ஓரு காட்டில் ஒரு ஆமையும்,ஒரு நத்தையும் மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தன.
துள்ளி குதித்து வந்தமுயல் ஒன்று அவர்களைப் பார்த்து ....'நான் எவ்வளவு வேகமாக துள்ளிக் குதித்து ஓடுகிறேன்.நீங்கள் இருவரும் பாவம் ..மெதுவாகத்தான் உங்களால் நகரமுடிகிறது.அதற்கு காரணம் உங்கள் உடலில் இருக்கும் கூடு தான்.அதன் சுமையால் தான் உங்களால் வேகமாகச் செல்ல முடியவில்லை. காட்டில் ஏதாவது அபாயம் வந்தாலும் நான் ஓடி தப்பி விடுவேன்.நீங்கள் தான் பாவம்..அதில் சிக்கிக்கொண்டு..மரணம் அடைவீர்கள்' என கேலி செய்தது.
அந்நேரம் மரங்களின் இடையிலிருந்து ஒரு ஓநாய் வெளிப்பட ....முயல் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள விரைந்து ஓடத்தொடங்கியது.ஓநாயும் அதை துரத்தியது.
ஆனால் ...ஆமையும் நத்தையும் தங்கள் தங்கள் உடலிலிருந்த கூட்டினுள் தங்களை செலுத்திக்கொண்டு ,,ஆடாது அசையாது அங்கயே நின்று...தங்களைக் காப்பாற்றிகொண்டன.
அடுத்தநாள் அந்த முயலைப் பார்த்த போது ஆமைசொல்லியது' எங்கள் முதுகில் ஓடு இருப்பதால் நாங்கள் அதனுள்சென்று உயிர் பிழைத்தோம்.நாங்கள் இருப்பதே ஓநாய்க்கு தெரியாது.ஆனால் பாவம்..நீ தான் பயந்து போய் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓட வேண்டியதாயிற்று.' என்றது.
முயலும் தேவையில்லாமல் ஆணவத்துடன் ஆமையுடனும்,நத்தையுடனும் நடந்து கொண்டதற்கு வருத்தம் தெரிவித்தது.மேலும் ஆணவம் ஒரு நாள் அழிவைத்தரும் எனவும் உணர்ந்தது.
நாமும் எந்த நேரத்திலும் கர்வம் கொள்ளக்கூடாது.ஆணவம் அழிவைத்தரும் என்று உணர வேண்டும்.
2 comments:
உண்மை...
நன்றி திண்டுக்கல் தனபாலன்.
Post a Comment