Saturday, July 5, 2025

17, நியாய தீர்ப்பு

 18- நியாய தீர்ப்பு






 திண்டுக்கல் என்ற ஊரில் மாரியப்பனும் அவனது தந்தையும்  வாழ்ந்து வந்தனர். மாரியப்பன் தன் வீட்டில் உள்ள தோட்டத்தில் விளையும் காய்கறிகளையும் பழங்களையும் விற்று பிழைத்துவந்தான்.

மாரியப்பன் தந்தைக்கு வயதாகிவிட்டதால் அவரால் அவனுக்கு ஒன்றும் உதவி செய்ய  முடியவில்லை.அவர் தான் சிறுக சிறுக சேர்த்துவைத்திருந்த ரூபாய் ஒரு லட்சத்தை அந்த ஊரில் அவரது நண்பரும் கணக்கு பிள்ளையுமான தாமோதரனிட ம்கொடுத்து கூடவே ஒரு கடிதமும் கொடுத்தார்.அந்த கடிதத்தில், ‘நீ விரும்பியதை என் மகன் அவனுடைய தொழிலுக்கு தேவை ஏற்படும்போது கொடு'என்று எழுதியிருந்தது.இந்த லெட்டரின் ஒரு நகலை மகனிடமும் கொடுத்திருந்தார்..

சில மாதங்களில் தந்தை இறந்துவிட மாரியப்பன் கணக்குபிள்ளையான தாமோதரனிடம் அப்பா கொடுத்த பணத்தை தன்னுடைய தோட்டத்தை சீரமைக்கவேண்டும் என்று கேட்டான்.அவர் அவனிட ம்ரூபாய் 25000/- மட்டுமே கொடுத்தார்.மாரியப்பன் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.இது நியாயமாக இல்லாததால் மாரியப்பன் இந்த வழக்கை தனக்கு தெரிந்த அந்த ஊர் நீதிபதியிடம் எடுத்து சென்றான்.

நீதிபதி தாமோதரனிடம் நீ மாரியப்பனுக்கு எவ்வளவு கொடுக்க விரும்புகிறாய் என்று கேட்டார்.அவர் ரூபாய் 25000/- என்று கூறினார்.தந்தை கொடுத்துள்ள லெட்டரை பார்த்துவிட்டு நீதிபதி தாமோதரனிட நீ எவ்வளவு எடுத்துக்கொள்ள விரும்புகிறாய் என்று கேட்டார்.அதற்கு தாமோதரன் ரூபாய் 75000/- என்றார்.

தந்தை கொடுத்த லெட்டரில் ‘ நீ விரும்பியதை கொடு’என்று எழுதியிருந்ததால்,அதன் படி நீ எடுத்துக்கொள்ள விரும்பியதுரூபாய் 75000/-அதுவே நீ விரும்பியத்தொகையாகும் ஆகவே ரூபாய் 75000/-ஐ மாரியப்பனிடம் கொடுத்துவிட்டு நீ ரூபாய் 25000/-ஐ எடுத்துக்கொள் என்று கூறி வழக்கை முடித்தார்..

Tuesday, May 20, 2025

16.தாய் தந்தை பேண்



 முருகன் செங்கல்பட்டு பக்கத்தில் பூஞ்சேரி எனும் கிராமத்தில் அவனது தாய்  தந்தையருடன் வசிக்கிறான். அவன து தந்தை ஒரு சலவை தொழிலாளி.தாய் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்க்கிறார். முருகன் BE முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கிறான்,

அவன் ஒரு பெரிய கம்பெனியில் வேலைக்கு விண்ணப்பம் செய்ததில் முதல் இண்டர்வியூவில் பாஸ் செய்துவிட்டு இறுதி தேர்ந்தெடுப்பிற்காக அந்த கம்பெனியின் அதிகாரியை சந்திக்க வெளியில் உட்கார்ந்து கொண்டிருந்தான்.

அவனது படிப்பு பற்றிய விவரங்களை பார்த்த அதிகாரிக்கு அவன் மேல் நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டது.அவர் முருகனிடம் நீங்கள் கல்லூரியில் ஏதாவது scholarship வாங்கி படித்தீர்களா என்று கேட்டார்.எதுவும் இல்லை என்று முருகன் கூறினான். அப்படியென்றால் உங்கள் பெற்றோர்கள்தான் உங்களது கல்விக்கு உதவி செய்துள்ளார்கள் சரி தானே? என்றார் ஆம் என்று முருகன் ஒப்புக்கொண்டான்.

அடுத்ததாக அதிகாரி அவனிடம் உங்கள் தந்தை ஒரு சலவைத்தொழிலாளி தானே,நீங்கள் உங்கள் தந்தைக்கு என்றைக்காவது உதவி செய்திருக்கிறீர்களா என்று கேட்டார்.அதற்கு முருகனிடமிருந்து இல்லை  என்று பதில் வந்தது.

பின்னர் அந்த அதிகாரி முருகனிடம் நீங்கள் இன்று வீட்டுக்கு போய் உங்கள் தந்தையின் கைகளை கழுவுங்கள் நாளைக்கு உங்கள்  அனுபவத்தைக்கூறுங்கள் என்றார்.

வீட்டிற்கு திரும்பிய முருகன் அவனுடைய தந்தையிடம் அவருடைய கைகளை கழுவ அனுமதி கேட்டான் தந்தைஆச்சிரியப்பட்டு அவருடைய கைகளை நீட்டினார்.,அப்பாவின் கைகளைக் கழுவும்போது.முருகனின் கண்கள் குளமாயின.தந்தையின் கை கடினமாகவும்,காயங்களும் கொப்புளங்களும் நிறைந்ததாக இருந்தது.கைகளைக் கழுவும்போது ஏற்படும் வலி அவருடைய முகத்தில் தெரிந்தது..

தனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கவேண்டும் என்பதற்காக அவர் எவ்வளவு கடினமாக உழைத்து இருக்கிறார் என்பதை  புரிந்து கொண்டான்.

அடுத்த நாள் காலை முருகன் மிகுந்த வருத்தத்தோடு  அந்த அதிகாரியை போய் சந்தித்தான்.அவரிடம் நேற்று "ஓரு வாழ்க்கையின் உண்மையான பாடத்தை நான் கற்றேன்" என்றான். எனது தாய் தந்தையரின் முயற்சிகள் இல்லாமல் நான் இவ்வளவு தூரம் வந்திருக்கமுடியாது எனபதை புரிந்து கொண்டேன் என்றான்,

அதிகாரி அவனிடம் முருகா நீங்கள் உங்களுடைய தாய் தந்தையரின் அருமையை புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக இந்த செயலை உன்னை செய்யச் சொன்னேன் என்றார். மேலும் அவனுக்கு வேலையில் சேருவதற்கான ஆர்டர் வீட்டுக்கு வரும் என்றும் கூறினார்.

யாராக இருந்தாலும் அவர்கள் தாய்தந்தையரின் உழைப்பினை புரிந்துகொண்டு அவர்கள் மனம் கோணாதவாறு  நடந்து கொள்ளவேண்டும்

அதுவே வாழ்க்கையில் முன்னேறுவதற்கான் முதல் படி.

Sunday, April 27, 2025

14.அச்சம் தவிர்



விக்னேஷ் தாய் தந்தையரருடன்  சென்னயில் வசிக்கிறான்,அவன் தந்தை ஒரு கம்பனியில் வேலை பார்க்கிறார்.தாய் ஒரு துணிக்கடையில் வேலை பார்க்கிறார்.விக்னேஷ் அருகிலுள்ள அரசுப் பள்ளியில் 8 ம் வகுப்பு படிக்கிறான்.

 விக்னேஷின் தாத்தா பாட்டி கும்பகோணத்தில் வசிக்கிறார்கள்.ஒவ்வொரு வருடமும் கோடைவிடுமுறையில் அவன் அப்பா அவனை கும்பகோணத்தில் விட்டுவிட்டு விடுமுறை முடிந்ததும் அவனை திரும்ப அழைத்துக்கொண்டு வருவார்.

இந்த முறையும் கோடைவிடுமுறையில் அவன் தந்தையோடு செல்வதாக இருந்தது,

அடுத்த நாள் அவனுடைய வகுப்பு ஆசிரியர் ஒவ்வொருவரிடமும் கோடைவிடுமுறையை எப்படி கழிப்பீர்கள் என்று கேட்டார்.விக்னேஷிடம் கேட்க அவன் என் தந்தையோடு கும்பகோணம் செல்வேன்,அங்கு என் தாத்தா பாட்டி இருக்கிறார்கள்.அங்கு பல கோவில்கள் உள்ளன.அவர்களுடன் அங்கு செல்வேன்,மேலும் என் தாத்தா வீடு மிகவு ம் பெரியது.தோட்டத்தில் மா,பலா,தென்னை  போன்ற மரங்கள் உள்ளன.தாத்தாவுடன் தோட்டத்துக்கு சென்று சிறு சிறு வேலைகள் செய்வேன் என்றான்.

வகுப்பு முடிந்தவுடன் அவனுடைய நண்பர்கள் அவனை கிண்டல் செய்தனர், எதற்கு கிண்டல்செய்கிறார்கள் என்று அவனுக்கு புரியவில்லை.அவர்களிடம் கேட்க அவர்கள்'விக்னேஷ் நீ எட்டாவதிலிருந்து ஒன்பதாவது போகப்போகிறாய்.உனக்கு தனியாக போகத்தெரியாதா' shame,,,, shame என்றனர்.விக்னேஷ்க்கு மிகவும் அசிங்கமாக போய்விட்டது,

வீட்டிற்கு வந்ததும் விக்னேஷ்  தன்  தந்தையுடம் அப்பாநீங்கள் இந்த தடவை என்னுடன் கும்பகோணம் வரவேண்டாம்.நான் பெரியவனாகிவிட்டேன் தனியே போகிறேன் என்றான்.அவன் மிகவும் அடம் பிடித்ததால் தந்தையும் சரி என்று சொல்லிவிட்டார்.

கிளம்பும்முன் அவனுக்கு கொஞ்சம்படபடப்பாகத்தான் இருந்தது.அம்மா விபூதி இட்டுவிட்டு பயப்படாதே, தைரியமாகச்செல் என்றாள்.தந்தை அவனது சட்டை பாக்கெட்டில் ஒரு கவர் வைத்தார், ஒன்றும் சொல்லவில்லை.

வண்டி கிளம்பியது.இரண்டு மூன்று ஸ்டேஷன் வரும்வரை அவனுக்கு பயமில்லை,வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தான்,நாலாம் ஸ்டேஷனில் 4 குண்டர்கள் ஏறினார்கள்.அவர்கள் வாட்டசாட்டமாக இருந்தார்கள்.அவர்களை பார்த்தவுடன் அவனுக்கு கைகால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டது.என்ன செய்வது என்று புரியவில்லை.

உடனே அப்பா ஒரு கவர் கொடுத்தாரே பிரிக்கவில்லயே என்று எண்ணி அதை எடுத்து பிரித்து பார்த்தான். அதில் 'விக்னேஷ் பயப்படாதே நான் அடுத்த பெட்டியில் தான் இருக்கிறேன் என்று எழுதியிருந்தார்,

அவன் ஓடிப்போய் தந்தையை இறுக கட்டிக்கொண்டு எனக்கு பயமாக இருக்கிறது என்றான்.;தந்தை உடனே ' அச்சம் தவிர்'அநாவசியத்திர்கு பயப்படக்கூடாது.ஒருவர் உருவத்தைப்பார்த்து பயம் கூடாது,அவர்கள் நல்லவர்களாகதான் இருப்பார்கள் என்று கூறி அவனுடன் அவன் இருந்த பெட்டிக்கு சென்றார்,மூவரையும் பார்த்து இவன் உங்கள் மூவரையும் பார்த்து பயந்து என்னிடம் வந்துவிட்டான் என்றார்.

மூவரும் தம்பி பயப்படாதே, நாங்களும் உனது அப்பா போலத்தான்.எதைக்கண்டும் யாரைக்கண்டும் பயப்படக்கூடாது என்று சொல்லி அவனை அவர்கள் பக்கத்தில் உட்காரச்சொன்னார்கள்,

விக்னேஷ் மனதிற்குள் எதற்கும் பயப்படாமல்  தைரியமாகத்தான் வரவேண்டும் என்றுகூறிக்கொண்டான்.

Saturday, April 19, 2025

15.புத்திசாலி தீர்ப்பு

  தீர்ப்பு




 


ஒரு செல்வந்தரிடம் 17 குதிரைகள் இருந்தன. அவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர்.அவர் நோய்வாய் பட்டதால் கீழ்கண்டவாறு உயில் எழுதி வைத்தார்.

இருக்கும் 17 குதிரைகளில் பாதி பெரியவனுக்கும்,மீதியில் 2/3 பங்கு இரண்டாம்மகனுக்கும்.இரண்டாம் மகனுக்கு கொடுத்த பின் மீதியில் 2/3 பங்கு   மூன்றாம்  மகனுக்கும்  எழுதி வைத்திருந்தார்.

மூன்று  மகன்களுக்கும்  ஒண்ணுமே புரியவில்லை.எப்படி குதிரைகளை பிரித்துக்கொள்வது என்று தெரியவில்லை..

உடனே அவர்கள் அந்த ஊர் நாட்டாண்மையிடம் சென்று அவருடைய உதவியை நாடினர்.நாட்டாண்மை புத்திசாலி.எல்லோருடைய சிக்கல்களையும் தீர்த்து வைப்பார்.

செல்வந்தரின் உயிலை பார்த்துவிட்டு நாட்டாண்மை கீழ்கண்டவாறு  கூறினார்

முதலில் தன்னிடம் இருக்கும் ஒரு குதிரையை கொண்டு வந்து நிறுத்தினார். மொத்தம் 17+1= 18 ஆயிற்று.முதல் மகனுக்கு 18 குதிரைகளில் பாதி அதாவது 9 குதிரைகளை  கொடுத்துவிட்டார்.

இண்டாம் மகனுக்கு மீதி 9 ல் 2/3 பங்கு அதாவது 6 குதிரைகள் அவனுக்கு கொடுப்பது என்று முடிவாயிற்று.

மூன்றாம் மகனுக்கு முதல் இரண்டு பேருக்கு கொடுத்த மீதியில் 2/3 பங்கு.அதாவது மீதியுள்ள 3 ல் 2/3 பங்கு, 2 குதிரைகளை அவனுக்கு கொடுப்பது என முடிவாகியது.

எஞ்சிய ஒரு குதிரை செல்வந்தருடையது. ஆகையால் அவர் அந்த குதிரையை எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றார்.

Sunday, April 13, 2025

13. சாதுர்யம்




 மதுரைக்கு பக்கத்தில் நத்தம் என்ற ஊர் உள்ளது. அங்கு சிதம்பரம் என்பவர் ஊர்மக்களுக்கு தேவயான பணத்தை அதிக வட்டிக்கு கொடுத்துவந்தார்,

அதில்சின்னசாமியும் ஒருவர்.அவரால் வட்டியை தவறாது கொடுக்கமுடியவில்லை.சின்னசாமிக்கு சாந்தி என்ற ஒரு மகள் இருக்கிறாள், நன்கு படித்தவள்.ஊர் மக்களுக்கு உரம் வாங்குவது பற்றியும் நெல்லை விற்பதற்கு வேண்டிய உதவிகளையும் செய்பவள்.சிதம்பரத்திற்கும் அவருடைய கம்பெனியில் கணக்கு வழக்குகளை பார்த்து அதில் வரும் வருமானத்தில் அப்பா வாங்கின வட்டியை அடைத்து வந்தாள்.அவளுக்கு சிதம்பரம் அதிக வட்டி வாங்குவது பிடிக்காது.

சிதம்பரத்திற்கு சாந்தி மேல் ஒரு கண் இருந்தது,நன்கு படித்தவள்.கணக்கு வழக்குகளை நன்றாக பார்க்கிறாள். அவளை தமது பையனுக்கு திருமணம் செய்துவைக்கவேண்டும் என்று நினைத்தார், 

ஒருநாள் சிதம்பரம் சின்னசாமியை கூப்பிட்டு நீ மூன்று மதமாக வட்டி கட்டவில்லை.உன் மகளும் படிப்பிற்காக கம்பெனி பக்கம் வரவில்லை.ஆகையால் உனது மகளை என் பையனுக்கு திருமணம் செய்து விடலாம்.உனது கடனையும் ரத்து செய்துவிடுகறேன் என்றார்.சின்னசாமி அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

சிதம்பரம்  மேலும் கூறினார். நான் ஒர் போட்டி வைக்கிறேன்.அதில் உன் மகள் ஜெயிக்கவேண்டும் என்று போட்டியைபற்றி கூறினார்,

நான்  இரண்டு கூழாங்கற்களை ஒரு பையில் போடுவேன்.ஒன்று வெள்ளை மற்றொன்று கருப்பு,உங்கள் மகள் அதில் ஒன்றை எடுக்கவேண்டும்.அவள் கருப்புக் கல்லை எடுத்தால் உங்களது எல்லா கடன்களும் ரத்து செய்யப்படும்.நீங்கள் உங்கள் மகளை எனது மகனுக்குதிருமணம் செய்து வைக்கவேண்டும்.அந்த கல்வெள்ளையாக இருந்தால் உங்கள் கடன் அப்படியே இருக்கும்.நீங்கள் உங்கள் மகளை என் மகனுக்கு திருமணம் செய்து கொடுக்கவேண்டாம் என்றார்,சின்னசாமியும் சாந்தியும் அதற்கு உடன்பட்டனர்,

சிதம்பரம் தோட்டத்திலிருந்த கூழாங்கற்கள் குவியலிலிருந்து இரண்டு கற்களை எடுத்தார்,யாருக்கும் தெரியாமல் இரண்டையுமே கறுப்பாக எடுததார்.இதை சாந்தி பார்த்துவிட்டாள். போட்டி ஆரம்பமாயிற்று.

சிதம்பரம் சாந்தியிடம் ஒரு கல்லை எடுக்கசொன்னார்,அவள் தந்திரத்தை தந்திரத்தால் வெல்லவேண்டும் என்று நினைத்து அவள் பையிலிருந்து ஒரு கல்லை எடுத்து அதை யாரும் பார்க்காதவண்ணம் கீழே கிடக்கும் கற்களோடு போட்டுவிட்டாள்,பிறகு நான் வருந்துகிறேன் ஒருகல் தவறுதலாக கீழே விழுந்துவிட்டது என்றாள்.

உடனே கூடியிருந்த பொதுமக்கள் பையில் இருப்பது கருப்புக்கல்.ஆகவே அவள் எடுத்தது வெள்ளைக்கல் என்று கூறினர்.சிதம்பரத்திற்கும் வேறு வழி இல்லை, அதை ஒத்துக்கொண்டார்.இவ்வாறாக சாந்தி தன்னை அந்த கந்து வட்டிக்கரரிடமிருந்து காத்துக்கொண்டாள்,தனது சாதுர்யத்தால் சிதம்பரத்தின் சூட்சியை வென்றாள்.

மேலும் அவள் தன் தந்தையிடம் நான் சம்பாதித்து உங்கள் கடனை அடைக்கிறேன் கவலை வேண்டாம் என்று ஆறுதல் கூறினாள்.


Tuesday, April 8, 2025

12.முயன்றால் முடியாதது இல்லை

 

8- முயன்றால் முடியாதது இல்லை


8-



 கந்தன் அனைத்துப் பாடங்களிலும்  எப்போதும் குறைந்த மதிப்பெண் பெற்று வந்தான்.

அந்த முறையும் அப்படித்தான்.

அதனால் அவனது அப்பா கோபித்துக்கொள்ள..அழுதுகொண்டே தன்  அறைக்குள் வந்து அமர்ந்தான்.

அப்போது அறையின் மூலையில் ஒரு சிலந்தி...வலை பின்னிக்கொண்டிருந்தது.அது அவனது கவனத்தை ஈர்க்க அதையே பார்த்துகொண்டிருந்தான்.

அது வட்டமாக சுவரின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு தன் எச்சிலால் வலை பின்னிக்கொண்டிருக்கும் போது ஒரு பக்கம் அறுந்தது. அதை சரி பண்ணிவிட்டு மேலும் தொடர்கையில் மற்றொரு முனை அறுந்தது.

இப்படி தொடர்ந்து அறுந்து கொண்டிருந்தாலும் தன் முயற்சியை விடாது அடுத்த 

அரை மணிநேரத்தில்  அது வலையை பின்னி முடித்து நடுவில் சென்று அமர்ந்தது.

அதை பார்த்ததும் மகிழ்ச்சியால் அவன் கை தட்டினான்.

அவன் பின்னால்..அவனுக்கே தெரியாமல் நின்றுகொண்டிருந்த அம்மா..'கந்தா..பார்த்தாயா..பல முறை வலைஅறுந்தும் ..தன்னால் முடியாது என்று விட்டுவிட்டு போகவில்லை சிலந்தி.நேரத்தை பற்றி கவலைப்படாமல் பல முறை முயன்று தன் வேலையை செவ்வனே முடித்துவிட்டது.அதற்கு காரணம் அதனுடைய விடாமுயற்சியே.கடவுள் ..அனைவருக்கும் மூளையை கொடுத்துள்ளான்..அதை சரியாக பயன்படுத்தி..விடாமல் முயன்று படித்தால் உன்னாலும் நல்ல மதிப்பெண்கள் வாங்கமுடியும்.

சிலந்தியின் விடாமுயற்சி உனக்கு ஒரு பாடமாக அமையும்' என்றாள்.

அடுத்து வந்த அனைத்து பாடங்களிலும் கந்தன் முதல் மதிப்பெண் பெற்றான் என்பதை நான் உங்களுக்கு கூறவேண்டுமா..என்ன?.

Tuesday, April 1, 2025

11. கெடுவான் கேடு நினைப்பான்

 

மதுரை பக்கத்தில் ஒரு கிராமத்தில் அண்ணன் தம்பி இருவர் இருந்தனர்.இருவருக்கும் வேலையில்லை.வறுமையில்வாடினர்,

அண்ண்ன் தம்பியிடம், தம்பி பக்கத்து ஊர் பண்ணையாரிடம் வேலைக்கு ஆள்  வேண்டும் என்று எனது நண்பன் வீரப்பன் கூறினான்,ஆகவே நான் அங்கு போய் முடிந்தால் வேலையில் சேர்ந்து விட்டு பின்னர் உன்னை அழைக்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.
பண்ணையாரிடம் வேலை கேட்க அவர் எனக்கு ஒரு ஆள் வேலைக்கு வேண்டும்.அவர் என்னுடன் ஒரு வருடம்  தங்கியிருக்கவேண்டும்,நான் சொல்லும் வேலையெல்லாம் செய்யவேண்டும்.சாப்பாடும் தங்குவதற்கு இடமும் தருகிறேன்,வருடக்கடைசியில் நான் சொன்ன மூன்று வேலைகளையும் சரியாக செய்தால்நிறைய பணம் கொடுப்பேன் .அப்படி இல்லையென்றால் நீ வெறும் கையுடன் தான் செல்லவேண்டும் என்றார்,
ஒரு வருடம் முடிந்தது.அண்ணன் கிளம்பும் முன் அவனிடம் முதல் வேலையாக இரண்டு ஜாடிகள் பண்ணையார் கொடுத்தார். ஒன்று பெரியது மற்றொன்று சிறிது.பெரிய ஜாடியை சிறிய ஜாடிக்குள் வைக்கவேண்டும் என்றார் அண்ணனிடம்.
அது முடியாத காரியம்,அதனால் அவன் செய்ய வேண்டிய முதல் வேலை தோல்வியடைந்தது.
இரண்டாவது வேலை ஒரு அறையில் ஈரமான நெல் உள்ளது.அதை வெளியே எடுத்து செல்லாமல்காய வைக்கவேண்டும்.அண்ணனால் அதுவும் இயலாத காரணத்தினால் இரண்டாவது வேலையையும் செய்யமுடியவில்லை,

மூன்றாவது வேலையாக பண்ணையார் கூறியது' என்  தலையின் எடையை மட்டும் சரியாக சொல்லவேண்டும். அண்ணனால் அதுவும் முடியவில்லை அதனால் அந்த வேலையும் தோல்வியில் முடிந்தது,

அண்ணன் மனது கஷ்டப்பட்டு வேலைக்கான ஊதியம் கிடைக்காமல் வெறும் கையுடன்ஊருக்கு திரும்பினான், தம்பியிடம் நடந்ததைக்கூறி வருத்தப்பட்டான்,.
தம்பி  அண்ணனிடம் அண்ணா, நீ கவலைப்படாதே, நான் போய் அந்த பண்ணையாருக்கு ஒருபாடம் கற்பிக்கிறேன் என்று சொல்லி பண்ணையாரின் ஊருக்கு வந்தான்,

பண்ணையாரை சந்தித்து அவருடைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒரு வருடம் முடிந்தபின் மூன்று வேலைகளைப்பற்றி கேட்டான்.

முதல் வேலைக்கு அவன் உடனே பெரிய ஜாடியை உடைத்து சிறிய ஜாடியில் போட்டான்.அவரிடம் அப்பொழுதான் சிறிய ஜாடிக்குள் பெரிய ஜாடியை வைக்கமுடிய்ம் என்றான் 
இரண்டாவது கேள்விக்கு பண்ணையாரின் நெல் வைக்கும் கூரையை பிய்த்து எறிந்தான்,அப்பொழுதுதான் சூரிய வெளிச்சம் பட்டு நெல் கதிர்கள் காயும் என்றான்.
பண்ணையார் இவன் வல்லவனாக இருக்கிறானே என்று யோசித்தார்.

மூன்றாவது கேள்விக்கு ஒரு  பெரிய பூசணிக்காயை கொண்டுவந்தான்,
அவரிடம் பண்ணையாரே உங்கள் தலையின் எடையும் இந்த பூசணிக்காயின் எடையும் ஒன்றாகத்தான் இருக்கும்.ஒரு தராசில் ஒரு பக்கம்பூசணிக்காயையும் ம்றுபக்கம் உங்கள் தலையை வெட்டி வைக்கிறேன் என்று கூறி ஒரு அரிவாளை எடுத்து வந்தான்,

பண்ணையார் தன் தவற்றை உண்ர்ந்தார்.தான் செய்தது தப்பு என்று கெஞ்சினார்..இனிமேல் ஏழை எளிய மக்களை ஏமாற்றுவதை விட்டு விடும்படி கூறி தன்  அண்ணனை ஏமாற்றிய பணத்தையும் தனக்கு சேரவேண்டிய பணத்தையும் சேர்த்து வாங்கிகொண்டு வெற்றியுடன் ஊருக்கு கிளம்பினான்.

பண்ணையாரும் அன்றிலிருந்து மற்றவர்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டார்.
கெடுவான் கேடு நினைப்பான் என்ற பழமொழி அவருக்காகவே உருவானது போல் உள்ளது.