரத்தின் சூட்சியை வென்றாள்.
மேலும் அவள் தன் தந்தையிடம் நான் சம்பாதித்து உங்கள் கடனை அடைக்கிறேன் கவலை வேண்டாம் என்று ஆறுதல் கூறினாள்.
No comments:
Post a Comment