Wednesday, February 12, 2025

5.நேர்மையின் வெற்றி

 



முனியன் 10 வயது சிறுவன்.அவனுக்கு தாய் மட்டும் இருக்கிறாள்.தந்தை முருகனின் சிறுவயதிலே காலமாகிவிட்டார்.முனியனின் அம்மா இரண்டு வீட்டில் வேலை செய்து வருகிறாள்.

முனியனின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் நிலக்கடலை வியாபாரம் செய்யும் ஒருபெரிய கடையில் வேலை பார்த்து வருகிறார்.அவர் முனிய்னிட்ம் நான் உன்னை நன் வேலை பார்க்கும்கடைக்கு அழைத்து செல்கிறேன்.அங்கு என்ன வேலை கொடுத்தாலும் செய்கிறாயா என்று கேட்டார்?.

முனியனும் சரி என்று சொல்ல அவர் அவனை தான் வேலை பார்க்கும் கடைக்கு அழைத்து சென்றார்.

அந்த கடையின் மேலதிகாரி அவனிடம் என் கடையில் பல சிறுவர்கள் வேலை பார்க்கிறார்கள் .அவர்கள் நாங்கக் கொடுக்கும் வேர்க்கடலைகளை சிறிய பொட்டலமாக போட்டு ஒரு பொட்டலம் இரண்டு ரூபாய் என்று விற்றுக்கொடுப்பார்கள்.அது மதிரி நீ செய்யவேண்டும்,போக்குவரத்து சாலையில் சென்று அங்கே வரும் வாகனங்களிடமும் விற்கலாம்.அது உன் சாமர்த்தியம்.நீ எத்தனை பொட்டலம் விற்கிறாயோ அதன் படி உன்னுடைய சம்பளம் இருக்கும் என்றார்.

முனியனும் வேலையை  ஒத்துக்கொண்டு மிகவும் நேர்மையுடன் கொடுத்த வேலையைசெய்துவந்தான்.

ஒரு நாள் முனியன் சாலையில் ஒரு கார் சிக்னலில் நின்றுகொண்டிருந்ததுஅவரிடம் நிலக்கடலலை வாங்கிக்கொள்ளும்படி கேட்டான்.அவர் அவனுக்கு பத்து ரூபாய் கொடுத்தார்.பதிலுக்கு அவன் அவரிடம் 5 நிலக்கடலை  பொட்டலங்களை கொடுத்தான்.அவர் வாங்கவில்லை.

முனியன் அவரிடம் ஐயா ' நான் என் முதலாளிக்கு நேர்மையாகவும்,உண்மையாகவும் இருக்க விரும்புகிறேன்,என் உழைப்புக்கு கிடைத்த பணம் போதும்.இனாமாக வாங்கினால் நான் அவ்ருக்கு செய்யும் துரோகம் ஆகும் என்றான்.காரில் இருப்பவர் அவனிடம்நீ உன் முதலாளியை பார்த்திருக்காயா என்று கேட்டார்.அவன் இல்லை என்றான்.

அடுத்தநாள் அவனுக்கு முதலாளி அழைப்பதாக சொல்ல அவருடைய அறைக்கு சென்றான்

அவனுக்கு ஆச்சிரியம் .அவன்காரில் பார்த்தவர் தான் அவனுடைய முதலாளி.அவர் அவனிடம் முனியா உன் நேர்மையை பாராட்டுகிறேன், இனிமேல்நீ வேர்க்கடலை விற்க போகவேண்டாம்..நான் என் கம்பெனியில் ஒரு வேலை கொடுக்கிறேன்,அதற்கு முதலில் நீ  மூன்று மாதம்  பயிற்சி எடுக்கவேண்டும்.அதன்பின் நீ வேலையில் சேரலாம் என்றார்.

முனியனும் அவர் சொல் படி கேட்டு அந்த கம்பெனியில் படிபடியாக உய்ர் பதவிகளை அடைந்து முன்னேறினான்.

நேர்மையும் உண்மையுமாக உழைத்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

நேர்மை தந்த வெற்றி - சிறப்பான கதை. பகிர்வுக்கு நன்றி.